Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் செல்லமே..!!!

Featured Replies

என் செல்லமே

girlfeedingdogok2.jpg

செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே

சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ

கடுங்கோவங்கொண்டு பிறர் உனை

கடி நாய் என அழைத்த போதிலும்

ரொம்ப பாசத்தோடு நான் உனை

ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில்

செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து

மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே

காலை மாலை என தவறாமல்

பாலை நான் தட்டில் ஊற்றுகையில்

நன்றியோடு என நோக்கி நாவால் வருடும்

நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே

எங்கு நான் வெளியில் சென்றிடினும்

என் வழித்துணையாக வந்த உனை

எவர் கடத்தி சென்றனர் இன்று

எப்படி இருக்கின்றாய் அங்கு நீ

நான் உறங்கிய போதில் என்னருகில்

விழித்திருந்து காவல் செய்வாயே

நீ இன்று இல்லாத இந்த நாட்களில்

விழிகள் துயில மறுப்பதை புரிவாயா

குரைக்க தெரிந்த என் அன்புஜீவன் நீ

என் குரலைக் கேட்டு மடியில் தவழும் உயிரே

இச்சாலை வழியே உனைத்தேடி நடக்கின்றேன்

என் பாதச் சுவடறிந்து மீண்டும் வந்துவிடு

உன்னோடு பழகிய நினைவுகளை

என் மனச்சுமைகளாக்கி இன்று நான்

கண்ணீரோடு காத்திருக்கின்றேன்

உனை கட்டியணைத்து முத்தம் தருவதற்கு

உன்னோடு பழகிய நினைவுகளை

என் மனச்சுமைகளாக்கி இன்று நான்

கண்ணீரோடு காத்திருக்கின்றேன்

உனை கட்டியணைத்து முத்தம் தருவதற்கு

நிலா அக்காவின் கவிதையா பேபிக்கு ரொம்ப பிடிக்குமே இதுவும் சூப்பர் நிலா அக்கா கவிதை :) !!ஆனா பேபிக்கு ஒரு டவுட் இது நாயிற்கு தானே எழுதிய கவிதை சும்மா கேட்டனான் அக்கா.......சா இப்படி தெரிந்து இருந்தா நிலா அக்காவின்ட வீட்டை நாயா பிறந்திருக்கலாம் போல இருக்கு :lol: ...........எனக்கு இந்த வரிகள் ரொம்பவே பிடித்து கொண்டது அக்கா!! :(

ஜம்மு பேபி பஞ் கவிதை (எங்கையோ வாசித்தது)

மலரின் அழகு வாடும் வரை

இலையின் அழகு உதிரும் வரை

விளக்கின் அழகு விடியும் வரை

கனவின் அழகு கலையும் வரை

உறவின் அழகு பிரியும் வரை..

பிரிந்தபின் புரியும் பாசமதை!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நிலா அக்காவின் கவிதையா பேபிக்கு ரொம்ப பிடிக்குமே இதுவும் சூப்பர் நிலா அக்கா கவிதை :lol: !!ஆனா பேபிக்கு ஒரு டவுட் இது நாயிற்கு தானே எழுதிய கவிதை சும்மா கேட்டனான் அக்கா.......சா இப்படி தெரிந்து இருந்தா நிலா அக்காவின்ட வீட்டை நாயா பிறந்திருக்கலாம் போல இருக்கு :lol: ...........எனக்கு இந்த வரிகள் ரொம்பவே பிடித்து கொண்டது அக்கா!! :(

:):unsure: நிலாக்கா வீட்டில் நாயாக பிறக்க முடியாது. வேணும் னா வளரலாம் ஜம்மு. :unsure:

நிலாவின் நாய்க்குட்டி விரைவில் வந்துசேரும் வாழ்த்துக்கள் நிலா...

:lol::) நிலாக்கா வீட்டில் நாயாக பிறக்க முடியாது. வேணும் னா வளரலாம் ஜம்மு. :unsure:

ஓ நாயாக பிறக்கமுடியாதோ :wub: ........வளரலாமோ என்னவோ என்னை கூப்பிடுற மாதிரி இருக்கு :( ..அது சரி அக்காவை விட்டுவிட்டு போன செல்லம் (அது தான் நாய் சா என்ட அம்மா என்னை எத்தனை தரம் நாயே என்று ஏசுவா இங்கே பார்த்தா நாயை செல்லமா எல்லாம் காலம் :lol: ..........!! ) வந்துட்டா இல்லை என்னும் தேடுறீங்களோ..!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா நாய்க்குட்டியை மகிந்த

நாய்ப்படைக்கு கொண்டு போய்விட்டார்

ஏழு எட்டு வருடத்தில் சன்மானத்துடன்திரும்ப தருவார்கள்.

  • தொடங்கியவர்

நிலாவின் நாய்க்குட்டி விரைவில் வந்துசேரும் வாழ்த்துக்கள் நிலா...
:lol: நன்றி அண்ணா.

ஓ நாயாக பிறக்கமுடியாதோ :D ........வளரலாமோ என்னவோ என்னை கூப்பிடுற மாதிரி இருக்கு :wub: ..அது சரி அக்காவை விட்டுவிட்டு போன செல்லம் (அது தான் நாய் சா என்ட அம்மா என்னை எத்தனை தரம் நாயே என்று ஏசுவா இங்கே பார்த்தா நாயை செல்லமா எல்லாம் காலம் :( ..........!! ) வந்துட்டா இல்லை என்னும் தேடுறீங்களோ..!! :lol: அப்ப நான் வரட்டா!!

ஐயோ பாவம் ஜம்மு. ஜம்முவை நாய் னு அம்மா கூப்பிடுறாவா? அழாதீங்க ஜம்மு. இன்னும்வளரவில்லை. ஆனால் வந்துடுவான் ரொம்மி. :lol:

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

வெண்ணிலா நாய்க்குட்டியை மகிந்த

நாய்ப்படைக்கு கொண்டு போய்விட்டார்

ஏழு எட்டு வருடத்தில் சன்மானத்துடன்திரும்ப தருவார்கள்.

:wub::lol: என் நாய்க்குட்டியை கடத்தியது உந்த படைக்கோ. ஐயோ என் நாய்க்குட்டி பேபி . அதுக்கு எதுவுமே தெரியாது. நான் இனி மெளனமாக இருந்தால் சரிவராது போல. தேடிப்பிடிக்கிறேன் என் செல்லத்தை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்க நாய்குட்டி கவிதை அழகு வெண்ணிலா.

காணாமல் போன நாய்குட்டியை தேட புலனாய்வு உதவியை நாடிப்பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நான் உறங்கிய போதில் என்னருகில்

விழித்திருந்து காவல் செய்வாயே

நீ இன்று இல்லாத இந்த நாட்களில்

விழிகள் துயில மறுப்பதை புரிவாயா

யாரங்கே? யார் நிலாவின் நாய்க்குட்டியை பிடித்தது.

நல்ல கவிதை நிலா.மேலும் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா கவிதை நல்லாயிருக்கு

:lol:

யாரங்கே.. நிலாவின் நாயை களவாடி சென்றவர்களை கைது செய்து எனது அரசவைக்கு இழுத்து வாருங்கள் :wub:

ஐயோ பாவம் ஜம்மு. ஜம்முவை நாய் னு அம்மா கூப்பிடுறாவா? அழாதீங்க ஜம்மு. இன்னும்வளரவில்லை. ஆனால் வந்துடுவான் ரொம்மி. :lol:

சரி அழவில்லை ஆனா நாயையும் பேபி என்று கூப்பிடுறீங்க பிறகு அது தான் பார்தேன் நாய் மேல அக்காவிற்கு எவ்வளவு விருப்பம் என்று :wub: ........ஓ நாயின் பெயர் "ரொம்மியா" என்ன அழகான பெயர் நல்ல காலம் ஜம்மி என்று வரவில்லை தப்பிட்டேன் நிலா அக்கா... :lol: !!செல்லத்தை தேடி பிடிக்க வாழ்த்துகள் அது தான் "ரொம்மியை" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

"உங்க நாய்குட்டி கவிதை அழகு வெண்ணிலா.

காணாமல் போன நாய்குட்டியை தேட புலநாயின் உதவியை நாடிப்பாருங்க''

ஜயோ வெண்ணிலாவின் நாயை காணவில்லையா?

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்

உங்க நாய்குட்டி கவிதை அழகு வெண்ணிலா.

காணாமல் போன நாய்குட்டியை தேட புலனாய்வு உதவியை நாடிப்பாருங்க.

என் செல்ல ரொம்மி மீண்டும் வந்திடிச்சுங்கோ. புலனாய்வுக்கு சொல்லி என் செல்ல நாயை தேட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நன்றிகள் நண்பியே. <_<

நான் உறங்கிய போதில் என்னருகில்

விழித்திருந்து காவல் செய்வாயே

நீ இன்று இல்லாத இந்த நாட்களில்

விழிகள் துயில மறுப்பதை புரிவாயா

யாரங்கே? யார் நிலாவின் நாய்க்குட்டியை பிடித்தது.

நல்ல கவிதை நிலா.மேலும் தொடருங்கள்.

<_< யாரங்கே? ஹீஹீ நிலாவின் நாய்க்குட்டி தண்ட அம்மாவிடம் போனதாம். இப்ப வந்திடிச்சுங்கோ. நன்றிகள்

நிலா கவிதை நல்லாயிருக்கு

:)

யாரங்கே.. நிலாவின் நாயை களவாடி சென்றவர்களை கைது செய்து எனது அரசவைக்கு இழுத்து வாருங்கள் :rolleyes:

உங்க அரச சபைக்கு இழுத்து வருவதாயின் ரொம்பியின் மம்மியை தான் இழுத்து வரணும். நன்றிகள் இன்னிசை

சரி அழவில்லை ஆனா நாயையும் பேபி என்று கூப்பிடுறீங்க பிறகு அது தான் பார்தேன் நாய் மேல அக்காவிற்கு எவ்வளவு விருப்பம் என்று :rolleyes: ........ஓ நாயின் பெயர் "ரொம்மியா" என்ன அழகான பெயர் நல்ல காலம் ஜம்மி என்று வரவில்லை தப்பிட்டேன் நிலா அக்கா... :lol: !!செல்லத்தை தேடி பிடிக்க வாழ்த்துகள் அது தான் "ரொம்மியை" <_<

என் செல்லத்தை பேபி என்று கூப்பிட்டேனா? அட அப்போ ஜம்முபேபியும் :rolleyes:

ம்ம் ஏன் ரொம்மி என்ற பெயர் நல்லா இல்லையா? ஜிம்மி னு வைக்கலாம் னு தான் முதல் நினைச்சேன்

தேடிப்பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. செல்லநாய்க்குட்டியே வந்திடிச்சு இந்த நிலாகிட்ட. உங்க வாழ்த்துக்கு நன்றி

ஜயோ வெண்ணிலாவின் நாயை காணவில்லையா?

ஏன் வல்வை அண்ணா இபப்டி கேட்கிறீங்க? உங்கை வந்ததோ என் ரொம்மி? :wub:

எங்க வீட்லயும் அழகான நாய்க்கட்டி வாங்கியிருக்காகங்க..

எங்கிட்ட பெயர்கேட்டபோது.. ஜம்மு எண்டு சொன்னேன்.. நிராகரிச்சிட்டாங்க..

வெண்ணிலா மனிசரைப்பத்தியும் எழுதுங்கோ என்ன

  • தொடங்கியவர்

எங்க வீட்லயும் அழகான நாய்க்கட்டி வாங்கியிருக்காகங்க..

எங்கிட்ட பெயர்கேட்டபோது.. ஜம்மு எண்டு சொன்னேன்.. நிராகரிச்சிட்டாங்க..

வெண்ணிலா மனிசரைப்பத்தியும் எழுதுங்கோ என்ன

ஜமுனா என்ற பெயரின் சுருக்கம் தான் "ஜம்மு" என நினைச்சு நிராகரிச்சிருப்பாங்க போல :wub:

மனிசரை விட நாய்க்குட்டி பெட்டர் போல இருந்திச்சு. அதுதான் சின்னதாக ஒரு கவி என் செல்லமான ரொம்மிக்கு எழுதினேன் கவி. :rolleyes:

என் செல்லத்தை பேபி என்று கூப்பிட்டேனா? அட அப்போ ஜம்முபேபியும் :unsure:

ம்ம் ஏன் ரொம்மி என்ற பெயர் நல்லா இல்லையா? ஜிம்மி னு வைக்கலாம் னு தான் முதல் நினைச்சேன்

தேடிப்பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. செல்லநாய்க்குட்டியே வந்திடிச்சு இந்த நிலாகிட்ட. உங்க வாழ்த்துக்கு நன்றி

செல்லமோ நாயை எல்லாம் செல்லம் என்கிறாங்க முடியல :( !!அட ஜம்மு பேபியுமோ அப்ப நானும் நாயோ நல்லா இல்லை சொல்லிட்டேன் பேபி எனி அழுதிடும் :( !!"ரொம்மி" நல்ல பெயர் நிலா அக்கா என்ன கவிதை எழுதியவுடன் நாய் வந்ததா இல்லை வேற செல்லம் வந்ததோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

எங்க வீட்லயும் அழகான நாய்க்கட்டி வாங்கியிருக்காகங்க..

எங்கிட்ட பெயர்கேட்டபோது.. ஜம்மு எண்டு சொன்னேன்.. நிராகரிச்சிட்டாங்க..

வெண்ணிலா மனிசரைப்பத்தியும் எழுதுங்கோ என்ன

சா மாமாவிற்கு என் மேலே எவ்வளவு பாசம் எப்பவும் ஏன் பெயர் தான் நினைப்பில இருக்கு மாமாவின் மனசில :( !!நிராகரித்ததிற்கு கவலைபடவேண்டாம் மாமா :lol: ............பேபியின்ட பெயரை நாயிற்கு எப்படி வைக்கிறது என்று யோசித்து இருப்பார்கள் போல!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

செல்லமோ நாயை எல்லாம் செல்லம் என்கிறாங்க முடியல :) !!அட ஜம்மு பேபியுமோ அப்ப நானும் நாயோ நல்லா இல்லை சொல்லிட்டேன் பேபி எனி அழுதிடும் :) !!"ரொம்மி" நல்ல பெயர் நிலா அக்கா என்ன கவிதை எழுதியவுடன் நாய் வந்ததா இல்லை வேற செல்லம் வந்ததோ!! :rolleyes:

:D ஐயோ வேறை ஒண்ணும் வரவில்லை. என் செல்லம் ரொம்மி தான் வந்திச்சு

  • தொடங்கியவர்

எங்க வீட்லயும் அழகான நாய்க்கட்டி வாங்கியிருக்காகங்க..

எங்கிட்ட பெயர்கேட்டபோது.. ஜம்மு எண்டு சொன்னேன்.. நிராகரிச்சிட்டாங்க..

வெண்ணிலா மனிசரைப்பத்தியும் எழுதுங்கோ என்ன

:D:) நாய்க்கட்டி என்றால் என்னங்க விகடகவி? :rolleyes:

:( ஐயோ வேறை ஒண்ணும் வரவில்லை. என் செல்லம் ரொம்மி தான் வந்திச்சு

இல்லை ரொம்மி யாரையும் கூட்டி கொண்டு வரவில்லையா என்று கேட்டேன் நிலா அக்கா! :( !

அப்ப நான் வரட்டா!! :)

:D:) நாய்க்கட்டி என்றால் என்னங்க விகடகவி? :rolleyes:

செங்கட்டி மாதிரி ஏதாவது ஒன்றாக இருக்கு நிலா அக்கா!! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.