Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!

மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் ”நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வல் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.

இந்த கூட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று சொன்னது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்துவது பற்றி அவர் பேசியிருந்தார்.

இதன்போது நான் ”தற்போது கொண்டு வந்திருக்கின்ற தனிநபர் சட்டமூலத்திற்கு அமைவாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என சுட்டிக்காட்டினேன்.

எனினும் தேர்தல் இப்போது தேவையில்லை அதிகார பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் நீங்கள் இந்த இரண்டிலே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் ஒன்று தேர்தல் அல்லது அதிகாரங்கள் பகிர்வது  இரண்டையும் ஒரே நேரத்தில் கேற்க முடியாது என திட்டவட்டமாகக் கூறினார்.

இது ஒரு முரண்பட்ட கருத்து அல்ல இரண்டும் ஒரே திசையில் தான் இருக்கிறது அப்படி இருக்கின்ற போது நீங்கள் ஏன் ஒன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என சொல்கிறீர்கள் என்று நான் அவரோடு வாக்குவாதப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார் தேர்தல் தேவையில்லை அதிகார பகிர்வு பற்றி பேசுவது தான் முக்கியம் என்றும் கூறினார்.

அந்தக் கருத்தோடு நாங்கள் உடன்படவில்லை ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சித் தலைவர்களும் அங்கே இருக்கின்ற போது அவர்களின் அனுமதியோடு நான் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதை மறுத்துரைத்தேன்.

பல வருடங்களாக கால தாமதமாகி இருக்கிறது மாகாண சபைத் தேர்தல், ஆகவே அது உடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடாத்துவதால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கதைக்க கூடாது என்று எங்கேயும் இல்லை, ஆகவே ஜனாதிபதி தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் இரண்டையும் கேட்கின்றோம் எனக் கூறியபோது ”அப்படியானால் நாங்கள் கூட்டத்தை முடித்துக் கொள்வோம்” எனக் கூறிவிட்டு ஜனாதிபதி சென்றுவிட்டார். ஆகவே கூட்டம் நேற்று அரைகுறையுடன் நிறைவடைந்திருக்கிறது”இவ்வாறு தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1342051

  • கருத்துக்கள உறவுகள்

இருக்குன்ற நாலைந்து  பா. உறுப்பினர்களுக்கு நாலைந்து கட்சி.  கொள்கை முரண்பாடு. நல்லாய் வருவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவில் இருந்த மதிப்பு குறைந்துவிட்டது.
சும்மாவே அரசு ஒன்றும் தராது, இதில் கோரிக்கை வைப்போர் பிரிந்திருந்து கேட்டால் அதையே சாட்டாக வைத்து தட்டிக் கழிப்பாங்களே!!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

சும்மாவே அரசு ஒன்றும் தராது, இதில் கோரிக்கை வைப்போர் பிரிந்திருந்து கேட்டால் அதையே சாட்டாக வைத்து தட்டிக் கழிப்பாங்களே!!

அது தான் நமது இனத்துக்கு கிடைத்த சாபக்கேடு, எதிரிக்கு வாய்த்த வரப்பிரசாதம். 

  • கருத்துக்கள உறவுகள்

கோபமடைந்த ஜனாதிபதி : அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்துவமா என விக்கியிடம் தொலைபேசி மூலம் கேட்ட ரணில் !

Published By: VISHNU

28 JUL, 2023 | 08:49 PM
image
 

சுமந்திரனின் பேச்சினால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்துவமா? என  தன்னிடம் கேட்டதாக  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த முறை இடம்பெற்ற அதிகார பகிர்வு தொடர்பான பேச்சு வார்த்தையில் சுமந்திரன் அவர்கள் பேசும் போது மாகாணசபைகள் முறைமை தொடர்பில் எங்களுக்கு கவலையில்லை, அது இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் எமக்கு சமஸ்டியே தேவை எனும் தொனிப்பட  பேசினார்.

சுமந்திரனின் இவ்வாறான பேச்சினால் கோபமடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உங்களுக்கு மாகாணசபை முறை தேவையில்லை என்றால் நாங்கள் இத்தோடு இந்த பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்வோம் அதைப் பற்றி பேசத் தேவையில்லை என தெரிவித்தார்.

அப்பொழுது நான் கூறினேன், வலுவற்றிருக்கும் மாகாணசபை சட்டத்தை வலுப்படுத்தி எங்களிடம் இருந்து பறிபோன அதிகாரங்களை திரும்பவும் மீளப்பெற்றுக் கொடுத்து அந்த அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம் அதற்கு நீங்கள் நடடிக்கை எடுத்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவினை தருவோம் என்று கூறினேன்.

அத்தோடு ஜனாதிபதி ரணிலின் கோபம் கொஞ்சம் தணிந்தது.

இதேவேளை புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் பேசிய சுமந்திரன் மாகாண சபை தேர்தல் எங்களுக்கு வேண்டும் எனும் தொனிப்பட பேசினார்.

இதன் போது குறுக்கிட்ட  ஜனாதிபதி கடந்த முறை நீங்கள் பேசும்போது மாகாணசபை முறைமை தேவை இல்லை என்று கூறி இருந்தீர்கள், இப்போது நீங்கள் வேறு விதமாக பேசுகின்றீர்கள், உங்களுக்கே தெரியாது என்ன தேவை? என்ன தேவையில்லை? என்று என தெரிவித்தார்.

இதனால் சுமந்திரனுக்கு ஜனாதிபதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவேளை இதை காரணமாக வைத்து இந்த பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று ஜனாதிபதி ரணில் நினைக்கக்கூடும், அதனால் தான் இவ்வாறு  கடிந்து கொண்டாரோ எனக்கு தெரியாது? அல்லது உண்மையாகவே சுமந்திரனுடைய கூற்றினால் கோபமடைந்தாரோ? என்பது எனக்கு தெரியவில்லை.

எனினும் குறித்த சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்து நான் கொழும்பில் உள்ள இல்லத்துக்கு சென்றதன் பிற்பாடு தொலைபேசி மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனக்கு அழைப்பு எடுத்தார்.

அப்போது என்னை கேட்டார் நாங்கள் தொடர்ந்து பேசுவதா? அல்லது இத்தோடு இதனை நிறுத்துவதா? என்று  நான் கூறினேன் கட்டாயம் இதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று, அப்போது அவர் கூறினார் அப்படியானால் சுமந்திரன் ஏன் அப்படி கதைக்கின்றார் என்று? நான் கூறினேன் சுமந்திரன் எப்படி கதைக்கிறது என்றாலும் கதைக்கட்டும், நீங்கள் செய்யும் வேலை நல்ல வேலை அதாவது எங்களிடமிருந்து பறிபோன  அதிகாரங்களை திருப்பவும் மீளப்பெற்று மாகாண சபைக்கு தருவதற்கு நீங்கள் உழைக்கின்றீர்கள் அதனை தொடர்ந்து முன்னெடுங்கள் என்று கூறினேன்.

எங்களிடமிருந்து பறிபோன அதிகாரங்களை திருப்பவும் பெறுவது தொடர்பில் ஒரு குழுவினை அமைக்குமாறு நாம் பரிந்துரை செய்ததையும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். எனவே இதனை தொடர்ந்து முன்னெடுங்கள், நீங்கள் அதிகார பகிர்வு தொடர்பிலான பேச்சு வார்த்தையை நிறுத்த வேண்டாம் என்று கூறினேன்.

அப்போது அவர் கூறினார் சரி பாராளுமன்றம் அடுத்தமுறை கூடும் போது மீண்டும் பேசுவோம் என்று கூறினார் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161162

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

ஒருவேளை இதை காரணமாக வைத்து இந்த பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று ஜனாதிபதி ரணில் நினைக்கக்கூடும்

அவர்கள் தமிழ்த்தரப்பை பேச்சுக்கு அழைக்கும்போதே, அதை மறுதலிக்கும் குழப்பும்  காரணங்களையும், ஆட்களையும் தயார் படுத்திக்கொண்டே அழைப்பார்கள். இந்த ராஜதந்திரிக்கு அது இன்னமும் விளங்கவில்லை. தமிழர் தீர்வுக்கு வர மறுக்கிறார்கள், அவர்கள் தீர்வை விரும்பவில்லை, குழப்புகிறார்கள் என்று கலைந்துவிடுவார்கள். இவர்களோ; ஆளையாள் குற்றம்சாட்டி இழுபறிப்படுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல் சும், சும்மா வாய் பேச்சில் சம்ஸ்டி, கறிச்சட்டி, மாகாண சபை தேர்தல் என அடிச்சு விட்டிருக்கிறார்…

அதையே காத்திருந்த ரணில் பேச்சுவார்த்தையை குழப்பி விட்டு போய் விட்டார்…

அந்தாள் உள்ளாட்ட்சி தேர்தலையே தூக்கி போட்டு விட்டு, களவாய் கதிரையில் இருந்து என்சோய் பண்ணுது. எதாவது தேர்தல் வந்து ரணில் கட்சி தோத்தால், அடுத்த நொடி ரணிலின் கதிரைக்கே ஆபத்து.

இப்ப போய் மாகாண சபை தேர்தலை கேட்டால் கெட்ட கோவம் வரும் தானே🤣.

இடையில சீவி ஐயா ரணில் நல்லவர் வல்லவர் எண்டு கோரஸ் பாடுகிறார்.

ஆனால் ஒன்று.

அதிகாரம் இல்லாத மாகாண சபைக்கு தேர்தலை வெண்டும் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனப்படாது.

அதை விட அதிகாரத்தை மீள பெறுமாறு செய்து விட்டு பின் தேர்தலை கோரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வலுவற்றிருக்கும் மாகாணசபை சட்டத்தை வலுப்படுத்தி எங்களிடம் இருந்து பறிபோன அதிகாரங்களை திரும்பவும் மீளப்பெற்றுக் கொடுத்து அந்த அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம் அதற்கு நீங்கள் நடடிக்கை எடுத்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவினை தருவோம் என்று கூறினேன்.

 

31 minutes ago, goshan_che said:

அதிகாரம் இல்லாத மாகாண சபைக்கு தேர்தலை வெண்டும் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனப்படாது.

எங்கள் உரிமைகளை பறித்து வைத்துக்கொண்டு அதை தக்க வைக்க  எம்மை அடிமைப்படுத்துவதே  தமது வெறியென கொள்கையாக வகுத்திருக்கும் சிங்களம் எங்களை கொழுவி விட்டு அதை ரசித்தவாறே தங்கள் பொழுதை உல்லாசமாகவும் தடையில்லாமல் கழிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.