Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மௌனம்

Featured Replies

மொழிகளில் பலமானது மௌனம் என்று எங்கோ எப்போதோ வாசித்த ஒரு ஞாபகம். இக்கூற்று நியாயமானதா, லொஜிக்கலானதா என்ற ஆராய்ச்சிகளிற்கெல்லாம் அப்பால், உலக அரசியலைப் பொறுத்தவரை இக்கூற்று கவனத்திற் கொள்ளப்படவேண்டி ஒன்றாகவே தோன்றுகின்றது. உதாரணமாக, அண்மைக்காலமாக புலம்பெயர் "ஆய்வாளர்கள்" விடுதலைப்புலிகளின் மொனத்திற்கு மனம் போன போக்கில் காரணம் கற்பித்து வருவது இங்கு நோக்கத்தக்கது.

இந்நிலையில், அண்மையில் எனது கவனத்தை ஈர்த்த ஒரு உலக அரசியல் மௌனம் தொடர்பான ஒரு சிறு பதிவாகவே இப்பதிவு அமைகிறது.

இம்மாதம் 6ம் நாள் (06-09-2007), இஸ்றேல் சிரியாமீது ஒரு வான் தாக்குதலை நிகழ்த்தியது என்ற செய்தி, சம்பவம் நடந்து ஏறத்தாள பத்து நாட்களின் பின்னர் தான் பரந்த அளவில் வெளியானது. இருப்பினும் ஏன் இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இன்னமும் சுவாரசியமான மௌனமே அனைத்து மட்டங்களிலும் நிலவுகின்றது. இஸ்றேலின் இக்குண்டுத்தாக்குதல் பல முனைகளில் சுவாரசியமானது.

முதலாவதாக, சிரியாவிற்கும் இஸ்லேலிற்குமிடையேயான பொதுவான எல்லை ஒன்று உள்ளது என்ற போதிலும் கூட, மேற்படி குண்டுத் தாக்குதலிற்காக இஸ்ரேல் துருக்கியின் மீதாகப் பறந்து சிரியாவைச் சுற்றி வளைத்து அடைந்துள்ளது. ஏன் இவ்வாறு இஸறேல் செய்தது என்பது ஒருபுறமிருக்க, இத்தாக்குதலிற்காக இஸ்றேல் தமது வான்பரப்பினூடு பறந்து செல்வதைத் துருக்கிய இராணுவம் முற்கூட்டி அறிந்துள்ளதோடு அனுமதியும் வழங்கியுள்ளது என்பது இங்கு முக்கியமானது.

அடுத்து, சிரியாவிற்கும் இஸ்றேலிற்குமிடையே ஏறத்தாள நாற்பது ஆண்டுகளளவிலான நீட்சியுடைய நல்லுறவின்மை நீடிக்கின்றபோதிலும், தனது நிலத்தில் அத்துமீறி எதிரி இஸ்றேல் நுழைந்து நிகழ்த்திய இத்தாக்குதல் பற்றி சிரியா இன்னமும் மௌனம் காக்கின்றது. அதுமட்டுமன்றி, சிரியாவில் அனேக சிரியர்கள் இத்தாக்குதல் பற்றி அதிகம் அறியாதவர்களாகவே இன்னமும் உள்ளார்கள் என்ற செய்தியும் இணையத் தளங்களில் நிறைகிறது.

தாக்குதலிற்குள்ளான சிரியா தான் விடயத்தை மூடி மறைக்கின்றது என்றால், தாக்குதலை நடாத்திய இஸ்றேலும் கூட, ஏன் தான் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது என்று கூற மறுக்கின்றது. எனினும், இத்தாக்குதல் தொடர்பில் தனக்கும் முற்கூட்டியே விளக்கமளிக்கப்பட்டுத் தனது அனுமதியும் பெறப்பட்டது என்று இஸ்றேலின் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். பிரதமர் மட்டும் முடிவெடுக்கும் நிலைக்கு மேற்பட்டு நிலைமையின் கனதி பெரியது என்றும், அதனால் தான் எதிர்க்கட்சித் தலைவரும் ஆலோசிக்கப்பட்டார் என்றும் இஸ்றேல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் நிலமை கனதியானது என்பதற்கு மேல் எவரும் எதுவும் கூற மறுக்கின்றாhர்கள்..

இனி அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் பார்த்தால், சனாதிபதி பு~; இது பற்றித் தான் கருத்தெதையும் வெளியிட விரும்பவில்லை என்று அறுதியாக மறுத்துவிட்டார். இருந்தபோதிலும், வடகொரிய அணு விடயங்களை ஏற்றுமதிசெய்வதற்கெதிராகத் தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாக பு~; கூறியுள்ளளார். பு~;~pனுடைய மேற்படி வடகொரியா பற்றிய சம்பந்தா சம்பந்தமற்ற கூற்றானது இஸ்றேலின் சிரியா மீதான தாக்குதல் பற்றி ஒரு ஊகத்தினை உண்டு பண்ணி உள்ளது. அதாவது, வடகொரியா தனது அணு உற்பத்தி தொடர்பில் மேற்கின் கட்டுப்பாடுகளிற்குள் வருவது போன்றதான ஒரு மாயையினை ஏற்படுத்தும் நோக்கத்தின் ஒருபடியாக, சில அணுஉற்பத்திப் பொருட்களைத் தனது நேசநாடான சிரியாவின் மண்ணில் ஒளித்து வைக்க முயன்றது என்றும், இதனை அறிந்துகொண்ட இஸ்றேல், குறிப்பிட்ட விடயத்தை குண்டு வீசி அழித்துள்ளது என்பதுமே ஊகம்.

ஏனினும், வடகொரியா அணுவுற்பத்திப் பொருட்களை சிரியாவிற்குக் கப்பல் மூலம் எடுத்துவருவது என்றால் அது சூயெஸ் கால்வாய் ஊடாகவே மேற்கொள்ளப்படக்கூடியது. ஆனால் சூயெஸ் கால்வாயினூடாக அணு சம்பந்தமான பொருட்களுடன் ஒரு கப்பல் செல்லுமாயின் அதனை எகிப்தின் கண்டறிகருவிகள் கண்டுபிடித்துவிடும். எகிப்து அப்படி எதனையும் கண்டிருக்கவில்லை. எனவே வடகொரியா அணுவுற்பத்திப் பொருட்களை சிரியாவிற்குள் எடுத்து வந்தது என்றால், அதை அது எவ்வாறு எகிப்து அறியாது எடுத்து வந்தது என்ற கேள்வி இன்னமும் கேள்வியாகவே இருக்கின்றது.

மேற்படி ஊகம் தொடர்பில், வடகொரியா ஒரு சுருக்கமான அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளது. "எந்த நாட்டிற்கும் நாங்கள் அணுவுற்பத்திப் பொருட்கள் எதனையும் ஏற்றுமதி செய்வதில்லை" என்பதே வடகொரியாவின் சுருக்கமான செய்தி.

அடுத்து, ஈரான் மீதான ஒரு தாக்குதலிற்கான ஒத்திகையே இது என்றும் ஒரு ஊகம் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, ஏதேனும் தானியங்கி வான்பாதுகாப்புக் கட்டமைப்புக்களை ஈரான் நிர்மாணித்துள்ளதா என்று கண்டறிவதற்காகவே இவ்வொத்திகை என்பது இவ்வூகம். எனினும், இவ்வூகமும் அதிகம் தாக்குப் பிடிக்கமுடியாததாகவே காணப்படுகின்றது. ஏனெனில், அவ்வாறு இது ஈரானிற்கான ஒத்திகை என்றால், ஏன் சிரியா இத்தாக்குதல் தொடர்பில் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாது மூடிமறைக்கின்றது என்ற கேள்வி பிறக்கின்றது. மேலும், ஈரான் கூட இத்தாக்குதல் தொடர்பில் "இஸ்றேல் எம்மைத் தாக்கினால் நாம் இஸ்றேலை அழித்துவிடுவோம்" என்ற ஒரு அறிவிப்பிற்கு மேலால் அதிகமாய் எந்தச் சத்தமும் எழுப்பவில்லை.

இந்நிலையில், மூன்றாவது ஊகம் ஒன்று எழுப்பப்படுகின்றது. அதாவது, சிரியாவில் இருந்து கிஸ்புல்லாவிற்காக லெபனான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ஆயத தளபாட தொடரணியே தாக்கப்பட்டது என்பதே இவ்வூகம். ஆனால், சிரியாவிற்கும் இஸ்றேலிற்குமிடையே நாற்பது வருடகால முறுகல் இருந்து வருகையில், சிரியாமீது இஸ்றேல் அத்துமீறிப் பறந்து குண்டு பொழிந்தது என்பதும், அதனையிட்டு சிரியாவும் ஈரானும் மூடி மறைக்கின்றன என்பதும் ஏற்றுக் கொள்ளும் விதமாகவில்லை. மேலும், அத்தகைய ஒரு தாக்குதலிற்கு, இஸ்றேல் சிரியாவுடனான தனது பொது எல்லையைப் பயன்படுத்தாது எதற்காக துருக்கி மீதாகச் சுற்றிப் பறந்தது என்பதும் கேள்வியாகின்றது.

மொத்தத்தில் இஸ்றேல் சிரியா மீது நடத்திய இந்த வான் தாக்குதல் பற்றி ஒட்டுமொத்த உலகே வாய்மூடி மொனிகளாகத் தொடர்கின்றன.

இஸ்றேலின் இந்தத் தாக்குதலை ஆர்பாட்டம் செய்து எதிர்பதற்கு சிரியாவிற்கோ ஈரானிற்கோ போதிய பலமுள்ளது என்பது கேள்விக்கப்பாற்பட்டது. அது போன்றே தனது வான்பரப்பை ஊடறுத்துச் சென்ற இஸ்றேல் விமானத்தைப் பார்த்துக் கொண்டு தலைசொறிய துருக்கிய ஆயுதபடைகள் ஒன்றும் கையாலாகாதனவல்ல. இருந்தும் அனைத்து நாடுகளும் மௌனம் காக்கின்றன. எதிரிகளும் நண்பர்களுமாக அத்தனை பேரும் கூட்டாக மௌனம் காக்கின்றார்கள். ஏன் என்பது, ஊகங்களிற்கு அப்பால், இன்னமும் விடுகதையாகவே உள்ளது.

எனவே, மௌனம் என்பது பலவீனத்தின் அறிகுறியாகத் தான் இருக்கவேண்டும் என்பதல்ல என்பதனை ஈழத்தமிழர்கள் நாம் இத்தருணத்தில் நினைத்துப் பார்ப்பது பொருத்தமானது.

Edited by Innumoruvan

புலிகளின் மௌனத்தைக் கலைக்க மகிந்த அரசாங்கம் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. யுத்த நிறுத்த மீறல்கள், பொதுமக்கள் படுகொலை, கிழக்கு வெற்றி, சிலாவத்துறை வெற்றி போன்றன இவற்றிற்குள் அடங்கும். புலிகளும் மௌனம் காத்து தமது பலத்தைக் காட்டியுள்ளனர். நிறைகுடம் தளம்பாது என்பதுபோல் பலமானவர்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

மௌன மொழியின் பலம் புரிகிறது. ஆனால் அதன் சரியான அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.

பாராட்டுக்கள், இன்னுமொருவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு .தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

  • தொடங்கியவர்

இணையவன், சஜீவன்

உங்கள் கருத்திற்கு நன்றி.

மெளனமொழியில் உள்ள பலத்தை உங்கள் ஆக்கத்தில் இருந்து அறிய கூடியதாக இருந்தது பல விசயங்களை உள்வாங்க கூடியதாக இருந்தது நல்லதொரு ஆக்கம்...... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.