Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடந்த ஒரே ஆண்டில் வெப்பத்தினால் 61,000 பேர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவு. காரணம், அங்குள்ள குளிர்

ஐரோப்பா நாட்டின் குளிர் அலைக்கு மக்கள் இறந்ததாக கேள்விபட்டிருப்போம். ஆனால், வெப்பத்துக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையில், மற்றொருபுறம் வெப்பம் தாங்காமல் மக்கள் செத்து மடிகின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்தாண்டு கோடைக் காலமான மே 30 முதல் செப்டெம்பர் 4 வரை வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை 18 முதல் 24 வரையில் மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலானோர் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்த பெண்கள். இளம் வயதினரை பொறுத்தவரை ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், இருதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஐரோப்பா யூனியனில் ஏற்பட்ட வெப்பத்தால் 70,000 பலியானதை தொடர்ந்து, கோடை காலங்களை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கடந்தாண்டு 61,000 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில் வெப்பம் தாங்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டை பொறுத்தவரை ஏற்கெனவே ஜூலை முதல் வாரம், உலகின் அதிக வெப்பம் பதிவான வாரமாக உலக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பா நாடுகளில் வெப்பத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் இருக்கும் வீடுகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று பரிசோதிப்பது, பொது இடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகள் அமைப்பது, பொது இடங்களில் குளிர்பானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில், இனிவரும் கோடைக் காலங்கள் ஐரோப்பா மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் சவாலானதாகவே அமையும்.

https://thinakkural.lk/article/262564

  • கருத்துக்கள உறவுகள்

வெக்கையை காரணம் காட்டி ஓவரா பென்சன் எடுக்கும் பேபி பூமர்சை போட்டு தள்ளி போட்டினம் போல் உள்ளது 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை

 

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.

ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:-
வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும். அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது.

மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.

வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார்.

வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003ஆம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/263977

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2023 at 14:14, ஏராளன் said:

ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவு. காரணம், அங்குள்ள குளிர்

ஐரோப்பா நாட்டின் குளிர் அலைக்கு மக்கள் இறந்ததாக கேள்விபட்டிருப்போம். ஆனால், வெப்பத்துக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையில், மற்றொருபுறம் வெப்பம் தாங்காமல் மக்கள் செத்து மடிகின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்தாண்டு கோடைக் காலமான மே 30 முதல் செப்டெம்பர் 4 வரை வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை 18 முதல் 24 வரையில் மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலானோர் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்த பெண்கள். இளம் வயதினரை பொறுத்தவரை ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், இருதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஐரோப்பா யூனியனில் ஏற்பட்ட வெப்பத்தால் 70,000 பலியானதை தொடர்ந்து, கோடை காலங்களை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கடந்தாண்டு 61,000 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில் வெப்பம் தாங்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டை பொறுத்தவரை ஏற்கெனவே ஜூலை முதல் வாரம், உலகின் அதிக வெப்பம் பதிவான வாரமாக உலக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பா நாடுகளில் வெப்பத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் இருக்கும் வீடுகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று பரிசோதிப்பது, பொது இடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகள் அமைப்பது, பொது இடங்களில் குளிர்பானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில், இனிவரும் கோடைக் காலங்கள் ஐரோப்பா மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் சவாலானதாகவே அமையும்.

https://thinakkural.lk/article/262564

இங்கு வெப்பம் அதிகரிக்கும் போது… பெரும்பாலான வயோதிபர்கள் பாதிக்கப் படுகின்றார்கள்.
அந்த நேரங்களில் கூடுதலான அவசரகால சிகிச்சை வாகனங்கள் வீதியில் ஓடித் திரியும்.
ஊரில் வெக்கை எனும் போது, மெல்லிய காற்று ஒன்று வீசிக் கொண்டிருக்கும்.
இங்கு மரங்கள் ஒன்றுமே அசையாமல், மூச்சு எடுக்க சிரமமாக இருக்கும்.
வருடத்தில் இப்படியான நாட்களை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தாலும்…. குளிர் காலத்துக்கு என்று கட்டப் பட்ட வீடுகளில், அந்த வெப்பத்தை தாக்குப் பிடிப்பது சவாலான விடயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இங்கு வெப்பம் அதிகரிக்கும் போது… பெரும்பாலான வயோதிபர்கள் பாதிக்கப் படுகின்றார்கள்.
அந்த நேரங்களில் கூடுதலான அவசரகால சிகிச்சை வாகனங்கள் வீதியில் ஓடித் திரியும்.
ஊரில் வெக்கை எனும் போது, மெல்லிய காற்று ஒன்று வீசிக் கொண்டிருக்கும்.
இங்கு மரங்கள் ஒன்றுமே அசையாமல், மூச்சு எடுக்க சிரமமாக இருக்கும்.
வருடத்தில் இப்படியான நாட்களை விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தாலும்…. குளிர் காலத்துக்கு என்று கட்டப் பட்ட வீடுகளில், அந்த வெப்பத்தை தாக்குப் பிடிப்பது சவாலான விடயம்தான்.

இப்ப எப்படி காலநிலை சூடுதானோ?  எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள் இருக்கும் சூடு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப எப்படி காலநிலை சூடுதானோ?  எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள் இருக்கும் சூடு

வாற மாதம் வரை (ஆவணி)

ஆனால் கண்கொள்ளாக் காட்சிகளுக்கும் வெப்பம் தேவை தானே?😜

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப எப்படி காலநிலை சூடுதானோ?  எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள் இருக்கும் சூடு

மே மாதத்தில் இருந்து, ஒக்ரோபர் மாதம் வரை வெப்பமான மாதங்கள்.
அதிலும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் அதிக வெப்பம் உடையவையாக இருக்கும்.
எண்ணி... ஒரு 10 - 15 நாள், 30 பாகைக்கு மேல்  35 பாகை வரை செல்லும்.
அந்த நேரங்களில்... வயோதிபர்கள், இதயம் பலவீனமானவர்கள் 
மூச்சு எடுக்க சிரமப் படுவதுடன், இரத்த அழுத்தமும் அதிகரித்து காணப்படும்.
(உக்ரைன் திரியை... வாசிக்கிற மாதிரி.... கற்பனை பண்ணுங்கள்) 😂 

அப்படியான காலங்களில்... வீதியால், அடிக்கடி அவசர சிகிச்சை வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

இங்குள்ள வீடுகள் குளிரை தாங்கக்  கூடிய மாதிரி கட்டப் பட்டுள்ளதால்,
சிறு வெப்பம் வெளியில் இருந்து உள்ளே வந்தாலும், அதனை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.
அதனால்... சூரியன் உதிக்க முன் அதிகாலையிலேயே... ஜன்னல்களை திறந்து,
வீட்டை குளிர்மையாக்கி விட்டு, சூரிய ஒளி உள்ளே படாதவாறு பூட்டி இருப்பார்கள்.
ஜேர்மனியில்... குளிரூட்டி (AC), மிக அரிதாகவே வீட்டில் வைத்திருப்பார்கள். 
குறிப்பிட்ட  ஓரிரு நாட்களுக்காக குளிரூட்டியை  பொருத்துவதை மக்கள் விரும்புவதில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மே மாதத்தில் இருந்து, ஒக்ரோபர் மாதம் வரை வெப்பமான மாதங்கள்.
அதிலும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் அதிக வெப்பம் உடையவையாக இருக்கும்.
எண்ணி... ஒரு 10 - 15 நாள், 30 பாகைக்கு மேல்  35 பாகை வரை செல்லும்.
அந்த நேரங்களில்... வயோதிபர்கள், இதயம் பலவீனமானவர்கள் 
மூச்சு எடுக்க சிரமப் படுவதுடன், இரத்த அழுத்தமும் அதிகரித்து காணப்படும்.
(உக்ரைன் திரியை... வாசிக்கிற மாதிரி.... கற்பனை பண்ணுங்கள்) 😂 

அப்படியான காலங்களில்... வீதியால், அடிக்கடி அவசர சிகிச்சை வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

இங்குள்ள வீடுகள் குளிரை தாங்கக்  கூடிய மாதிரி கட்டப் பட்டுள்ளதால்,
சிறு வெப்பம் வெளியில் இருந்து உள்ளே வந்தாலும், அதனை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.
அதனால்... சூரியன் உதிக்க முன் அதிகாலையிலேயே... ஜன்னல்களை திறந்து,
வீட்டை குளிர்மையாக்கி விட்டு, சூரிய ஒளி உள்ளே படாதவாறு பூட்டி இருப்பார்கள்.
ஜேர்மனியில்... குளிரூட்டி (AC), மிக அரிதாகவே வீட்டில் வைத்திருப்பார்கள். 
குறிப்பிட்ட  ஓரிரு நாட்களுக்காக குளிரூட்டியை  பொருத்துவதை மக்கள் விரும்புவதில்லை. 🙂

அப்ப வெக்கேசன் ஒன்ற எடுக்க வேண்டியதுதானே கன பேர் ஊர் பக்கம் சுத்துறாங்களே முகநூலில் பார்த்து இருப்பீங்களே 🤗

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அலை முடிஞ்சுது. எனி வெப்ப அலை. 

எல்லாத்திற்கும் இவங்கள் தான் காரணம். நவீனத்துவம்.. என்று இயற்கையை அழிச்சு அழிச்சு.. கடைசியில.. பூமியையும் தரிசாக்கிட்டுத்தான் மொத்தமாக அடங்குவாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப வெக்கேசன் ஒன்ற எடுக்க வேண்டியதுதானே கன பேர் ஊர் பக்கம் சுத்துறாங்களே முகநூலில் பார்த்து இருப்பீங்களே 🤗

முகநூலில்... அவர்கள் போடும் படங்களைப்  பார்க்க ஆசையாகத்தான் உள்ளது.
ஆனால் நான்... அடிக்கடி வைத்தியசாலை, தெரப்பி என்று செல்ல வேண்டி இருப்பதால் 
இப்போதைக்கு வர முடியாது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2023 at 12:42, தமிழ் சிறி said:

முகநூலில்... அவர்கள் போடும் படங்களைப்  பார்க்க ஆசையாகத்தான் உள்ளது.
ஆனால் நான்... அடிக்கடி வைத்தியசாலை, தெரப்பி என்று செல்ல வேண்டி இருப்பதால் 
இப்போதைக்கு வர முடியாது. 🙂

ம் சிகிச்சையை எடுங்கள் ஊர் வரலாம் ஆறுதலாக 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.