Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றொரு நாள் பலம் சேர்க்கும் நடவடிக்கையின் போது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழக் கடற்பரப்பில் இருந்து சர்வதேசக் கடற்பரப்பிற்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் பணிகளை கடற்புலிகளின் படையணிகளான சாள்ஸ் படையணி மற்றும் நளாயிணி படையனிகள் மேற்கொண்டது. இதில் கப்பலில் சாள்ஸ் படையணியினருடன் மக்களில் சிலரும் பங்குபற்றியிருந்தனர். இவ் விநியோக நடவடிக்கை சாலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது.

இந் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முறையே வட்டுவாகலில் சாள்ஸ்B நளாயிணிB படையணிகளும் செம்மலையில் வசந்தன் படையணியும் சுண்டிக்குளத்தில் நரேஸ் படையணியும் மாதவி படையணியும் நிலைகொள்ள, இம் மூன்று படையணிகளையும் கடலில் நடந்த பாதுகாப்பு சமர் நடவடிக்கைகளை கடற்புலிகளின் துணைத் தளபதி வழிநடாத்தி அதன் மூலம் தமிழீழத்திற்கு பொருட்கள் கொண்டு வந்து சோ்க்கப்பட்டன. அத்துடன் விநியோக, கடற்சமர்களை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சாலையிலிருந்து வழிநடாத்தினா். என்பதுடன் தேசியத் தலைவர் அவர்கள் அடிக்கடி வந்து பார்வையிட்டதுடன் தளபதிகள் போராளிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

இவ் விநியேக நடவடிக்கை என்பது எழுதுவதற்கு இலகுவானதாக இருந்தாலும் அவர்கள் பட்ட கஸ்டங்கள் என்பது இலகுவானதல்ல சாலையிலிருந்து ஆரம்பத்தில் அதாவது 1996,லிருந்து 2002ம் ஆண்டு வரை 60 கடல் மைல்களாகவும், பின்னர் 75 கடல் மைல்களாகவும் பின் 100 கடல் மைல்களாகவும் இறுதியில் 120 கடல் மைலாகவும் விநியோகங்கள் நடைபெற்றன. (அதாவது சாலைக்கும் கப்பலுக்குமான தூரம்) இலங்கை கடற்படையினரதும் இந்திய கடல், வான் படையினரதும் நடவடிக்கையே தூர அதிகரிப்பிற்கான காரணமாகும்.

இலங்கை கடற்படை மற்றும் வான்படை தாக்குதல்கள் அதைவிட இயற்கையான பிரச்சனைகளான காலநிலைப் பிரச்சனை அதைவிட விடிவதற்குள் கரையை அடைந்து விடவேண்டும் இல்லையேல் விமானத் தாக்குதலுக்கு இரையாக வேண்டி வரும் கரையை அடைந்தவுடன் வேகமாக கொண்டு வந்த பொருட்களை இறக்கி படகையும் அதன் ஓடுபாதைகளையும் உருமறைக்க வேண்டும் பின் அடுத்த நாளுக்கான பயணத்தை மேற்கொள்வதறகான வேலையை தொடங்கவேணும், இதற்கிடையில் உருமறைப்பை பரிசோதிப்பதற்கும் அதற்கரியவர்கள் வருவார்கள். உருமறைப்பு பிரச்சனையெனில் வேவு விமானங்களாள் காட்டிக் கொடுக்கப்பட்டு விமானத் தாக்குதல் நடைபெறும் அப்படியான சம்பவங்களும் இடம்பெற்றன.

அப்படியான சம்பவமொன்றை குறிப்பிடலாம்: 1998ம் ஆண்டு காலப்பகுதி என நினைக்கிறேன். வேவு விமானம் எமது முகாமை அண்டிய பகுதியை வட்டமடித்துச் சென்றதும் அப்பகுதிக்கு உடனடியாக வந்த பொறுப்பாளரான லெப். கேணல் டேவிட் / முகுந்தன் அவர்கள் வேங்கைப் படகை இடம் மாற்ற உத்தரவிட்டார். அந்த படகை வேகவேகமாக மாற்றிய போராளிகள் படகிலுருந்து இறங்கிக் கொண்டிருக்கையில் வேங்கை படகு முன்பிருந்த இடத்தில் விமானத் தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. அன்று அவரது முடிவினால் ஒரு பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது.

விநியோக நடவடிக்கை:
விநியோகத்தின் மிக முக்கியமானது இரகசியமாகும். இரகசிய விடயத்தில் அனைவரும் மிகவும் அவதானமாக நடந்து கொணடனர். உதாரணமாக எவ்வளவு தூரம் எந்தக் கப்பலை சந்தித்து கப்பலில் யாா் யாா் நின்றாா்கள் என்ற விபரத்தைக்கூட ஒருவருக்கொருவர் கதைப்பதில்லை. கடற்சமரை பொறுத்தவரையில் விநியோகப் பாதுகாப்புச் சமரே அதிகமாகும். ஏனெனில். விநியோகத்தில் ஈடுபடுவேருக்கோ அல்லது பொருட்களுக்கோ எந்தவித சேதமும் வரக்கூடாது என்பதில் கடற்புலிகளின் சிறப்பத் தளபதி அவர்கள் மிகவும் அவதானமாக இருந்ததுடன் போராளிகளையும் உறுதியாக வைத்திருந்தாா். இது ஏனைய விநியோகங்களுக்கும் பொருந்தும்.

“கடலிலே காவியம் படைப்போம்”

 

மீள்நினைவுகளுடன் அலையரசி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

கடலிலே காவியம் படைப்போம்”

அப்பவும் சரி இப்பவும் சரி

எனக்குள் இருக்கும் பெரிய கேள்வி

சர்வதேச கடலில் இருந்து எப்படி ஆயுதங்களை இறக்கி பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள்?

ஆயுதம் கொண்டுவருவது பெரிய கப்பல்.

அந்தரம் ஆபத்துக்கு ஒழிக்க முடியாது.

ஏதாவது பிரச்சனை என்றால் வேகமாக ஓடித்தப்பவும் முடியாது.

சாதாரண கப்பல் 15 கடல் மைல்களுக்கு மேல் ஓடவே ஓடாது.

அப்படி இருக்க எப்படி எல்லாம் வித்தைகளைக் காட்டினார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்படி இருக்க எப்படி எல்லாம் வித்தைகளைக் காட்டினார்கள்?

வித்தைகள் மட்டுமல்ல.......
இவ்வளவு  அமைப்புகள் கட்டுக்கோப்புகள் சட்ட திட்டங்களை உருவாக்கி தனி நாடு போல் இயங்கியவர்கள்,முன்னேற்பு செயல்களை  தமக்குள் வைத்திருந்தவர்கள் எங்கு சறுக்கினார்கள்?  
யாரையும் நம்பி தலை மூழ்கி போகக்கூடியவர்களும் அல்ல......

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அப்பவும் சரி இப்பவும் சரி

எனக்குள் இருக்கும் பெரிய கேள்வி

சர்வதேச கடலில் இருந்து எப்படி ஆயுதங்களை இறக்கி பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள்?

ஆயுதம் கொண்டுவருவது பெரிய கப்பல்.

அந்தரம் ஆபத்துக்கு ஒழிக்க முடியாது.

ஏதாவது பிரச்சனை என்றால் வேகமாக ஓடித்தப்பவும் முடியாது.

சாதாரண கப்பல் 15 கடல் மைல்களுக்கு மேல் ஓடவே ஓடாது.

அப்படி இருக்க எப்படி எல்லாம் வித்தைகளைக் காட்டினார்கள்?

கப்பல்கள் நிற்பது சரவதேச கடற்பரப்பு. அங்கு எந்த நாடும் உத்தியோகபூர்வமாக சோதனையிடவோ மறிக்கவோ முடியாது. அந்தக் கப்பல்கள் ஏதோ ஒரு நாட்டில் பதிவு செயப்பட்ட வியாபாரக்கப்பல்கள். சர்வதேசக் கடற்பரப்பில் பல ஆயிரக்கணக்கான இவ்வாறான கப்பல்கள் பயணத்தில் ஈடுபடும் . அதற்குள் சரவதேசரீதில் ஆயுதங்களை கடத்தும் மற்றும் வேறும் பல சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடும் குழுக்களும்  உள்ளன. ஆனால் பத்தோடு பதோனொன்றாக அவை இருப்பதால் கண்டு பிடிப்பது கடினம். 

அந்த சூழ்நிலையை  விடுதலை இயக்கங்கள் தமக்கான வாய்பாக பயற்படுத்துகின்றன.  பயன்படுத்துகின்றன. விடுதலைப்புலிகளுக்கு சொந்த பான கப்பல்களும் ஏதோ ஒரு நாட்டில்  பதிவு செய்யப்பட்ட சர்வதேச வியாபாரக் கப்பல்கள்  தான்.  அவை தினமும் ஆயுதக்கடத்தலில் ஈடுபடுவதில்லை. சந்தர்பங்களை அவதானித்து நிலமை சாதகமாக வரும் போது தான் அதைச்செய்வார்கள்.  விடுதலைப்புலிகளின்  ஆயுத வினியோகங்களை கையாண்ட கேபி அதனை   திறமையாக அதை கையாண்டதால் அவர் பொறுப்பாக இருக்கும் வரை  பெரியளவில் கப்பல்கள் பிடிபடவில்லை. 

இறக்கப்பட்ட ஆயுதங்களை கரைக்கு கொண்டு வருவதில் கடற்புலிகளின் திறமையான படகோட்டிகளின் பங்கும் கடற் கரும்புலிகளின் அர்பணிப்பும்  அளப்பரியது. 

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் உள்ள இணைப்பில் சென்று பாருங்கள்.

https://www.vesselfinder.com

9 hours ago, ஈழப்பிரியன் said:

அப்பவும் சரி இப்பவும் சரி

எனக்குள் இருக்கும் பெரிய கேள்வி

சர்வதேச கடலில் இருந்து எப்படி ஆயுதங்களை இறக்கி பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள்?

ஆயுதம் கொண்டுவருவது பெரிய கப்பல்.

அந்தரம் ஆபத்துக்கு ஒழிக்க முடியாது.

ஏதாவது பிரச்சனை என்றால் வேகமாக ஓடித்தப்பவும் முடியாது.

சாதாரண கப்பல் 15 கடல் மைல்களுக்கு மேல் ஓடவே ஓடாது.

அப்படி இருக்க எப்படி எல்லாம் வித்தைகளைக் காட்டினார்கள்?

 

எத்தனை ஆயிரம் கப்பல்கள் எம்மைச் சுற்றி…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.