Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது.

nethar.jpg

தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது.

அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு டிரைஸ்வான் ஆகட்டிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த இகுனி, நெதர்லாந்து சட்டப்படி தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கைவிடுத்தார். இதனை ஏற்று அரசு சட்டவிதிகளின் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. அப்போது இருவரும் கை கோர்த்தபடி மரணித்தனர். இருவரும் இணைந்தபடி மரணித்திருப்பது பார்ப்போரை நெகிழ செய்தது.

https://thinakkural.lk/article/291964

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தாலும் பிரிக்க முடியாத பந்தம்.......ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்........!

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட வரலாறு: கருணைக் கொலைக்கு விதிமுறை வகுக்க வழிகோலிய செவிலியர் அருணா ஷாண்பாக் வழக்கு

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
1 டிசம்பர் 2021
அருணா ஷாண்பாக்

பட மூலாதாரம், GETTY IMAGES

மிக மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க முடியுமா? அதற்கு சம்பந்தப்பட்ட நபரின் அனுமதி தேவையா? இந்தியா முழுவதும் பெரும் விவாதங்களை எழுப்பிய அருணா ஷண்பாக் வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தது?

ஒருவர் தான் மரணமடைய வேண்டுமென விரும்பினால், அதை அனுமதிப்பதா, இல்லையா என்ற விவாதம் நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது. இந்தியாவில் தற்கொலைக்கு முயல்பவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ன் கீழ் தண்டிக்கப்படும் வாய்ப்பு உண்டு. 

தற்கொலைக்கு உதவுபவர்கள், தூண்டுபவர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக தற்கொலைக்கு முயல்பவர்கள் சாகாமல் போனால், அவர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பது சரியா என்ற கேள்வியும் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்தான், மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் மரணமடைய விரும்பினால் அல்லது அவர்களது உறவினர்கள் அதற்கு முடிவுசெய்தால் அதனைச் சட்டம் அனுமதிக்க முடியுமா? இப்படி ஒரு கேள்விதான் அருணா ராமச்சந்திர ஷண்பாக் விவகாரத்தில் எழுப்பப்பட்டது,.......

https://www.bbc.com/tamil/india-59480983.amp

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் இளைப்பாறுங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.