Jump to content

அமெரிக்க லொட்டோ விசா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html

 

DV-2025 Program: Online Registration

 

DV-2025 Program: The online registration period for the DV-2025 Program begins on Wednesday, October 4, 2023, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 7, 2023, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person during the registration period will disqualify all entries for that person. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html

 

DV-2025 Program: Online Registration

 

DV-2025 Program: The online registration period for the DV-2025 Program begins on Wednesday, October 4, 2023, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 7, 2023, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person during the registration period will disqualify all entries for that person. 

எனது டாக்டர் நண்பருக்கு கிடைத்து, UK யில் இருந்து US போய், சோசியல் லைப் இல்லை என்று வந்து விட்டார்.

5 வருடத்துக்கு பின்னர் போனபோது, இமிகிரேஷன் மடக்கிவிட்டார்கள். உன்னை டீபோர்ட் பண்ண சொல்லுது சிஸ்டம். எப்படி விமானத்தில் ஏறினாய் என்று கேட்டு அதகளம் பண்ணிவிட்டார்கள். இவர் கிறீன் கார்ட் எடுத்து, நாட்டினை விட்டு வெளியே போனவர், உள்ளே வரவில்லை என்று, அலெர்ட் flag போட்டு வைத்திருக்கிறார்கள்.

விசா கிடைத்த போது இலங்கை பாஸ்போர்ட், திரும்பிப் போனபோது பிரிட்டிஷ் பாஸ்ப்போர்ட் என்பது தான் டீபோர்ட் சிக்கலுக்கு காரணம் என்றார். பிறகு, எல்லாம் விசாரித்து, flag எடுத்து, கார்டினையும் பறித்து உள்ளே விட்டார்களாம்.

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எனது டாக்டர் நண்பருக்கு கிடைத்து, UK யில் இருந்து US போய், சோசியல் லைப் இல்லை என்று வந்து விட்டார்.

5 வருடத்துக்கு பின்னர் போனபோது, இமிகிரேஷன் மடக்கிவிட்டார்கள். உன்னை டீபோர்ட் பண்ண சொல்லுது சிஸ்டம். எப்படி விமானத்தில் ஏறினாய் என்று கேட்டு அதகளம் பண்ணிவிட்டார்கள். இவர் கிறீன் கார்ட் எடுத்து, நாட்டினை விட்டு வெளியே போனவர், உள்ளே வரவில்லை என்று, அலெர்ட் flag போட்டு வைத்திருக்கிறார்கள்.

விசா கிடைத்த போது இலங்கை பாஸ்போர்ட், திரும்பிப் போனபோது பிரிட்டிஷ் பாஸ்ப்போர்ட் என்பது தான் டீபோர்ட் சிக்கலுக்கு காரணம் என்றார். பிறகு, எல்லாம் விசாரித்து, flag எடுத்து, கார்டினையும் பறித்து உள்ளே விட்டார்களாம்.

கிறீன் காட்டாக இருந்தால் ஒரு வருடத்துக்கு மேலே வெளிநாடுகளில் தொடர்ந்து நிற்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

கிறீன் காட்டாக இருந்தால் ஒரு வருடத்துக்கு மேலே வெளிநாடுகளில் தொடர்ந்து நிற்க முடியாது.

ஆம்

5 வருசம் + பாஸ்போட் வேறு

குழம்பிவிட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தானே பதிந்திருக்கு .

இதைப் பார்த்துட்டு நிறைய யுரியூப் காரர்கள் வெளிக்கிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எனது டாக்டர் நண்பருக்கு கிடைத்து, UK யில் இருந்து US போய், சோசியல் லைப் இல்லை என்று வந்து விட்டார்.

வீணாக இன்னொருவரின் வாய்ப்பை பறித்த முட்டாள். படித்த முட்டாள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

வீணாக இன்னொருவரின் வாய்ப்பை பறித்த முட்டாள். படித்த முட்டாள். 

அப்படி பொதுவா சொல்ல ஏலாது.

போய் வேலைக்கு கடுமையா முயன்றார். குடும்பம் இங்க!

தனிமை வேற.

கையை கடிக்க, வந்தவர் மறுநாளே வேலை. அப்படியும் லீவு போட்டு இன்றவீயூ போனார். சரிவரவில்லை.

சரத் பொன்சேகாவுக்கும் கிடைத்ததே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சரத் பொன்சேகாவுக்கும் கிடைத்ததே!

கோத்தாவுக்கும் கிடைத்ததாமே. உள்ளால எத்தனை பேரின் விண்ணப்பங்களை செயலிழக்கச் செய்தார்களோ யார் அறிவார்..... இவர்கள் தெரிவாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

கோத்தாவுக்கும் கிடைத்ததாமே. உள்ளால எத்தனை பேரின் விண்ணப்பங்களை செயலிழக்கச் செய்தார்களோ யார் அறிவார்..... இவர்கள் தெரிவாக.

கோத்தா, லாட்டரி விசா வரமுன்பே போய் விட்டார். அவருக்கு உதவியர் கிளி மகேந்திரன். மகாராஜா கம்பெனி சேர்மன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொத்தர் முறை மூலம் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் நுழைய முடியாது என்பதால், இலங்கை, பங்களாதேஷ் நாடுகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் கணிசமானோர் வருகின்றனர். எனவே இதை இல்லாமல் செய்து, வருடத்திற்கு 50,000 பேரை H1B விசா கோட்டா மூலம் வர அனுமதிக்கும் படி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பல வருடங்களாக முயன்று வருகின்றனர்😂- ஆனால், அமெரிக்க செனட் இதைத் தடுத்து வைத்திருக்கிறது.

ஆனால், வருவோர் கவனமாக அமெரிக்கா தங்களுக்கு உகந்ததா என்று ஆலோசித்து விண்ணப்பிக்க வேண்டும்.

1. தெரிவானால், உங்களுக்கு ஒரு விசேட விசா (immigrant visa) மூலம் உள்ளே வர அனுமதிப்பர். அதன் பிறகு இங்கே இருந்த படியே பச்சை மட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பம் (I-485), ஏனைய விண்ணப்பங்கள் போலவே பரிசீலிக்கப் படும் - விசேட கவனிப்பு இல்லை. உரிய காரணங்கள் இருந்தால் அது மறுக்கப் படவும் கூடும்.

2. வளர்ந்த பிள்ளைகளைக் (21?) கூட்டி வர முடியாது. அவர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

3. விண்ணப்பம் நிலுவையில் இருக்கும் போது, சாப்பாடு, தங்குமிடம், மருத்துவம் எல்லாம் உங்கள் பொறுப்பு. இதற்காகத் தற்காலிகமாக வேலை செய்யும் அனுமதி (EAD) உங்களுக்குக் கிடைக்கும். உங்களால் முடியாமல் அரசின் உதவியை நாடினால் affordable housing என்ற குற்றவாளிகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் குறைந்த வாடகை வீட்டில் இடம் எடுத்துத் தருவார்கள். புதிதாக அமெரிக்கா வருபவர் இந்தச் சூழலில்  வாழ்வது கடினம்.

4. அங்கே செய்த தொழிலையே இங்கேயும் வந்திறங்கியவுடன் செய்யலாம் என்ற எண்ணத்தில் வந்தால் ஏமாற்றமடைந்து தெருவில் நிற்பீர்கள். யாராயிருந்தாலும் இங்கே அதற்குரிய சான்றிதழ் பெற்ற பின்னர் தான் அந்த தொழிலைச் செய்யலாம். அது வரை எந்த தொழிலையும் செய்து உயிர் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

5. வந்திறங்கும் இடம், நகரம் வாழ்க்கைச் செலவிற்கு மிகவும் முக்கியமான விடயம். பல இலங்கையர்கள்  நேராக தமக்குத் தெரிந்த பிரபல நகரமான  நியூயோர்க் வந்திறங்கி, பின்னர் துண்டைக் காணோம் துணியைக் காணோமென தப்பியோடியிருக்கின்றனர்😎.

6. ஏற்கனவே இங்கே இருக்கும் உறவினர்களோடு தங்கியிருப்பதானால், முழுவதுமாக அவர்களில் தங்கியிருக்க முடியாதென்பதையும் உணர்ந்து கொண்டு வர வேண்டும். உதாரணமாக, அமெரிக்காவில் மருத்துவக் காப்புறுதி மிக அதிகம், இதை உங்கள் உறவினர் , நண்பர்கள் பெற்றுத் தர முடியாது.   

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான தகவல் .
நன்றி .

ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளோர் இதற்கும் விண்ணப்பித்து கிடைத்தும் பின்னர் வராமல் இருக்கிறார்களே.(உதாரணம் மேலே நாதம் எழுதியது)
இதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

@தனிக்காட்டு ராஜா இந்த திரி தொடங்கும் போது உங்களைத் தான் மனதில் எண்ணி பதிந்தேன்.

அலுவல் நடக்குதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2023 at 23:18, ஈழப்பிரியன் said:

பிரயோசனமான தகவல் .
நன்றி .

ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளோர் இதற்கும் விண்ணப்பித்து கிடைத்தும் பின்னர் வராமல் இருக்கிறார்களே.(உதாரணம் மேலே நாதம் எழுதியது)
இதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

@தனிக்காட்டு ராஜா இந்த திரி தொடங்கும் போது உங்களைத் தான் மனதில் எண்ணி பதிந்தேன்.

அலுவல் நடக்குதா?

நம்ம அதிஸ்ரம் தலை கீழாக வேலை செய்கிறது எங்க போனாலும் புலி கடந்து போன பற்றைக்காடுகள் போல் இருக்கிறது அதனால்  இனிமேல் எந்த  பிரயோசனமும் இல்லை மிக்க நன்றி அண்ணை 😷

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
    • கல்முனை பகுதியில் பதற்ற நிலை; போக்குவரத்து பாதிப்பு; 7 மணித்தியாலங்களாக போராட்டகாரர் வசமான நகரம் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:54 PM   கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில்  அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும்  அதற்கான உரிய தீர்வு கோரியும்  தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால்  வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்திருந்தனர். இதே வேளை 7 மணித்தியாலங்களாக  கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன. அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?  என பல  கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.  அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச   செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது. https://www.virakesari.lk/article/186845
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.