Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN  01 JAN, 2024 | 09:17 AM

image
 

செங்கடல் பகுதியில் சரக்குகப்பலொன்றை கைப்பற்ற முயன்ற ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள்  தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பலொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டவாறு ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் நான்கு படகுகள்  அந்த கப்பலை கைப்பற்ற முயன்றன கப்பலிற்கு அருகில் நெருங்கிசென்றன என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அவசர அழைப்பை செவிமடுத்த அமெரிக்க போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் உதவிக்கு விரைந்தன மூன்று படகுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டன அவற்றிலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

நான்காவது படகு தப்பிச்சென்றுவிட்டது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை தங்களின் எச்சரிக்கையை குறிப்பிட்ட வர்த்தக கப்பல் செவிமடுக்க மறுத்தது என தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம்முதல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்களைமேற்கொண்டு வருகின்றனர் -இதுவரையில் 100க்கும் மேற்பட்டஆளில்லா விமானதாக்குதல்களையும் ஏவுகணை தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/172851

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைஅரசும் போர்க்கப்பலை செங்கடல் பகுதிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்பி வைத்துள்ளது. அநேகமாக ஹுதிகளுக்கு இது பிரச்சினையை உருவாக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல் – 21 ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா

Digital News Team

மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கட்டார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் “ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்” (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

Capture-6.jpg

இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

“டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

https://thinakkural.lk/article/287700

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் கடும் ஏவுகணை ஆளில்லா விமான தாக்குதல்கள்

Published By: RAJEEBAN   10 JAN, 2024 | 12:48 PM

image
 

செங்கடல் பகுதியில் கப்பல்களை நோக்கி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பெருமளவு ஏவுகணை தாக்குதல்களைமேற்கொண்டனர் எனவும் இதனை தொடர்ந்து அமெரிக்காவும் பிரிட்டனும் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர்  எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழப்பு மற்றும்காயங்கள் குறித்த தகவல்களை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் துறைமுகநகரங்களான ஹெடெய்டா மொக்கா துறைமுக நகரங்களிலேயே இந்த  தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தனியார் பாதுகாப்பு அமைப்பான அம்பிரேய் தெரிவித்துள்ளது.

ஹெடெய்டா சம்பவத்தில் கப்பல்கள் ஏவுகணைகள்  ஆளில்லா விமான கப்பல்களை பார்ப்பதை  அறிவித்துள்ளன.

மொக்காவில் கப்பல்கள்  ஏவுகணைகள் ஏவப்படுவதையும் ஆளில்லா விமானங்கள் தாக்குவதையும் அவற்றின் பின்னால் சிறிய படகுகள் காணப்படுவதையும் ; கப்பல்கள் பார்த்துள்ளன.

குண்டுகளுடன் ஆளில்லா விமானங்களையும் குருஸ் ஏவுகணைகளையும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றையும்பயன்படுத்தி தாக்குதல்கள் இடம்பெற்றன என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம்தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/173593

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

“டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

டெஸ்ட்ராயர்,  எப் 18 சூப்பர் ஹார்னெட் என்று கலக்கும் அமெரிக்கனுடன் , 5 இத்துப்போன சீனத்து மிக் சங்டுக்களை அதுவும் கப்பலில் ஏற்றி இறக்க முடியாத இறதல், மற்றும் இந்தியனின் பிச்சை கப்பலையும் வைத்துக்கொண்டு ஆசியாவின் பிச்சைக்காரன் போடும் போட்டி   இருக்கே வேற லெவல் 

  • கருத்துக்கள உறவுகள்

Iran seizes oil tanker off Oman in dispute with US

 

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nunavilan said:

Iran seizes oil tanker off Oman in dispute with US

 

 

இதுதான் அரச பயங்கரவாதம். இரான் அழிக்கப்படடால் உலக அமைதி திரும்பும். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Cruso said:

இதுதான் அரச பயங்கரவாதம். இரான் அழிக்கப்படடால் உலக அமைதி திரும்பும். 

ஈரான் போரில் ஈடுபட முன்பு உலக அமைதி இருந்ததா??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

ஈரான் போரில் ஈடுபட முன்பு உலக அமைதி இருந்ததா??

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்போது இருந்தது போல் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்போது இருந்தது போல் இல்லை. 

வியடனமில் ஈரான் நேபாம் குண்டுகளை மக்கள் மீது வீசிய காலத்துக்கு முன்பா பின்பா? 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Cruso said:

இதுதான் அரச பயங்கரவாதம். இரான் அழிக்கப்படடால் உலக அமைதி திரும்பும். 

எப்படி? 

விளக்க முடியுமா? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

வியடனமில் ஈரான் நேபாம் குண்டுகளை மக்கள் மீது வீசிய காலத்துக்கு முன்பா பின்பா? 

அவர்களிடம்தான் கேட்க வேண்டும் 

Just now, Kapithan said:

எப்படி? 

விளக்க முடியுமா? 

😏

ஆதாரம் விளக்கம் எல்லாம் கேட்க கூடாது 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Cruso said:

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்போது இருந்தது போல் இல்லை. 

 

Just now, Cruso said:

அவர்களிடம்தான் கேட்க வேண்டும் 

நீங்கள் எழுதியதை யாரிடம் கேட்க வேண்டும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

 

நீங்கள் எழுதியதை யாரிடம் கேட்க வேண்டும் ? 

நான் ஏன் எழுதினேன் என்பதை முதலில் இருந்து பாருங்கள். இதெல்லாம் தெரியாமல் இருக்கிறீர்களே? 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

அவர்களிடம்தான் கேட்க வேண்டும் 

ஆதாரம் விளக்கம் எல்லாம் கேட்க கூடாது 😂

U.S. Seized Iranian Oil Over Smuggling Incident That Escalated Tensions in Gulf

The apprehension of the ship, the Suez Rajan, came after a group opposed to Iran raised accusations of sanctions violations last year.

  • Share full article
  • Read in app  
 
 

In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one. The advocacy group United Against Nuclear Iran said this satellite image shows the Virgo, left, and the M/T Suez Rajan in the South China Sea. At the time the image was taken, the Virgo reported a false location of about eight miles away. Credit...Planet Labs, via Associated Press

 
 

In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one.

Charlie SavageRonen Bergman

By Charlie Savage and Ronen Bergman

Charlie Savage reported from Washington, and Ronen Bergman from Tel Aviv.

Sept. 6, 2023
Sign up for Your Places: Extreme Weather.  Get notified about extreme weather before it happens with custom alerts for places in the U.S. you choose. Get it sent to your inbox.

 

The United States government has seized nearly one million barrels of Iranian crude oil that it says was being smuggled to China in violation of U.S. sanctions against Iran, after it raised the threat of prosecution to get the tanker brought to American waters, newly unsealed court papers show.

The seizure of the oil from the vessel, the M/T Suez Rajan, is part of a larger and shadowy conflict with Iran. After the tanker began to steam toward the United States last spring, Iran’s Revolutionary Guards C

https://www.nytimes.com/2023/09/06/us/politics/iran-oil-sanctions-violations.html

இதைத்தான் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பது. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

U.S. Seized Iranian Oil Over Smuggling Incident That Escalated Tensions in Gulf

The apprehension of the ship, the Suez Rajan, came after a group opposed to Iran raised accusations of sanctions violations last year.

  • Share full article
  •  
  •  
  • Read in app  
 
 

In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one. The advocacy group United Against Nuclear Iran said this satellite image shows the Virgo, left, and the M/T Suez Rajan in the South China Sea. At the time the image was taken, the Virgo reported a false location of about eight miles away. Credit...Planet Labs, via Associated Press

 
 

In a low-resolution aerial photo, a large orange ship is seen alongside a smaller blue-green one.

Charlie SavageRonen Bergman

By Charlie Savage and Ronen Bergman

Charlie Savage reported from Washington, and Ronen Bergman from Tel Aviv.

Sept. 6, 2023
Sign up for Your Places: Extreme Weather.  Get notified about extreme weather before it happens with custom alerts for places in the U.S. you choose. Get it sent to your inbox.

 

The United States government has seized nearly one million barrels of Iranian crude oil that it says was being smuggled to China in violation of U.S. sanctions against Iran, after it raised the threat of prosecution to get the tanker brought to American waters, newly unsealed court papers show.

The seizure of the oil from the vessel, the M/T Suez Rajan, is part of a larger and shadowy conflict with Iran. After the tanker began to steam toward the United States last spring, Iran’s Revolutionary Guards C

https://www.nytimes.com/2023/09/06/us/politics/iran-oil-sanctions-violations.html

இதைத்தான் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பது. 

🤣

எனக்கு ஆங்கிலம் தெரியாது. தயவு செய்து மொழி பெயர்த்து தரவும். கண்ணுக்கு கண் , பல்லுக்கு  பல் , காலுக்கு கால், கைக்கு கை, வேறே எதுவும் .................😂😜

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

எனக்கு ஆங்கிலம் தெரியாது. தயவு செய்து மொழி பெயர்த்து தரவும். கண்ணுக்கு கண் , பல்லுக்கு  பல் , காலுக்கு கால், கைக்கு கை, வேறே எதுவும் .................😂😜

பூனை கண்களை  மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதாக அர்த்தம் இல்லை.

😏

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

பூனை கண்களை  மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதாக அர்த்தம் இல்லை.

😏

நான் சொல்லவில்லை. யார் சொன்னது ? 😜

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான சர்வதேசக் கடற்பாதையினை முடக்கி, அப்பாதையினூடாக வரும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியும், கடத்தியும் வந்த யெமெனின் ஹூத்திக் கிளர்ச்சிக்காரர்கள் மீது அமெரிக்காவும், இங்கிலாந்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களை  நடத்தியிருக்கின்றன.

சர்வதேச வணிகக் கப்பல்களைத் தாக்குவதன் மூலம் பாலஸ்த்தினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குகிறோம், இஸ்ரேலினைத் தாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு பலமுறை இப்பாதையினைப் பயன்படுத்திய சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா வானூர்திகள் மூலமும், கடற்படைப் படகுகள் மூலமும், உலங்குவானூர்திகள் மூலம் தரையிறங்கியும் ஈரானின் முழு ஆதரவு பெற்ற ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று பலமுறை கேட்டுக்கொள்ளப்பட்டபோதும், "இஸ்ரேலுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களே இவ்வழியால் பயணிக்கின்றன, ஆகவே நாம் தாக்குவோம். எம்மீது அமெரிக்காவோ அல்லது வேறு யாராவதோ தாக்கினால், அவர்கள் மீது நாம் நடத்தும் தாக்குதல் அவர்கள் கனவில் கூட நினைக்க முடியாதளவிற்கு பயங்கரமானதாக இருக்கும்" என்று தமது தாக்குதல்களை நடத்திவிட்டு அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அந்த நிலையிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 

US and UK carry out strikes against Iran-backed Houthis in Yemen | CNN Politics

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரஞ்சித் said:

முக்கியமான சர்வதேசக் கடற்பாதையினை முடக்கி, அப்பாதையினூடாக வரும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியும், கடத்தியும் வந்த யெமெனின் ஹூத்திக் கிளர்ச்சிக்காரர்கள் மீது அமெரிக்காவும், இங்கிலாந்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களை  நடத்தியிருக்கின்றன.

சர்வதேச வணிகக் கப்பல்களைத் தாக்குவதன் மூலம் பாலஸ்த்தினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குகிறோம், இஸ்ரேலினைத் தாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு பலமுறை இப்பாதையினைப் பயன்படுத்திய சர்வதேச வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மூலமும், ஆளில்லா வானூர்திகள் மூலமும், கடற்படைப் படகுகள் மூலமும், உலங்குவானூர்திகள் மூலம் தரையிறங்கியும் ஈரானின் முழு ஆதரவு பெற்ற ஹூத்திக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று பலமுறை கேட்டுக்கொள்ளப்பட்டபோதும், "இஸ்ரேலுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களே இவ்வழியால் பயணிக்கின்றன, ஆகவே நாம் தாக்குவோம். எம்மீது அமெரிக்காவோ அல்லது வேறு யாராவதோ தாக்கினால், அவர்கள் மீது நாம் நடத்தும் தாக்குதல் அவர்கள் கனவில் கூட நினைக்க முடியாதளவிற்கு பயங்கரமானதாக இருக்கும்" என்று தமது தாக்குதல்களை நடத்திவிட்டு அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

அந்த நிலையிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 

US and UK carry out strikes against Iran-backed Houthis in Yemen | CNN Politics

இஸ்ரேலை தாக்குகிறோம் எண்டு கூறிக்கொண்டு ஹூத்தி பயங்கரவாதிகள் சர்வதேச போக்குவரத்து கடடமைப்பை தாக்குவது எவ்வளவு மூடத்தனமான செய்கை. இன்று அதிகாலை அதட்கான பதில்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு கிடைத்தாலும் அதன் அர்த்தம் அவர்களுக்குவிளங்கி இருக்குமோ தெரியவில்லை.

அவர்கள் கூறியபடி கனவிலும் நினைத்துக்கூட முடியாத பயங்கரவாத பதில் தாக்குதல் என்னவென்று பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

houthis.jpg?resize=750,375&ssl=1

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பல நாடுகள் தாக்குதல்!

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை குறிவைத்து பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன.

குறித்த தாக்குதல் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளபப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைக்காலமாக செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வரும் பின்னனியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1365798

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்க பிரிட்டன் தாக்குதல்

Published By: RAJEEBAN   12 JAN, 2024 | 08:26 AM

image
 

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

 

அமெரிக்க போர்க்கப்பல்கள் குரூஸ் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன அமெரிக்க விமானங்கள் 12 இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டன என தகவல்கள் வெளியாகின்றன.

யேமனின் தலைநகர் சனா ஹெளத்திகளின் கோட்டையான செங்கடல் நகரம் குடாய்டா ஆகியவற்றின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சைப்பிரசில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டனின் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

அவுஸ்திரேலியா கனடா பஹ்ரைன் நெதர்லாந்து உட்பட பல நாடுகள் ஆதரவை வழங்கியுள்ளன.

https://www.virakesari.lk/article/173743

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்க பிரிட்டன் தாக்குதல்

Published By: RAJEEBAN   12 JAN, 2024 | 08:26 AM

image
 

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக  அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

 

அமெரிக்க போர்க்கப்பல்கள் குரூஸ் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன அமெரிக்க விமானங்கள் 12 இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டன என தகவல்கள் வெளியாகின்றன.

யேமனின் தலைநகர் சனா ஹெளத்திகளின் கோட்டையான செங்கடல் நகரம் குடாய்டா ஆகியவற்றின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சைப்பிரசில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டனின் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

அவுஸ்திரேலியா கனடா பஹ்ரைன் நெதர்லாந்து உட்பட பல நாடுகள் ஆதரவை வழங்கியுள்ளன.

https://www.virakesari.lk/article/173743

அவர்கள் வயிற்றில் சொருகி உள்ள கத்தியை அமெரிக்கா, பிரிட்டன் கவனிக்கவில்லைபோலும். இனி அவர்களுக்கு கத்தி குத்துதான்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

Published By: RAJEEBAN   19 JAN, 2024 | 11:46 AM

image

செங்கடல் ஊடாக சீன, ரஸ்ய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம் அந்த நாட்டு கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக சரக்கு கப்பல்களை தாக்கிவரும் நிலையிலேயே சீன ரஸ்ய கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் உட்பட சில நாடுகளுடன் தொடர்புபட்ட கப்பல்களை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்களிற்கு ஆபத்தில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா, சீனா உட்பட ஏனைய நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் பயணிப்பதால் ஆபத்து ஏதுவும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174310

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது மீண்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் - கடும் எச்சரிக்கை

Published By: RAJEEBAN   23 JAN, 2024 | 11:02 AM

image

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடி சேமிப்பகங்கள் அவர்களின் ஏவுகணை மற்றும் கண்காணிப்பு நிலைகள் மீது எட்டுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அவசியமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

செங்கடலில் பதற்றத்தை தணித்து  இயல்புநிலையை உருவாக்குவதே எங்களின் நோக்கம் உலகின் மிகவும் முக்கியமான நீர்நிலையில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் உயிர்களையும் சுதந்திரமாக வர்த்தகம் நடைபெறுவதையும் பாதுகாக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்ற எங்களின் எச்சரிக்கையை ஹெளத்தி தலைமைத்துவத்திற்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அமெரிக்காவும் பிரிட்னும் தெரிவித்துள்ளன.

யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள எட்டாவது தாக்குதல் இது .பிரிட்டனுடன் இணைந்து மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுஎஸ்எஸ் ஐஸ்னோவரிலிருந்து சென்ற விமானங்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

https://www.virakesari.lk/article/174589

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.