Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பெற்றோர் அகதிகள் நானும் அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் - அகதிகள் புகலிடக் கோரிக்கையாளர்களை சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கும் இலங்கை பெண்

Featured Replies

4 நாட்களுக்கு இலங்கைச் சிறுமி ஒருவர் பற்றிய ஒரு செய்தி பரவலாகப் பேசப்பட்டது. 3 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து வந்த இச் சிறுமி குறுகிய காலத்தில் பிரெஞ்சு படித்துப் பிரெஞ்சுப் பாடத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். அத்துடன் பிரெஞ்சு மக்களுடன் ஒன்றிப் பழகி விலங்குப் பாதுகாப்புத் தொடர்பான அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குகிறார். அண்மையில் இவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு கடிதம் அனுப்பியது. இவர் பிரான்சில் தொடர்ந்து வாழத் தகுதியானவர் என்று பிரெஞ்சு மக்களிடமிருந்து ஆதரவு கிழம்பியுள்ளது.

செய்திகளில் பின்னூட்டங்களை வாசித்தபோது பிரெஞ்சு மக்களிடம் இவருக்கு எந்த அளவு ஆதரவு உள்ளதோ அதே அளவு. எதிர்ப்பும் உள்ளது தெரிகிறது. அதில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.

2009 இலேயே இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் இவர் போன்றவர்கள் உல்லாசப்பயண விசாவில் இங்கு வந்து இங்குள்ள எல்லா வசதிகளையும் அனுபவித்து பிரஜாவுரிமையையும் பெற்று இலங்கைக்கு உல்லாசப்பயணம் சென்று வருகிறார்கள். அரசின் முடிவை மதித்து இவர் இலங்கைக்குத் திரும்புவதே சிறந்தது.

இதை எழுதியவரின் பார்வையில் மக்கள் எங்கு தமக்கேற்ற வசதிகள் உள்ளனவோ அங்கு நோக்கியே நகர்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.

என்னைப் பொறுத்தவரை எந்த நாடாக இருந்தாலும் இலங்கையாக இருந்தாலும் ஓய்வூதியம் ஒரு அடித்தளமே, இதை வைத்து வசதியாக வாழ முடியாது. பெரும்பாலான நாடுகளில் இது ஒருவர் உயிர்வாழ்வதற்கே போதுமானதாக இருக்கும். உழைக்கும் காலத்தில் திட்டமிட்டு பிற்கால வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி வைத்திருப்பதே நல்லது.

  • Replies 107
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2023 at 07:45, குமாரசாமி said:

உப்படியான   சிந்தனைகளை  எமது தாய் தந்தையர் உட்பட முன்னோர்களும்  கடைப்பிடித்திருந்தால் எம் இனம் உறவுகள் எல்லாமே அழிந்திருக்கும்.

எமது நாட்டில் கலவரங்கள் இல்லாதிருந்து எம் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ஏனைய அமைதியான நாடுகளில் வாழும் பரம்பரை சொத்துக்களை பாட்டன் பூட்டன் பேரன் என அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். கலவரத்திற்கு முன் எம் இனத்திலும் இருந்தது.

மனிதன் மூன்னோக்கி சிந்தித்த படியால் தான் நாடுகள் முன்னேறியுள்ளன.

 

எங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த விதம் வேறு இப்பொழுது வேறு என்றுதான் நான் நினைக்கிறேன். சொத்து சேர்ப்பது தொடங்கி வாழ்க்கை முறை கூட வித்தியாசம். அவர்கள் வரையில் அது சரியாக இருந்து ஆனால் இப்பொழுது அப்படியில்லை. 

தாராளமாக ஓடி ஓடி உழைக்கலாம் ஆனால் தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் அல்லது பிள்ளைக்கோ,  வாழ்க்கை துணைக்கோ அல்லது உடன்பிறந்தவர்களுக்கோ தேவைப்படும் நேரத்தில் அங்கே இல்லாமல் ஓடி ஓடி உழைத்து சொத்தை சேர்த்தும் ஒரு பயனில்லை. 

எமது முன்னோர்கள் சேர்த்தை வைத்து நாம் உழைக்காமல் இருக்கவேண்டும் எனக் கூறவில்லை. 

வாழ்க்கை, வேலை, இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவ்வளவுதான். 

On 29/9/2023 at 08:27, Nathamuni said:

நிறைவான வாழ்வு வாழ்ந்தவனை சமூகம் காலாகாலத்துக்கும் போற்றும். 

நிறைவான வாழ்க்கை என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுக்கு ஓடி ஓடி சொத்து சேர்ப்பது நிறைவானது என்றால் மற்றையவர்களுக்கு வேறாக இருக்கலாம். 

மற்றவர்கள் போற்றவேண்டும் என நினைத்தால் மற்றவர்களுக்காகவே வாழவும் வேண்டிய நிலை வரலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

என்னைப் பொறுத்தவரை எந்த நாடாக இருந்தாலும் இலங்கையாக இருந்தாலும் ஓய்வூதியம் ஒரு அடித்தளமே, இதை வைத்து வசதியாக வாழ முடியாது. பெரும்பாலான நாடுகளில் இது ஒருவர் உயிர்வாழ்வதற்கே போதுமானதாக இருக்கும். உழைக்கும் காலத்தில் திட்டமிட்டு பிற்கால வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி வைத்திருப்பதே நல்லது.

ஓய்வூதியம் என்பது குடியேறிகள் தேடி வரும் பல காரணிகளில் ஒன்று மட்டும் தான் என நினைக்கிறேன். ஒய்வு பெற முதல் கவனிக்கப் படும் பல காரணிகள் இருக்கின்றன: அகதி அந்தஸ்து கிடைத்தால் வாழ்வாதார உதவி, இலவச மருத்துவ சேவைகள், இதையெல்லாம் எடுத்துக் கொண்டே களவாக வேலை செய்யும் வசதி, வரி கட்டாமல் வருமானத்தைப் பதுக்கிக் கொள்ளும் வசதி..இப்படி சில காரணிகளை முன் வைத்து எந்த நாட்டுக் குடியேறி நாட்டுக்கு நாடு தாவினாலும், அது கொஞ்சம் அறம் குறைந்த செயல் என்பது என் அபிப்பிராயம்.

இதை விட இன்னொரு அறம் குறைந்த செயலையும் சில குடியேறிகளிடையே அவதானிக்கிறேன்: தாம் குடியேறியாக (பல சமயங்களில் அகதியாக) வந்து, பிரஜையான பின்னர், "குடிவரவை நிப்பாட்டு!" என்பார்கள்😂,சமூக பாதுகாப்பு வலையை ஏனையோருக்கு உருவாக்க நான் வரி கட்ட மாட்டேனென மூக்கால் அழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

 

நிறைவான வாழ்க்கை என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுக்கு ஓடி ஓடி சொத்து சேர்ப்பது நிறைவானது என்றால் மற்றையவர்களுக்கு வேறாக இருக்கலாம். 

மற்றவர்கள் போற்றவேண்டும் என நினைத்தால் மற்றவர்களுக்காகவே வாழவும் வேண்டிய நிலை வரலாம். 

காசும் சொத்தும் தான் நிறைவான வாழ்க்கை என்று நினைத்தால் பேசிப்பலன் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உழைத்தோமா இருக்கும் வரை வாழ்க்கையை அனுபவித்தமா என்று வாழ வேண்டும்...பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை ,வளமான எதிர்காலத்தை காட்டினால் அவர்கள் பிழைத்து கொள்வார்கள் 
சேமிப்பு ,சேமிப்பு என்று நிகழ்காலத்தை அனுபவிக்காமல் ஓய்வு பெற்றவுடன் அந்த சேமிப்பு காசை மட்டும் வைத்து  கொண்டு என்ன செய்வது வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?...நோய் ,நொடியில்லாமல் இருக்கும்  சிலரால் மட்டும் தான் முடியும்  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, P.S.பிரபா said:

நிறைவான வாழ்க்கை என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுக்கு ஓடி ஓடி சொத்து சேர்ப்பது நிறைவானது என்றால் மற்றையவர்களுக்கு வேறாக இருக்கலாம். 

மற்றவர்கள் போற்றவேண்டும் என நினைத்தால் மற்றவர்களுக்காகவே வாழவும் வேண்டிய நிலை வரலாம். 

சிறப்பான கருத்து.

8 hours ago, P.S.பிரபா said:

மற்றவர்கள் போற்றவேண்டும் என நினைத்தால் மற்றவர்களுக்காகவே வாழவும் வேண்டிய நிலை வரலாம்.

மற்றவர்களுக்கு காட்டுவதற்காக தங்களை வருத்துபவர்களை கண்டுள்ளேன்.

1 hour ago, ரதி said:

சேமிப்பு ,சேமிப்பு என்று நிகழ்காலத்தை அனுபவிக்காமல் ஓய்வு பெற்றவுடன் அந்த சேமிப்பு காசை மட்டும் வைத்து  கொண்டு என்ன செய்வது வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?.

👍

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

நன்றாக உழைத்தோமா இருக்கும் வரை வாழ்க்கையை அனுபவித்தமா என்று வாழ வேண்டும்...பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை ,வளமான எதிர்காலத்தை காட்டினால் அவர்கள் பிழைத்து கொள்வார்கள் 
சேமிப்பு ,சேமிப்பு என்று நிகழ்காலத்தை அனுபவிக்காமல் ஓய்வு பெற்றவுடன் அந்த சேமிப்பு காசை மட்டும் வைத்து  கொண்டு என்ன செய்வது வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?...நோய் ,நொடியில்லாமல் இருக்கும்  சிலரால் மட்டும் தான் முடியும்  

இதைத் தான் நான் செய்திருக்கிறேன் செய்கிறேன்

அநேகமான தமிழ் முதலாளிகளை விட அவர்களிடம் வேலை செய்பவர்கள் நல்வாழ்க்கை வாழ்கின்றனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/10/2023 at 14:01, P.S.பிரபா said:

எங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த விதம் வேறு இப்பொழுது வேறு என்றுதான் நான் நினைக்கிறேன். சொத்து சேர்ப்பது தொடங்கி வாழ்க்கை முறை கூட வித்தியாசம். அவர்கள் வரையில் அது சரியாக இருந்து ஆனால் இப்பொழுது அப்படியில்லை. 

ஆசிய,ஆபிரிக்க,கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்றும் தமது சந்ததியினர் நலன் கருதியே  திட்டமிட்டு வாழ்கின்றனர்.

 

On 5/10/2023 at 14:01, P.S.பிரபா said:

தாராளமாக ஓடி ஓடி உழைக்கலாம் ஆனால் தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் அல்லது பிள்ளைக்கோ,  வாழ்க்கை துணைக்கோ அல்லது உடன்பிறந்தவர்களுக்கோ தேவைப்படும் நேரத்தில் அங்கே இல்லாமல் ஓடி ஓடி உழைத்து சொத்தை சேர்த்தும் ஒரு பயனில்லை. 

எனக்கு என் சொந்த பந்தங்கள் முக்கியம். அவர்களுக்காக நான் உழைத்து அவர்களை ஒரு முன்னேற்ற பாதையில் நிலை நிறுத்தியதில் எனக்கு மகிழ்சி. எனது மனைவி பிள்ளைகளுக்கு நான் கஷ்ரப்படாமல் யார் கஷ்ரப்பட்டு அவர்களை வாழவைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

நான் கஷ்ரப்பட்டது போல் எனது சந்ததி கஷ்ரப்படக்கூடாது. இது போல்தான் என் இனமும்.

On 5/10/2023 at 14:01, P.S.பிரபா said:

வாழ்க்கை, வேலை, இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவ்வளவுதான். 

சரிதான்.
ஆனால் நாய் பூனைகள் மாதிரி ஒரு பருவம் வர கழட்டி விடும் பழக்கம் மனித குலத்திற்கு கிடையாது. மாறாக சில மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு உதவலாம். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.