Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸுக்கு முகவரால் அழைத்துச் செல்லப்பட்ட கிளிநொச்சிவாசி பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த  ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக  ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலாரஸ் எல்லையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை பெலராஸ்  எல்லையில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில்  உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில்  வட்டக்கச்சியில் உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி  உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே  அவர் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பிரான்ஸுக்கு முகவரால் அழைத்துச் செல்லப்பட்ட கிளிநொச்சிவாசி பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு என்னத்தைச் சொல்வது...சொன்னாலும் விளங்கும் நிலையிலா அங்குள்ள சனம் இருக்குது...ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கள் தொடர்ந்து செல்வதால் அங்கு உள்ளோருக்கு ஆர்வம் தொடர்ந்து உள்ளது. அங்குள்ளோர் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கே எப்படி ஆட்களை கூப்பிடவேண்டும் என்று அறிவுரையும் கொடுக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டை,ஊரை,வீட்டை முன்னேற்ற வெளிநாடு வரலாம். ஆனால் இன்று நேர் வழியில் சட்டபூர்வமாக வர ஆயிரம் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. அப்படி வந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாட்டை,ஊரை,வீட்டை முன்னேற்ற வெளிநாடு வரலாம். ஆனால் இன்று நேர் வழியில் சட்டபூர்வமாக வர ஆயிரம் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. அப்படி வந்தால் சந்தோசம்.

கனபேர் ரோமேனியா வந்து அங்கால வந்து இறங்கின செய்திதான் ஊர் முழுக்க அடிபடுது அப்படி இருக்க இங்குள்ள சனமும் என்ன செய்யும் ஓடி வரத்தான் துடிக்கிறது  இங்க இருப்பதை விட எங்காயவது போகலாம் என 

வெளிநாடுகளில் இருந்து நீங்கள் என்ன சொன்னாலும் இங்க உள்ள சனத்துக்கு எப்படியாவது இலங்கையை விட்டு வெளிக்கிடவேண்டும் என்ற நினைப்புதான் எனக்கே அந்த நிலையென்றால் பாருங்கோவன் 

  • கருத்துக்கள உறவுகள்

யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு.

ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான சிரிப்பும் , கலகல எனும் பேச்சும் இவன் தனித்துவம்.

வெளித்தெரியாத தமிழ்த்தேசியவாதி. அரசியல்விடயங்களை தெரிந்து கொள்ள இவன் அப்பப்ப அழைப்பெடுப்பான். அண்ணை என்று தான் நானும் அழைப்பேன் அவனும் அண்ணை என்றே என்னை அழைப்பான். நாம் தவறான அரசியலால் ஆழப்படுகின்றோம் எனும் ஆதங்கம் இவனிடம் அதிகமாகவே இருந்தது.

எங்கு கண்டாலும் நின்று பேசாது நாம் கடந்ததே இல்லை. நல்லதொரு தந்தை யுகா.  யுகாவின் மகன் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன் நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்றிருந்தான். எப்போதும் தன் ஐந்து பிள்ளைகளையும் ஆழமாக நேசித்தவன் யுகா. அண்ணை நாம் இந்த காலத்தில் பிள்ளைகளை வளர்க்கவே கஸ்டமாக இருக்கு அந்த காலத்தில் எங்களை வளர்க்க எங்கள் அம்மா அப்பா எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என பல முறை கூறுவான் யுகா....

வியாபார உலகின் புலமையாளனாக இருந்தும் மனித கடத்தல் காரர்களிடம் இவன் ஏமாந்து விட்டானே எனும் ஏக்கம் தான் என்னுள் அதிகமாக எழுகின்றது.

பிரான்ஸ் செல்வதற்காக விமானம் மூலம் ரஷ்யாவிற்கு ஆள் கடத்தும் முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்டு ஆபத்தான சர்வாதிகாரியால் ஆளப்படும் பெலரூஸ் நாட்டிற்கு ரஷ்யாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றான். அங்கிருந்து போலாந்திற்கு செல்வதற்கு  பெலரூஸ் எல்லையை கடக்க 700 km தூரம் ஆபத்தான காட்டு பாதைகளால் அழைத்து செல்லப்படும் போது நடக்க முடியாது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். கடந்த சனிக்கிழமை தனது மனைவிக்கு தொலைபேசி எடுத்து என்னால் இனி ஒரு அடிகூட நடக்கமுடியாது என்னை யாராவது காப்பாற்றினால் தான் நான் உயிர் பிழைப்பேன் என கூறியுள்ளார். அது தான் யுகா எடுத்த இறுதி அழைப்பு. யுகாவுடன் சென்ற 07 பேரும் இவனை இடைநடுவே விட்டு விட்டு சென்று விட்டனர்.

யுகாவின் மனோதிடம் இடம் கொடுத்தாலும் அவன் உடல்நிலை 700 km தூரத்தை நடந்து கடக்க ஒருபோதும் இடம் கொடுக்காது.  உணவின்றி உறக்கமின்றி, ஓய்வின்றி, உடலை உறைய வைக்கும் குளிர் நிறைந்த காடுகளுக்குள்ளால் மாதக்கணக்கில் நடந்து ஆபத்தான போர்முனை எல்லைகளை  கடக்க கோடி ரூபா காசையும் கொடுத்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வெளிநாடு செல்லும் ஈழத்து சொந்தங்களே ஒருகணம் நின்று சிந்தியுங்கள்.

பெரும் போர் நடக்கும் ரஷ்யாவில் இருந்து திருட்டு பாதைகளால் ஆபத்தான எல்லைகளை கடக்க இந்த மனிதக் கடத்தற்காரர்களின் பொய்களை நம்பி ஒரு அற்புதமான மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். யுகாவின் ஐந்து பிள்ளைகளையும் வளர்ப்பது அந்த இளந் தாய்க்கு இனி எவ்வளவு சவாலாக இருக்கும்.

பெலரூஸ் போலந்து எல்லைகள் போர் மேகங்கள் சூழ்ந்த ஆபத்தான பகுதி. பெலரூஸ் போலந்தை தாக்கலாம் எனும் அச்சத்தில் நேட்டோ நாடுகள் அந்த எல்லை முழுவதும் அணு ஆயுதங்களை கூட நிலை நிறுத்தி வைத்திருக்கின்றன. இப்படியான ஆபத்தான எல்லைகளை கடந்து செல்லத் தீர்மானிக்கும் பயண முகவர்கள் உண்மையில் மனித குலத்திற்கு எதிரான விரோதிகள் தான்.

இப்படியான முடிவுகளை எடுத்து விலைமதிப்பற்ற உயிரையும் இழந்து. உங்களை நம்பி வாழும் உறவுகளையும் நடுவீதியில் விட்டு செல்லும் இந்த துன்பகரமான முடியை எமது இளைய தலைமுறை இனியும் எடுக்கக்கூடாது. யுகா தன் மரணத்தின் மூலம் ஒரு உண்மையை எமக்கு உணர்த்தி செல்கின்றான். 
மனிதக் கடத்தற்காரர்கள் சிறந்த நடிகர்கள் அவர்கள் அறிவுமிக்க கண்களையே ஏமாற்றி விடுகின்றனர் என்பது தான் அந்த எளிமையான உண்மை.

குறிப்பு :-- பிரான்ஸ் செல்ல ஒரு கோடி ரூபாவரை பயண முகவர்கள் கறந்து எடுத்து விடுகின்றனர். அந்த பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் மாதாந்தம் 125,000/- ரூபா வட்டியாக வரும். அத்தோடு நாம் இங்கு வழமையான உழைப்பதையும் சேர்த்தால் மாதாந்தம் 200,000 ரூபா வருமானம். நிம்மதியாக குடும்பத்துடன் மகிழ்வாக வாழலாம் நமது நாட்டில்.
மாதாந்தம் ஒருமுறையேனும் தவறாது வெளிநாட்டில் இருந்து 200,000 ரூபா அனுப்பும் உறவுகள் யாரும் இருக்கிறார்களா ? எனும் கேள்விக்கு விடை தேட வேண்டும் எங்கள் மக்கள்.

#பிரதிபண்ணிய_விழிப்புணர்வுப்_பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.