Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீவிரமடையும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: சிக்கலில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ன கூறி வருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (14.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறிள்ளதாவது, கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார்.

தீவிரமடையும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: சிக்கலில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன | Saba Gukadas Chatal On Kamal Gunaratne

நம்பத் தயார் இல்லை

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆட்சியாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற அநீதிக்கு ஆட்சியாளர்களினால் நீதி கிடைத்த வரலாறு இருக்கிறதா?

நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பை மதித்து நடந்த சந்தர்ப்பம் உண்டா? உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களின் மூலம் நீதி கிடைத்ததா?

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள் நாட்டில் நீதி கிடைக்கும் என நம்பத் தயார் இல்லை முழுமையான நம்பிக்கையை இழந்த பின்னர் சர்வதேச நீதியைக் கோரி உள்ளனர்.

தீவிரமடையும் கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: சிக்கலில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன | Saba Gukadas Chatal On Kamal Gunaratne

போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம்

 

இறுதிப் போரில் அரச படைகள் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலைகள் யாவற்றுக்கும் பக்கச் சார்பற்ற விசாரணை நடப்பதாக இருந்தால் கமால் குணரட்ன உட்பட்ட குழுவினர் போர்க்குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளதால் பிதற்றுகிறார் பாதுகாப்பு செயலாளர். 

ஏப்ரல் 21 படுகொலைக்கு கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கதவினை தட்டினார் என்பதைக் குறுகிய காலத்தில் கமால் மறந்து விட்டாரா?

கர்தினால் உள் நாட்டில் நீதி கிடைக்காமையால் தான் சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டார் என்பதை உலகமே அறியும் கமாலின் கருத்தைப் பார்த்தால் கர்தினால் சிறுபிள்ளைத் தனமாகவா நடக்கிறார்? என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/golden-gate-kalyani-bridge-peliyagoda-1689352689?itm_source=parsely-top

  • கருத்துக்கள உறவுகள்

மேட்குலக நாடுகள் இலங்கை மனித உரிமைகள், போர்க்குற்ற மீறல்கள் போன்றவற்றை நேர்மையுடன் கருத்தில் கொள்ளும் வரைக்கும் இவர்களுக்கு ஒன்றுமே நடக்காது என்று நன்றாக தெரியும்.

கொசோவோ போர்க்குற்றவாளியாக மேலாஸோவிக் போன்றோரை குறுகிய காலத்தில் கைது செய்து தண்டனை வழங்கினார்கள். அவர்கள் ரஸ்சிய சார்பு அரசு என்பதால் அப்படி செய்தார்கள்.

இவர்களுக்கு இலங்கையில் அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலும், இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாலும் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்ச தேவை இல்லை.

எனவே ஆறுதலுக்காக இப்படி பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் திரியலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார்.

இது நம்மை நாமே ஆறுதல் படுத்தும் மோசமான கற்பனை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, satan said:

இது நம்மை நாமே ஆறுதல் படுத்தும் மோசமான கற்பனை!

உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை புதைகுழி களை பார்த்தாச்சு என்ன நடந்து இருக்கிறது செம்மணியையும் இப்படித்தான் சொன்னாங்க 

இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலிப்பதை தவிர வேறு ஒன்றும் எனக்கு தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா இந்தச் சனம் மேற்கை நம்புகிறது ? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

இது நம்மை நாமே ஆறுதல் படுத்தும் மோசமான கற்பனை!

முதலில் அர்த்தமற்று உளறுவதை அரசியல்வாதிகளும், அண்டப்புழுகுத் தலைப்புப் வைப்பதை ஊடகங்களும் கைவிட்டு யதார்த்தத்தை மக்களிடம் கொண்டுசென்று விழிப்புணர்வூட்டி நெறிப்படுத்த வேண்டும். வெறுமனே உசுப்பெத்தும் தலைப்பளால் எதையும் காணமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.