Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை: இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறையாக, கடும் நடவடிக்கைகளை எடுக்க மீன்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கை கடற்பரப்பில் அவர்களின் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை தடுக்கும் என்று தாம் நம்புவதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை பணிப்பாளர் எஸ்.ஜே.கஹவத்த தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனைக்கு பின் விடுவிப்பு

தற்போது, கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள், நீதிமன்றங்களால் இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை: இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறை | New Action Against Owners Of Poaching Vessels

 

எனினும் புதிய சட்டத்தின்படி, படகுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ஒரு வெளிநாட்டு படகு கைப்பற்றப்பட்டால், அந்த குறிப்பிட்ட நாட்டின் உயர்ஸ்தானிகரத்தின் மூலம் உரிமையாளருக்கு இலங்கை நீதிமன்றால், மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை பணிப்பாளர் எஸ்.ஜே.கஹவத்த தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையுடன் விடுவிப்பு

இதில் ஒருகட்டமாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை: இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு புதிய அணுகுமுறை | New Action Against Owners Of Poaching Vessels

 

எனினும் அவர் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதியும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தேவையான ஆவணங்களுடன், படகு உரிமையாளர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக அழைப்பாணை அனுப்புமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/new-action-against-owners-of-poaching-vessels-1700407242

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அணுகு முறை என்ன?( இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

புதிய அணுகு முறை என்ன?( இந்திய இழுவை படகுகளை தடுப்பதற்கு)

படகு உரிமையாளர்களை இங்கு வரவழைத்து தண்டனை கொடுப்பது. நடைமுறை சாத்தியமா என்பது வேறு விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

எனினும் புதிய சட்டத்தின்படி, படகுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

உரிமையாளர்கள் மந்திரிகளாக இருக்கிறார்கள்.

கூப்பிட்டு நல்ல கசையடியும் தண்டமாக பெரும் பணமும் அறவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

உரிமையாளர்கள் மந்திரிகளாக இருக்கிறார்கள்.

கூப்பிட்டு நல்ல கசையடியும் தண்டமாக பெரும் பணமும் அறவிட வேண்டும்.

இவர்கள் கொக்குத் தலையில் வெண்ணையை வைத்துக் கொக்குப்பிடிக்க நினைக்கினம்.

எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது செய்து இருபத்து நாலு மணி நேரத்தில் சிறப்பு நீதிமன்றில் முன்னிறுத்தி சிங்கப்பூரில் கொடுக்குமாப்போல் ஆகக்குறைந்தது ஆறு பிரம்பு அடி கொடுத்து கையோட ஊருக்கு அனுப்பி வைத்தால் அடிதபின்பு ஏற்படும் பராமரிப்புச்செலவும் குறையும். 

அதுக்குப்பிறகு அவர் இலங்கைக் கடல் இருக்கும் பக்கம் தலை வைத்தே படுக்கமாட்டார்.

இது சர்வதேச ரீதியில் ஜனநாயகம் மனித உரிமை ஆகியவற்றுக்குள் ஏற்றுக்கொளபட்ட முறை ஆகவே சிங்கபூருக்கு அக்களை அனுப்பி அங்கு நன்றாகப் பயிற்சி எடுத்து வந்தால் செமயாக இருக்கும் கொசுறாக சீனாக்காரனிட்டையும் மேலதிக டெக்னிகல் ஐடியாக்களைப் பெறலாம்  மச்சான் இந்தியாக்காரனுக்கு தண்டனை என்றால் டண் கணக்கா ஐடியா தருவான்.

கையோட போதைப்பொருள் கூட்டத்தையும் அடக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

படகு உரிமையாளர்களை இங்கு வரவழைத்து தண்டனை கொடுப்பது. நடைமுறை சாத்தியமா என்பது வேறு விடயம். 

படகு உரிமையாளர்கள் இங்கு வந்தால் மட்டுமே படகு திருப்பி கொடுக்கப்படும் உரிமையாளருக்கு மட்டுமே படகில் எந்த பகுதியில் கேரள கஞ்சா உள்ளது என்ற விடயம் தெரியும் தற்போது எல்லாம் கடலில் மீன் பிடி எனும் போர்வையில் இலங்கைக்கு கஞ்சா பவுடர் போன்றவை கடத்துவது மிக அதிக லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளது .

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

படகு உரிமையாளர்கள் இங்கு வந்தால் மட்டுமே படகு திருப்பி கொடுக்கப்படும் உரிமையாளருக்கு மட்டுமே படகில் எந்த பகுதியில் கேரள கஞ்சா உள்ளது என்ற விடயம் தெரியும் தற்போது எல்லாம் கடலில் மீன் பிடி எனும் போர்வையில் இலங்கைக்கு கஞ்சா பவுடர் போன்றவை கடத்துவது மிக அதிக லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளது .

 

இந்த கஞ்சா தொழிலுக்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது பாருங்கோ. முதலில் நம்மட ஆட்கள், நம்மட(??) அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

இந்த கஞ்சா தொழிலுக்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது பாருங்கோ. முதலில் நம்மட ஆட்கள், நம்மட(??) அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். 

இதில் நம்ம ஆட்களை குறை சொல்ல முடியாது ஏனென்றால் வடகிழக்கு இளையோர்களை இனி இப்படித்தான் போதையில்  வைத்து இருக்கணும் இரண்டு நாட்டு சதி திட்டம் ஆனால் துரதிஸ்ட் வசமாய் தென்னிலங்கையில் அதிக விலை போவதால் கதை வேறுமாதிரி போகுது .

 

இப்படி கஞ்சா பவுடர் கேஸ்களில் வாதாட போவது யார் என்றும் பாருங்கள் விடயம் கிளியராகும் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

இந்த கஞ்சா தொழிலுக்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது பாருங்கோ. முதலில் நம்மட ஆட்கள், நம்மட(??) அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். 

அந்த அரசியல்வாதியின்ர பெயரைச் சொல்லுறது? ஏன் பயமோ 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

அந்த அரசியல்வாதியின்ர பெயரைச் சொல்லுறது? ஏன் பயமோ 

🤣

வேறொரு திரியில் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

அந்த அரசியல்வாதியின்ர பெயரைச் சொல்லுறது? ஏன் பயமோ 

🤣

சொல்லி சொல்லி களைத்து  விடடேன் பாருங்கோ. மற்றது இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Cruso said:

சொல்லி சொல்லி களைத்து  விடடேன் பாருங்கோ. மற்றது இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். 😜

அட சொல்லிட்டு போங்களேன் 😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.