Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். புத்தூரில் வீடுகளுக்குள் நுழைந்து வன்முறை : 25 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் கைது : பலரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JUN, 2023 | 09:45 PM
image
 

யாழ்ப்பாணம், புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடுகள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரிய வருகிறது.

அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வன்முறை சம்பவம் தொடர்பிலான மேலும் பலரை கைது செய்ய அச்சுவேலி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158874

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:
பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடுகள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரிய வருகிறது.

பொலிஸாருக்கு அறிவித்தும்... நட வடிக்கை எடுக்காவிட்டால்,
பொதுமக்கள் தான்... களத்தில் குதிக்க வேண்டும். 

இந்தச் சம்பவத்துக்கு, வீரகேசரி ஏன் வன்முறை என்ற பதத்தை பாவித்துள்ளது.
அந்த இரு இளைஞர்கள் செய்தது மட்டும் நியாயமான செயலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பொலிஸாருக்கு அறிவித்தும்... நட வடிக்கை எடுக்காவிட்டால்,
பொதுமக்கள் தான்... களத்தில் குதிக்க வேண்டும். 

இந்தச் சம்பவத்துக்கு, வீரகேசரி ஏன் வன்முறை என்ற பதத்தை பாவித்துள்ளது.
அந்த இரு இளைஞர்கள் செய்தது மட்டும் நியாயமான செயலா?

அவர்கள் தானா குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தவில்லை அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரிய வருகிறது.

இலங்கைப் பொலிசார் பணங்களை வாங்கிவிட்டு எப்போதும் குற்றவாளிகளின் பக்கமே நிற்கிறார்கள்.

இதனால்த் தான் தேசியத் தலைவர் பொலிசாரின் உடைகளின் நிறத்தையே மாற்றினார்.

31 minutes ago, ஏராளன் said:
40 minutes ago, தமிழ் சிறி said:

பொலிஸாருக்கு அறிவித்தும்... நட வடிக்கை எடுக்காவிட்டால்,
பொதுமக்கள் தான்... களத்தில் குதிக்க வேண்டும். 

இந்தச் சம்பவத்துக்கு, வீரகேசரி ஏன் வன்முறை என்ற பதத்தை பாவித்துள்ளது.
அந்த இரு இளைஞர்கள் செய்தது மட்டும் நியாயமான செயலா?

அவர்கள் தானா குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தவில்லை அண்ணை

முறைப்பாடு செய்து மூன்று மாதமாகியும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியலையா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சம்பவம்

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

இந்தச் சம்பவத்துக்கு, வீரகேசரி ஏன் வன்முறை என்ற பதத்தை பாவித்துள்ளது.

செய்தது நியாயமோ, இல்லையோ - வன்முறைதானே அண்ணை.

இதை போய் அகிம்சை வழியில் வீட்டை உடைத்து போராடினர்கள் என்றா எழுத முடியும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தூர் தாக்குதல் ; 25 பெண்களுக்கு பிணை ; 06 ஆண்கள் விளக்கமறியலில்

Published By: DIGITAL DESK 3

01 JUL, 2023 | 10:27 AM
image
 

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என இரு இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான 25 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மல்லாகம் நீதவான் நீதிமன்றம் 06 ஆண்களை விளக்கமறியலில் வைக்க உத்திரவிட்டுள்ளது. 

புத்தூர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண்களின் படங்களை கணினி வரைகலை (கிராஃபிக்ஸ்) மூலம் ஆபாச படங்களாக மாற்றம் செய்து, அதனை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

இது தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு ஊரில் உள்ள இரு இளைஞர்களே அவ்வாறு பெண்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர் என குற்றம் சாட்டி, அந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களையும் வீட்டின் முன் நின்ற வாகனங்களையும் அடித்து உடைத்து அவற்றுக்கு தீ வைத்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முயன்ற போது, பொலிஸாருடன் முரண் பட்டு , பொலிஸார் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதனையடுத்து, அங்கு கூடியிருந்த ஊரவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விட்டு, காயமடைந்த இரு இளைஞர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை 25 பெண்களும், 06 ஆண்களுமாக 31 பேரை கைது செய்த பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 31 பேரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து 25 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்படடுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/158960

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஆண்களுக்கு சிறை பெண்களுக்கு பிணை????

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

அதென்ன ஆண்களுக்கு சிறை பெண்களுக்கு பிணை????

பெண்களை சிறையில் வைத்து பராமரிப்பதை விட,
ஆண்களை பராமரிப்பது சுலபம் என நீதிபதி நினைத்திருக்கலாம். 😂
சட்டம் இரு பாலாருக்கும் பொதுவானது என்பதை நீதவான் மறந்து விட்டார். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலி சம்பவம் : மேலும் 24 பேர் கைது !

news-12.jpg
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த குற்றச்சம்பவம் தொடர்பில் கைதானவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

கைதானவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 9 பேர் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணொருவரின் படங்களை கணினி ஊடாக செம்மைப்படுத்தி, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து கடந்த ஜுன் மாதம் 28ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானைநோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/261371

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.