Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 FEB, 2024 | 02:58 PM
image

ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தாயாரை கவனித்துக் கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண  ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதே வேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் வந்துசேரவில்லை சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/176281

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால சிறை வாசம்: இலங்கை திரும்பும் சாந்தன்! இந்திய அரசு கொடுத்தது அனுமதி

Screenshot-2024-02-14-at-10.27.21%E2%80%

சாந்தன் என்கிற தில்லையம்பலம் சுதேந்திரராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் வழங்கியுள்ளன.

இதனால், தனது முதுமைக் காலத்தில் மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்கின்ற சாந்தனின் தாயாரின் கனவும் நனவாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் உள்ளிட்ட ஏழு பேரையும் இந்திய உச்சநீதிமன்றம் விடுவித்திருந்தது.

இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, நீதியரசர்கள் பி.ஆர் கவாய் மற்றும் பி.வி நாகரட்ணா ஆகியோர் சாந்தன் உட்பட அனைவரையும் விடுவித்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தனர்.

சாந்தன் இலங்கை திரும்பிச் செல்வதற்கான தற்காலிக பயண ஆவணத்தை சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் இந்த மாதத்தின் முற்பகுதியில் வழங்கியிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அவரது பயணத்திற்கான அந்த மூல ஆவணம், தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மேலும், அவரை நாட்டிற்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு துணைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. “இந்த பயண ஆவணம் கிடைக்கப்பெற்றதென்பதை நீங்கள் தெரிவித்தால் நன்று, மேலும் அவரை விரைவாக நாடு கடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்து, அது குறித்த விபரங்களை எமக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் உயரதிகாரி தமிழக அரசுக்கு எழுதியிருந்தார்.

தற்போது, திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான பயண ஆவணமானது இந்திய மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்னதாக, வயதான தனது தாயாருடன் வசிக்க வழியேற்படுத்தும் வகையில் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென சாந்தன் இந்திய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை, அவரது தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரியும் இந்தியப் பிரதமர் நரேந்தி மோடிக்கு கண்ணீர் மல்க நேரடியாக ஒரு வேண்டுகோளை காணொளி மூலம் விடுத்திருந்தார்.

சாந்தனின் மனுக்கு உரிய பரிந்துரையுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய அரசுக்கு மாநில அரசால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலிருந்த சாந்தனின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு மூச்சிழுப்பு இருந்ததோடு வயிற்றில் திரவம் நிரம்பி கால்கள் வீக்கமடைந்திருப்பதாகவும், அவருக்கு உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை தேவைப்படும் எனவும், அவரது உடல்நிலை ஸ்திரமடைந்த பின்னர் அதை செய்யலாம் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, அவரது சட்டத்தரணி பாண்டியன் புகழேந்தி, அவரது உடல்நிலை சிறிது முன்னேறியுள்ளதாகவும் அவரால் பயணிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=268497

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி

Published By: RAJEEBAN    24 FEB, 2024 | 07:12 AM

image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட,  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.

இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன. 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னர், சாந்தனின் வேண்டுகோளை அடுத்தும், உயா் சிகிச்சைக்காகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் கூறினா்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது. 

https://www.virakesari.lk/article/177164

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.

முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/292993

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூளைமேட்டு படுகொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்கிளசை சொறீலங்கா அரசு எப்படி பாதுகாத்து அமைச்சர் பதவி கொடுத்து.. ஏவலாளியாக வைச்சிருக்குதோ.. அந்தளவுக்கு இல்லை என்றாலும்.. தாயகம் திரும்பும் சாந்தனை சொறீலங்கா அதிகாரிகள் துன்பப்படுத்தாமல்.. அவரை சுதந்திரமாக வாழ அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

 

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப  அரசு அனுமதி!

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி!

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.

முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

(செய்தி பின்னணி)

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், இந்த நாசாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்ப கோரி கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=184400

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் விக்னேஷ் வரைய நமக ஓம் விக்னேஷ் வரைய நமக சந்தன சேற்றின் மகிமை கண்டாயா சண்முக அண்ணன்  
    • ஈழத்து இசைப்பரப்பில் தவிர்க்க முடியாத ஆனால் ஆர்ப்பாட்டமில்லா ஆளுமை     பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன ஓரிரு நாட்களுக்குள்ளே அவர் மறைந்த நாள் வந்தது. நெஞ்சம் கனக்கிறது. "பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது" அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் காலத்தாலும் அழிக்க முடியாதது. அவை பற்றி விரைவில் பதிவிடுவேன். அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய இசைப் பணிகளில் சிலவற்றைத் தகவலுக்காக இங்கே பதிவிடுகிறேன். 1.இந்திய அமைதிப் படை ஆக்கிரமித்திருந்த 80களின் இறுதியில் சுய முயற்சியாக விடுதலைப் பாடல் தொகுப்பு. (இதன் தலைப்பு நினைவிலில்லை) 2. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த"ஓ.... மரணித்த வீரனே" பாடல் சில மாற்றங்களுடன் மீள் ஒளிப்பதிவு. 3.1994 இல் "பிஞ்சுமனம்" திரைப்படத்திற்கு இசையமைப்பு. இது தான் அவர் இசையமைத்த முதல் திரைப்படம். 4. 1995இல் கலைண்பாட்டுக் கழகம்- மகளிர் பிரிவு தயாரித்து வெளியிட்ட இவர் இசையமைத்த "நெருப்பு நிலவுகள்" இசைப் பாடல் தொகுப்பு. 5. 1995இல் "திசைகள் வெளிக்கும்" திரைப்படத்திறகு் இசையமைத்தமை. ஆம். அருமையான மனிதர். அமைதியில் உறங்கட்டும்...! "ஈழத்துத் திரைத்துறையின் அஞ்சலிகள்"   ---> Kesavarajan Navaratnam ()      
    • தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும்  இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.    ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர்,  இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர்.  பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார்.        தாயகத்தில் தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம் திரைப்படத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் எண்ணதத்தில் உருவான பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற உருக்கமான பாடலுக்கும், திசைகள் வெளிக்கும் என்கின்ற பெண்களின் பிரச்சினைகள் குறித்துப்பேசும் படத்துக்கான இசையினையும்  ரமணன் அவர்களே வழங்கியிருந்தார்.  அத்துடன் போராட்டகாலப்பகுதியில் தாயகத்தில் மகளிர்  அணியினரின் இசை உருவாக்கங்களிலும் இவருக்கு பெரும்பங்குண்டு.     ஈழத்தின் மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் யாத்த மாவீரர் யாரோ என்றால் என்கின்ற பாடல், ஆதிலட்சுமி சிவகுமாரின் புதுயுகம் ஒன்று படைத்திடவேண்டும் புறப்பட்டு வா தோழி என்கின்ற பாடல், கவிஞர் வேலணையூர் சுரேசின் முல்லைமண் எங்களின் வசமாச்சு என்கின்ற பாடல் உட்பட ஏராளமான பாடல்கள் இவரின் இசையில் மலர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.   தன்னுடைய சிறப்புமிக்க இசைத்திறனால் தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தவர். இறுதிவரை விடுதலைதாகத்தை தன் நெஞ்சிற்குள் சுமந்திருந்தவர். இத்தகைய சிறப்புகளும், நுண்திறனும், பற்றும் கொண்டுவாழ்ந்த றமணன் அவர்களின் இழப்பு என்றும் ஈடுசெய்ய முடியாததாகும். இவரின் இழப்பினால் துயரடைந்து கலங்கும் இவரின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள்,  அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் இவருக்கு எமது இறுதி வணக்கத்தை கொள்கின்றோம்.  https://www.pathivu.com/2018/08/ramanan_14.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.