Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் இருந்து எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதம்!

இந்தியாவில் இருந்து எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த விவாதமானது நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1339088

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் இந்திய விஜயத்தின்போது சில வேளைகளில் இது கைச்சாத்திடப்படலாம். வேதாரணியத்தில் இருந்து கொழும்புக்கும் , திருகோணமலைக்கும் இடையே குழாய் அமைப்பது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதன்மூலம் அங்கிருந்து எண்ணெயையும் , LP காஸ் உம கொண்டுவருவதட்கான திடடமே அது.

அப்படி வரும்போது இலங்கை இன்னும் இந்தியாவின் கைகளுக்குள் செல்லும். வட கிழக்கு விமான சேவை, கப்பல் சேவை என இந்தியா மும்முரமாக செயட்பட்டுக்கொண்டிருக்கிறது.

தலை மன்னாருக்கும் ராமேஷ்வரத்துக்கும் இடையே பாலம் அமைப்பதட்கு முயட்சித்தாலும் சிங்கள தீவிரவாதிகளின் தீவிர எதிர்ப்பால் அது இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

ரணிலின் இந்திய விஜயத்தின்போது சில வேளைகளில் இது கைச்சாத்திடப்படலாம். வேதாரணியத்தில் இருந்து கொழும்புக்கும் , திருகோணமலைக்கும் இடையே குழாய் அமைப்பது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதன்மூலம் அங்கிருந்து எண்ணெயையும் , LP காஸ் உம கொண்டுவருவதட்கான திடடமே அது.

அப்படி வரும்போது இலங்கை இன்னும் இந்தியாவின் கைகளுக்குள் செல்லும். வட கிழக்கு விமான சேவை, கப்பல் சேவை என இந்தியா மும்முரமாக செயட்பட்டுக்கொண்டிருக்கிறது.

தலை மன்னாருக்கும் ராமேஷ்வரத்துக்கும் இடையே பாலம் அமைப்பதட்கு முயட்சித்தாலும் சிங்கள தீவிரவாதிகளின் தீவிர எதிர்ப்பால் அது இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இப்ப மட்டும் சொப்பன சுந்தரியை யார் வச்சி  இருக்கார் சைனாவும் , இந்தியாவும் தானே 

இந்த நாட்டுக்கு நல்லது நடக்க இந்த விடாக்கண்டனுகள் விடமாட்டானுகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப மட்டும் சொப்பன சுந்தரியை யார் வச்சி  இருக்கார் சைனாவும் , இந்தியாவும் தானே 

விட்ட விடியங்காத்தால செக்ஸியான கருத்தெல்லாம் வாசிக்க வேண்டிக்கிடக்கு....
எதுக்கும் நாம அப்படிக்கா போவம்....

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!  

  • கருத்துக்கள உறவுகள்

குழாய் இணைப்பின் ஊடான எரிபொருள் விநியோக திட்டம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

Published By: DIGITAL DESK 3

14 JUL, 2023 | 10:55 AM
image
 

(எம்.மனோசித்ரா)

இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள குழாய் இணைப்பின் ஊடான எரிபொருள் விநியோக திட்டம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து திருகோணமலைக்கு குழாய் இணைப்பின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கும், பின் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கான விநியோகத்தை முன்னெடுப்பதற்கும் இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்னை வலுசக்தி மையத்திற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தைக் கருத்திற் கொண்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் இரு வழி விநியோகம் குறித்து ஆராயுமாறு இந்த பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி, உள்நாட்டு எரிவாயு முனையங்களுக்கான குழாய் இணைப்புகள் ஆகியவற்றின் எதிர்கால வளர்ச்சிகள் என்பன பிராந்திய எரிபொருள் மற்றும் எரிவாயு ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டும், இரு நாடுகளின் ஆற்றல் தேவைகளைக் கருத்திற் கொண்டும் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைதிட்ட சாத்தியக்கூறு, தொழில்நுட்ப தேவைகள் ஆகியவை  திட்ட நோக்கத்தை இறுதி செய்வதற்கு முன் மதிப்பிடப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 

இந்திய உயர்ஸ்தானிகரலாய உயர் அதிகாரிகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம், இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. உள்ளிட்டவற்றின் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/159982

  • கருத்துக்கள உறவுகள்

 

அறிவிக்கப்படாத, இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கையின்  வடக்கு-கிழக்கு ..

ராசபக்ஸக்களின் மீள் எழுச்சியுடன், தெற்கு சீனாவுக்கு ? 

மேற்கு என்ன செய்யப்போகிறது? 

ரணிலின் ஆயுள் விருத்திக்காக பூசை செய்யுமோ ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தன் கையை விட்டுப்போகாமல் தனக்குள் வைத்திருப்பதற்காக இந்தியா பகீரதபிரயத்தனம் செய்யுது. ஆனால் ஆட்டக்காரி இலங்கை, வாங்குவதை வாங்கிக்கொண்டு சீனாவோடு சல்லாபம்! ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் ஒரே நேரத்தில் சமாளிப்பதில் பலே கில்லாடி. பாவம் இந்தியா. எல்லாவற்றையும் இழந்து இலங்கை  சீனாவோடு சல்லாபிப்பதை பார்த்து எதுவும் செய்ய முடியாமல்  ஏமாற்றம் தாங்க முடியாமல் மௌனமாய் அழும். அப்போ தமிழரின் அருமை புரியும். ஆனால் எதுவும் அதன் கையை விட்டு விலகிப்போயிருக்கும், நெருக்கப்படும்போது தன்னை பாதுகாப்பதற்காக  உதவி கேட்டு, தேடி பரிதவிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

விட்ட விடியங்காத்தால செக்ஸியான கருத்தெல்லாம் வாசிக்க வேண்டிக்கிடக்கு....
எதுக்கும் நாம அப்படிக்கா போவம்....

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!  

நான் என்ன அப்படியா எழுதி இருக்கன். சாமி😛😛

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.