Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

29 JUL, 2023 | 09:54 AM
image
 

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை  விடுவிப்பது தொடர்பாக   சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம தேரருடன்  இன்று சனிக்கிழமை (29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

IMG-20230729-WA0008.jpg

மேலும், "திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.

அதன் தொடர்ச்சியாக இன்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட கட்டளைத் தளபதி பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன்   தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.

IMG-20230729-WA0006.jpg

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161182

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு : களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் உறுதி

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு : களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் உறுதி

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று (29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது குறித்தும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இன்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது குறித்து சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1342308

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ்...  தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் முற்றுப் புள்ளி என்று,சொன்ன படியால்.... 
கட்டிய, தையிட்டி விகாரையை... உடைக்கப் போகிறார்கள் போலுள்ளது. 
என்னவோ... விரைவில், நல்லது நடந்தால் சந்தோசமே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

டக்ளஸ்...  தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் முற்றுப் புள்ளி என்று,சொன்ன படியால்.... 
கட்டிய, தையிட்டி விகாரையை... உடைக்கப் போகிறார்கள் போலுள்ளது. 
என்னவோ... விரைவில், நல்லது நடந்தால் சந்தோசமே. 

விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிப்பது பற்றி டக்கிளசு பேசியதாகத்தான் மேற்படி செய்தி கூறுகிறது. விகாரையை இடிப்பதற்குப் பதிலாக அந்த அயலில் வசிக்கும் தமிழ் சனங்களை அப்புறப் படுத்துவதைத்தான் சிங்களவன் விரும்புவான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

டக்ளஸ்...  தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் முற்றுப் புள்ளி என்று,சொன்ன படியால்.... 
கட்டிய, தையிட்டி விகாரையை... உடைக்கப் போகிறார்கள் போலுள்ளது. 
என்னவோ... விரைவில், நல்லது நடந்தால் சந்தோசமே. 

ஓரிரு மாதங்களுக்கு முன், ஒரு தமிழ் பௌத்த பிக்கு, பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவிக்கும்போது; கட்டிய வழிபாட்டுத்தலங்களைஉடைக்க முடியாதாம், அது பொது மக்களுடைய காணியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர், அது பற்றி எனக்கு சரியாக தெரியாது, அப்படியிருந்தால் அவர்கள் நீதிமன்றத்துக்கு  போய் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம், அந்த விகாரை அங்குள்ள பௌத்த மக்களிடம், அந்த மதம் சார்ந்த பொறுப்பானவரிடம்  கையளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அப்போ ... அது பற்றி எந்த விபரமும்  தெரியாதவர், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவது அறியாதவர், வடக்கில் வழிபாட்டுத்தலங்கள் குண்டுவீசி அழிக்கப்படும்போது குரல் கொடுக்காதவர், கருத்து சொல்ல வந்துவிட்டார். அண்மையில் ஒரு செய்தி அறிந்தேன், தெற்கில் ஆக இருக்குமென நினைக்கிறேன். கட்டிட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு கட்டப்பட்டதாக ஒரு சைவ ஆலயம் இடிக்கப்பட்டாதாம். அப்போ... அதை தடுத்து, எதிர்த்து கருத்து தெரிவிக்க இவர் வராததேன்? தமிழர் என்றால் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்துவிடுவினம் கருத்து சொல்ல!  

விகாரை அமைந்துள்ள காணிக்காரருக்கு வேறு எங்காவது காணி கொடுப்பார்கள், அதற்கு மக்கள் சம்மதித்தால்; அதுவே வாய்ப்பாக தமிழரின் பிரதேசமெங்கும் விகாரைகளை எழுப்பிவிட்டு மக்களை அப்புறப்படுத்துவார்கள். அதற்கு இந்த கோமாளி அமைச்சர்கள் வக்காலத்து வாங்குவார்கள், மக்கள் விரும்பி தங்கள் காணிகளை விகாரைக்கு கையளித்ததாக.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு விகாரையை அகற்றச் சொல்லாமல்.. அங்கு பூத்தூவும் இத்தகையை அடிவருடிகளால் தான் தமிழன் இன்று ஈழத்தில் சிங்கள பெளத்தத்தின் இராணுவ ஆக்கிரமிப்பு திமிருக்குள் அடிமைப்பட்டுக்கிடக்கிறான். இவங்களிடம் போய் நிலத்தை மீட்டுத் தா.. என்று கெஞ்சுபவர்களை என்னென்பது. அந்த நிலங்களை ஆக்கிரமிச்சுக் கொள்ள துணை நின்றதே இவங்கள் தானே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அங்கு பூத்தூவும் இத்தகையை அடிவருடிகளால் தான் தமிழன் இன்று ஈழத்தில் சிங்கள பெளத்தத்தின் இராணுவ ஆக்கிரமிப்பு திமிருக்குள் அடிமைப்பட்டுக்கிடக்கிறான்

தமிழ்க் காவலன் என்று கௌரவிக்கப்பட்டவரும், அருண் சித்தாத்தன் என்கிற கோமாளியும், இந்தக்கூத்தாடிகளும் அதன் அடிவருடிகளும் அதையே செய்கின்றன. ஈ எந்தப் ..யிலும் உட்காரும். அதற்கு வேண்டியது; உட்காருவதற்கு இடம். அது உட்காருவதால் அது உட்கார்ந்த இடம் உயர்ந்ததென்று கொள்ள முடியாது, இது உயர்ந்ததென்றும் சொல்ல முடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.