Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார!

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் சமூகத்தில் பரப்பப்பட்டன.

இதனை அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்த நாடு வீழ்ந்தபோது, அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பேச்சில் மட்டுமன்றி, செயற்பாட்டிலும் எமது ஐக்கியத்தை நாம் காண்பித்துள்ளோம்.

எதிர்க்காலம் குறித்து மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், புதிதாக சிந்திக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்துதான், இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்தது.

இங்கு தான் நாம் பிரிந்தோம். இதன் பின்னர்தான் ஆயுதம் ஏந்தப்பட்டு, கொடிய யுத்தமும் நாட்டில் ஏற்பட்டது.
இவை தான் நாடு முன்னேற்றமடைய தடையாக இருந்தன.

1956 இற்குப் பின்னர் நாட்டை விட்டு பல புத்திஜீவிகள் வெளியேறினர். 1983 இலும் 2022 இலும் இதேபோன்று புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

நாம் நம்மை உணராத காரணத்தினால்தான், அடுத்தவரின் குறைகளை பெரிதாகக் காண்கிறோம்.

நாம் ஏனையவரின் மத, இன, கலாசாரத்தை மதித்தால் மட்டுமே, இந்நாட்டை முன்னேற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1359354

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவர்(ன்) உணர்ந்து  போதாது. ஓட்டு  மொத்த சிங்கள இனமும் உணர்ந்து செயற்படாத வரை விடிவு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

ஒரு சிங்களவர்(ன்) உணர்ந்து  போதாது. ஓட்டு  மொத்த சிங்கள இனமும் உணர்ந்து செயற்படாத வரை விடிவு இல்லை. 

சிங்களவனுக்கு அது நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்கள் மேலானவர்கள் என்று அவர்களிடம் அந்த இறுமாப்பு இருக்கின்றது. அவர்களது பன்சலைகளில்கூட இது போதிக்கப்படுகின்றது. அதிலிருந்து வெளிவருவது இலகுவாக இருக்காது. இன்னும் இது அரசியல்வாதிகளுக்கு முக்கியமாக தேவைப்படுகின்றது. போகிற வழியில் இப்படி சொல்லிவிட்டு போவார்கள் தவிர , அவர்கள் உள்ளத்திலிருந்து எல்லாம் இது வருவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2023 at 12:58, nunavilan said:

ஒரு சிங்களவர்(ன்) உணர்ந்து  போதாது. ஓட்டு  மொத்த சிங்கள இனமும் உணர்ந்து செயற்படாத வரை விடிவு இல்லை. 

வெகு விரைவில் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் கண்டதுக்கும் டக்ஸ் அடிக்கவேன்டி வரும் நாங்கள் அழியும்போது பால்சோறு தின்ற குற்றத்துக்கும் சேர்த்து வரிகளால் நெருக்குவார படுவார்கள் வயித்துக்குள் இருக்கும்போதே இலவச திரிபோசா இலவச மருத்துவம் தொடங்கி கட்டையில் போகுமட்டும் இலவசத்தில் வாழ பழகிவிட்ட சோம்பேறி இனம் இந்த சிங்களம் முதன் முதலாய் புதிய வரிகள் அவர்களின் தலையில் இறங்கும்போது தான் அவர்களின் கனவு கலையும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாகன இலக்கத்தடுகளில் சிறீ.. என்ன சிங்கள எழுத்தை திணிக்க தமிழர்களை தார் போட்டு எரிச்ச கூட்டம்.. இப்ப சிறீ இல்லாமல்.. வெறும் கோடு போட்டிட்டு ஓடுது.

ஆக.. முட்டாள் தனமான சிங்கள பெளத்த இனவெறி ஆட்சியாளர்களின் இனவாதத்தூண்டல்களும் அதற்கு துலங்கக் கூடிய முட்டாள் சிங்கள மக்கள் கூட்டமும் திருந்த இன்னும் இடமிருக்குது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.