Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pak.jpeg?resize=750,375&ssl=1

ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!

”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில் ஈரான் அரசு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே பாகிஸ்தான் அரசு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஈரான் எமது மீது மேற்கொண்ட  தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இத் தாக்குதலினால்  அப்பாவிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் ஈரான் அரசு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1366260

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன அமெரிக்காவிடம் உதவி கேட்டு ஓடவேண்டும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

இனி என்ன அமெரிக்காவிடம் உதவி கேட்டு ஓடவேண்டும்.

 

சும்மா பகிடி விடாதேங்கோ விசுகர்! அமெரிக்காவின்ரை உதவி எப்பிடியெண்டு நம்ம செலென்ஸ்கியிட்ட கேட்டுப்பாக்க சொல்லுங்கோ.  செலென்ஸ்கி எப்பிடி மூக்கால அழுறார் எண்டு அப்ப தெரியும்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சும்மா பகிடி விடாதேங்கோ விசுகர்! அமெரிக்காவின்ரை உதவி எப்பிடியெண்டு நம்ம செலென்ஸ்கியிட்ட கேட்டுப்பாக்க சொல்லுங்கோ.  செலென்ஸ்கி எப்பிடி மூக்கால அழுறார் எண்டு அப்ப தெரியும்....🤣

ஓம் அண்ணா பார்த்தேன்

அதி உயர் புட்டின் அவர்கள் யுத்த நிறுத்தம் கேட்டு கெஞ்சியும் செலன்ஸ்சி மூடிட்டு போ என்று சொல்லி விட்டாராமே? 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

ஓம் அண்ணா பார்த்தேன்

அதி உயர் புட்டின் அவர்கள் யுத்த நிறுத்தம் கேட்டு கெஞ்சியும் செலன்ஸ்சி மூடிட்டு போ என்று சொல்லி விட்டாராமே? 

இது முற்றிலும் அவதூறு...........அழிய போவது செலன்ஸ்சி...........மேர்கத்தைய ஊடகங்கள் இஸ்ரேல் சந்திக்கும் அழிவை காட்டுவதில்லை அதே போல் தான் கோமாளி செலன்ஸ்சிய இப்பவும் ஏதோ சூப்பர் கீரோ போல் காட்டினம்............புட்டின் தான் போரை அறிவித்தார் போரின் நோக்கம் வெற்றி அடையும் வரை ரஸ்சியா உக்கிரேன் மீது போர் தொடுக்கும்...........இதுவரை எத்தனை வில்லியன் காசை அமெரிக்கா தொட்டு நேட்டோ நாடுகள் கொடுத்து இருப்பினம் உக்கிரேனுக்கு😆😁................

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இனி என்ன அமெரிக்காவிடம் உதவி கேட்டு ஓடவேண்டும்.

 

அப்படி எல்லாம் பாகிஸ்தான் ஈரானை தாக்காது. பாகிஸ்தானின் அரசியல் நிலைமை அதட்கு இடம் கொடுக்காது.

எல்லா பக்கமும் பிரச்சினை. இந்தியாவை சமாளிக்க வேண்டும். ஆபிகானிஸ்தானை சமாளிக்கவேண்டும். ஏறக்குறைய ஒரு லட்ச்சம் அபிகானிஸ்தானியர்களை வெளியேற்றி கொண்டிருக்கிறது. பலுசிஸ்தான் போராளிகள்தாக்குதல் நடத்துகிறார்கள். ஷீஆ சுன்னி என குண்டு வெடிப்புக்கள். எனவே இந்த எச்சரிப்புடன் அது முடிவுக்கு வந்து விடும்.

அமெரிக்காவிடம் இனி அவர்கள் போக மாடடார்கள். இப்போது பாகிஸ்தான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக்கிடைத்த செய்திகளின்படி பாக்கிஸ்தான் இன்று வியாழன் காலை இரானின் எல்லைப் பகுதியில் உள்ள சரவான் நகர்பகுதியை ஏவுகணை கொண்டு  தாக்கி  பதிலடி வழங்கியுள்ளது.

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு எதிராக தான் தாக்குதல் தொடுத்ததாகவும் அறிவித்துள்ளது.

இவ்விரண்டு ஆயுதக் குழுக்களும் இரானை தளமாக பயன்படுத்தி பாக்கிஸ்தானின் தென்பகுதில் உள்ள மாநிலமான பலுசிஸ்தானின் விடுதலைக்காக போராடுகின்றன.

 

https://edition.cnn.com/2024/01/18/middleeast/pakistan-targets-locations-iran-intl-hnk/index.html

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சும்மா பகிடி விடாதேங்கோ விசுகர்! அமெரிக்காவின்ரை உதவி எப்பிடியெண்டு நம்ம செலென்ஸ்கியிட்ட கேட்டுப்பாக்க சொல்லுங்கோ.  செலென்ஸ்கி எப்பிடி மூக்கால அழுறார் எண்டு அப்ப தெரியும்....🤣

 

10 hours ago, விசுகு said:

ஓம் அண்ணா பார்த்தேன்

அதி உயர் புட்டின் அவர்கள் யுத்த நிறுத்தம் கேட்டு கெஞ்சியும் செலன்ஸ்சி மூடிட்டு போ என்று சொல்லி விட்டாராமே? 

😁........

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Cruso said:

இப்போது பாகிஸ்தான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

பாகிஸ்தானில் மட்டுமா? உலகில் பல நாடுகள் சீனாவின் வசம் தானே....ஐரோப்பிய நாடுகள் உட்பட.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, விசுகு said:

ஓம் அண்ணா பார்த்தேன்

அதி உயர் புட்டின் அவர்கள் யுத்த நிறுத்தம் கேட்டு கெஞ்சியும் செலன்ஸ்சி மூடிட்டு போ என்று சொல்லி விட்டாராமே? 

மேற்கத்திய   BBC,CNN  போன்ற   ஊடகங்களை விட்டு கொஞ்சம் வெளியே வந்து பாருங்கள் விசுகர்! இதே ஊடகங்கள் தான் ஈராக்கில் கெமிக்கல் ஆயுதங்கள் உள்ளது என தார் பீப்பாக்களை காட்டி உலகில் உள்ள எல்லா ஊடகங்களையும் எல்லாம் மக்களையும் நம்ப வைத்தவர்கள். இதே மேற்கத்தைய ஊடகங்கள் தான் ஈழத்தில் நடந்த பேரழிவுகள் அனைத்தையும் மறைத்தவர்கள்.
மேற்கத்தையவர்களே இப்போது தங்கள் முக்கிய ஊடக செய்திகளை நம்புவதை குறைத்துக்கொண்டு வருகின்றார்கள். அதற்காக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் நம்பகரமானவை என நான் சொல்ல வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

மேற்கத்திய   BBC,CNN  போன்ற   ஊடகங்களை விட்டு கொஞ்சம் வெளியே வந்து பாருங்கள் விசுகர்! இதே ஊடகங்கள் தான் ஈராக்கில் கெமிக்கல் ஆயுதங்கள் உள்ளது என தார் பீப்பாக்களை காட்டி உலகில் உள்ள எல்லா ஊடகங்களையும் எல்லாம் மக்களையும் நம்ப வைத்தவர்கள். இதே மேற்கத்தைய ஊடகங்கள் தான் ஈழத்தில் நடந்த பேரழிவுகள் அனைத்தையும் மறைத்தவர்கள்.
மேற்கத்தையவர்களே இப்போது தங்கள் முக்கிய ஊடக செய்திகளை நம்புவதை குறைத்துக்கொண்டு வருகின்றார்கள். அதற்காக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் நம்பகரமானவை என நான் சொல்ல வரவில்லை.

நான் இணைத்த‌ காணொளிக்கு இர‌ண்டு அப்பாவிக‌ள் ரெட் வ‌ட்டினை அம‌த்தி போட்டு போய் இருக்கின‌ம்...........புட்டின் போர் நிறுத்த‌ம் கேட்டு கோமாளி செல‌ன்ஸ்சியிட‌ம் கெஞ்சினவேறாம்............இது உல‌க‌மா பொய் என்று அர‌சிய‌ல் புரித‌ல் உள்ள‌ பாட‌சாலை சிறுவ‌ர்க‌ளுக்கு கூட‌ தெரியும்🤣😁😂.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pak.jpeg?resize=750,375&ssl=1

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்!

”தங்கள் நாட்டின் மீது பாக்கிஸ்தான் அரசு  நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு” ஈரான் அரசு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாக்கிஸ்தான் மீது ஈரான் நடத்திய வான்வெளித்தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்ததோடு மூவர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் விமானப்படை ஈரானில் உள்ள  7 இடங்களில் வான்வெளித்தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ” இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் எனவும், இத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு உடனடியாகப் பதில் அளிக்கவேண்டும் எனவும்  ஈரான் எச்சரித்துள்ளது.

https://athavannews.com/2024/1366487

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

 

 இத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு உடனடியாகப் பதில் அளிக்கவேண்டும் எனவும்  ஈரான் எச்சரித்துள்ளது.

https://athavannews.com/2024/1366487

அதாவது உங்கள் நாட்டுக்குள் நாங்கள் தாக்குதல் நடத்தலாம். நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். ஈரானின் கடடளை  எப்படி இருக்குது? எப்படியோ சீன இப்போது களத்தில் இறங்கி இருக்கிறது. தனது இரு நடபு நாடுகள் சண்டை பிடிப்பது அவர்களுக்கு பிரச்சினைதானே. 

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ஆட்களை பற்றி தெரியாது.  ஈரானிய மதவாத அரசை கடுமையாக

வெறுக்கும் ஈரானியர்கள் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பாகிஸ்தான் ஆட்களை பற்றி தெரியாது.  ஈரானிய மதவாத அரசை கடுமையாக

வெறுக்கும் ஈரானியர்கள் இருக்கின்றார்கள்.

பொதுவாக ஈரானியர்கள் நாகரீகமாக படித்து வளர்ந்தவர்கள். ஷாவின் ஆட்சி முடியும் வரைக்கும் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். கொமேனியின் ஆட்சி வந்த பின்னர் எல்லாம் தலைகீழாக மாறியது. அதுதான் அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது. ஐம்பதுக்கு ஐம்பது வீதமானோர் எதிராகத்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியில் கட்டுப்பாடுகளும், மரண தண்டனைகளும் இருப்பதால் அடக்கி வாசிக்கிறார்கள்.

பாகிஸ்தான் அப்படி இல்லை. அந்த நாள் தொடக்கம் மதவாத சிந்தனை கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால்தான் வழி நடத்தப்படுகின்றது. எனவே இன்னும் அந்த அடிப்படையில் பிற மதத்தினரை கொலை செய்வதும் மத மாற்றம் செய்வதும் நடக்கின்றது. பிற மதத்தினர் யார் மீதாவது கோபம் இருந்தால் தெய்வ நிந்தனை செய்தார்கள் என்று கூறி கொலை செய்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Cruso said:

பொதுவாக ஈரானியர்கள் நாகரீகமாக படித்து வளர்ந்தவர்கள். ஷாவின் ஆட்சி முடியும் வரைக்கும் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். கொமேனியின் ஆட்சி வந்த பின்னர் எல்லாம் தலைகீழாக மாறியது. அதுதான் அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது. 

மன்னர் ஷாவின் ஆட்சி நேர்மையாக இருந்திருந்தால் கொமேனி பிரான்ஸ்ல் இருந்து ஈரானுக்கு சென்று புரட்சி செய்திருக்க முடியாது..ஷா நாட்டு சொத்துக்களை கொள்ளையடிப்பதில் குறியாக இருந்து வெள்ளைகளின் திறந்த வெளி கலாச்சாரத்தை அனுமதித்தவர்

அரச ஆட்சியுடன் சேர்ந்து ஜனநாயக ஆட்சியையும் புகுத்தியிருந்தால் ஈரான் இன்றும் சொர்க்கபுரியாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மன்னர் ஷாவின் ஆட்சி நேர்மையாக இருந்திருந்தால் கொமேனி பிரான்ஸ்ல் இருந்து ஈரானுக்கு சென்று புரட்சி செய்திருக்க முடியாது..ஷா நாட்டு சொத்துக்களை கொள்ளையடிப்பதில் குறியாக இருந்து வெள்ளைகளின் திறந்த வெளி கலாச்சாரத்தை அனுமதித்தவர்

அரச ஆட்சியுடன் சேர்ந்து ஜனநாயக ஆட்சியையும் புகுத்தியிருந்தால் ஈரான் இன்றும் சொர்க்கபுரியாக இருந்திருக்கும்.

கொமேனி புரட்சி செய்தது ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கல்ல. இஸ்லம்மிய அடிப்படைவாதத்தை கொண்டு வருவதட்காகவே. இப்போது நடப்பது என்னவென்று தெரிந்தால் இப்படி எழுத மாடதீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Cruso said:

கொமேனி புரட்சி செய்தது ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கல்ல. இஸ்லம்மிய அடிப்படைவாதத்தை கொண்டு வருவதட்காகவே. இப்போது நடப்பது என்னவென்று தெரிந்தால் இப்படி எழுத மாடதீர்கள். 

நவநாகரீகமாக  வாழ்ந்த ஈரான் மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஏன் தள்ளப்பட்டார்கள் என்பதையும் சிந்திக்கணும். முல்லாக்களின் கொடுமைகள் எனக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நவநாகரீகமாக  வாழ்ந்த ஈரான் மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஏன் தள்ளப்பட்டார்கள் என்பதையும் சிந்திக்கணும். முல்லாக்களின் கொடுமைகள் எனக்கும் தெரியும்.

அடிப்படை வாதத்திட்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. அயேதெல்லா கொமேனியாட்சிக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலமைபுரிந்தது. அப்போது  அது மிகவும் தாமாதமாகி விட்ட்து. உள்ளதையும் இழந்தாய் போற்றி என்ற நிலைமைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

அடிப்படை வாதத்திட்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. அயேதெல்லா கொமேனியாட்சிக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலமைபுரிந்தது. அப்போது  அது மிகவும் தாமாதமாகி விட்ட்து. உள்ளதையும் இழந்தாய் போற்றி என்ற நிலைமைதான். 

ஈரானியர்களுக்கு வராத கவலையெல்லாம் குசுசோவுக்கு வந்திருக்கிறது  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Cruso said:

அடிப்படை வாதத்திட்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. அயேதெல்லா கொமேனியாட்சிக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு நிலமைபுரிந்தது. அப்போது  அது மிகவும் தாமாதமாகி விட்ட்து. உள்ளதையும் இழந்தாய் போற்றி என்ற நிலைமைதான். 

ஈரானில் பல அடக்குமுறைகள் இருந்தாலும் அந்த நாட்டு சட்டதிட்டங்கள்,விதிமுறைகள் பிடிக்காதவர்கள், நாட்டை விட்டு வெளியேறி போகலாம். எந்த  தடையும் இல்லை. இந்த நாட்டுக்குள் இருப்பதாயின் எங்கள் சட்டங்களுக்கைய இரு.இதை முல்லா அரசு நேரடியாகவே சொல்கின்றது.நாட்டை விட்டு வெளியேறுபவர்களைப்பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதேயில்லை. ஆயினும் ஏனைய முஸ்லீம் நாடுகளில் சவூதி உட்பட பல அடக்குமுறை சட்டங்கள் இருந்தாலும் ஆடை அவிழ்ப்பு கலாச்சாரத்தினர்  அதை கண்டு கொள்வதேயில்லை.😎

இதே போல் தான் ரஷ்யாவில் வாழ்பவர்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகில் எந்த மூலையிலும் வாழலாம். அதற்கு எந்த தடையுமில்லை. வெளியேறுபவர்கள் ரஷ்யாவை காட்டிக்கொடுக்காத வரைக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை.இருப்பினும் ரஷ்யாவை விட்டு வெளியேறிய பணக்காரர்களின் சொத்துக்களை உக்ரேன் பிரச்சனையை சாட்டி கொள்ளையடித்தது இந்த மேற்குலகம். அது சரி ........மாற்றானின் சொத்துக்களை கொள்ளையடிப்பது சுரண்டுவதிலும் கொள்ளையடிப்பதிலும் மேற்கத்தையவர்கள் கை தேர்ந்தவர்கள் இல்லை.....இல்லை. அவர்கள் இரத்தத்தில் ஊறியது.😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஈரானியர்களுக்கு வராத கவலையெல்லாம் குசுசோவுக்கு வந்திருக்கிறது  😁

அப்படி இல்லை. பொதுவாக கூறினால் அநேகமான இரானிய மக்கள் நல்லவர்கள். இங்கு கொமேனியின் அடிப்படை மதவாதம் அவர்களை ஆட்டி படைக்கிறது.

இப்போது இந்தியாவில் மதவாதம் இப்போது எப்படி கோலோச்சுகிறது என்று பாருங்கள். தமிழ நாட்டில் கோவில்கள் எல்லாம் ஒழுங்காக சுத்தமாக இருக்கின்றது. ஆனாலும் என்ன , மதவாத ஆளுநர் அண்ணாமலை போன்றோர் கோவில் கோவிலாக சென்று சுத்தம் செய்கிறோம் என்று தண்ணீர் ஊற்றி கழுவுகிறார்கள்.

அதாவது அங்கு குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவர்களின் நோக்கம். அதுதான் நான் அந்த மக்கள் குறித்து கவலைப்படுகின்றேன். 

2 hours ago, குமாரசாமி said:

ஈரானில் பல அடக்குமுறைகள் இருந்தாலும் அந்த நாட்டு சட்டதிட்டங்கள்,விதிமுறைகள் பிடிக்காதவர்கள், நாட்டை விட்டு வெளியேறி போகலாம். எந்த  தடையும் இல்லை. இந்த நாட்டுக்குள் இருப்பதாயின் எங்கள் சட்டங்களுக்கைய இரு.இதை முல்லா அரசு நேரடியாகவே சொல்கின்றது.நாட்டை விட்டு வெளியேறுபவர்களைப்பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதேயில்லை. ஆயினும் ஏனைய முஸ்லீம் நாடுகளில் சவூதி உட்பட பல அடக்குமுறை சட்டங்கள் இருந்தாலும் ஆடை அவிழ்ப்பு கலாச்சாரத்தினர்  அதை கண்டு கொள்வதேயில்லை.😎

இதே போல் தான் ரஷ்யாவில் வாழ்பவர்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகில் எந்த மூலையிலும் வாழலாம். அதற்கு எந்த தடையுமில்லை. வெளியேறுபவர்கள் ரஷ்யாவை காட்டிக்கொடுக்காத வரைக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை.இருப்பினும் ரஷ்யாவை விட்டு வெளியேறிய பணக்காரர்களின் சொத்துக்களை உக்ரேன் பிரச்சனையை சாட்டி கொள்ளையடித்தது இந்த மேற்குலகம். அது சரி ........மாற்றானின் சொத்துக்களை கொள்ளையடிப்பது சுரண்டுவதிலும் கொள்ளையடிப்பதிலும் மேற்கத்தையவர்கள் கை தேர்ந்தவர்கள் இல்லை.....இல்லை. அவர்கள் இரத்தத்தில் ஊறியது.😂

ஆடை அவிழ்ப்பு கலாச்சாரம் என்று நீங்கள் கூறுவது என்ன ? அதை விளக்கமாக எழுதினால் நல்லது. குறைந்தது நீங்கள் பின் பற்றும் ஆடை கலச்சாரத்தையாவது ஈரானில் அறிமுக படுத்தலாம் இல்லையா? அதட்கும் நீங்கள் இணங்காவிடடாள் ஒன்றும் செய்ய முடியாது.

இன்னும் மேட்கத்தயா நாடுகளை குறை கூறி கொண்டு அங்கு அவர்களின் வசதி வாய்ப்புக்களை பயன்படுத்தி சந்தோசமாகா வாழ்வது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Cruso said:

அப்படி இல்லை. பொதுவாக கூறினால் அநேகமான இரானிய மக்கள் நல்லவர்கள். இங்கு கொமேனியின் அடிப்படை மதவாதம் அவர்களை ஆட்டி படைக்கிறது.

இப்போது இந்தியாவில் மதவாதம் இப்போது எப்படி கோலோச்சுகிறது என்று பாருங்கள். தமிழ நாட்டில் கோவில்கள் எல்லாம் ஒழுங்காக சுத்தமாக இருக்கின்றது. ஆனாலும் என்ன , மதவாத ஆளுநர் அண்ணாமலை போன்றோர் கோவில் கோவிலாக சென்று சுத்தம் செய்கிறோம் என்று தண்ணீர் ஊற்றி கழுவுகிறார்கள்.

அதாவது அங்கு குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவர்களின் நோக்கம். அதுதான் நான் அந்த மக்கள் குறித்து கவலைப்படுகின்றேன். 

உங்கள் கவலை உண்மையானதாக இருக்குமானால் உங்கள் கவலை  முழுமத்திய  கிழக்கு நாடுகளில்  தொடர்பாக இருந்தால் அது நியாயம். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

உங்கள் கவலை உண்மையானதாக இருக்குமானால் உங்கள் கவலை  முழுமத்திய  கிழக்கு நாடுகளில்  தொடர்பாக இருந்தால் அது நியாயம். 

😁

பயங்கரவாதிகளை நான் ஆதரிப்பதில்லை. 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

பயங்கரவாதிகளை நான் ஆதரிப்பதில்லை. 😜

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் என்ன? யார் எழுதியது? 

😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.