Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tero.jpg

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2024/1375370

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

tero.jpg

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2024/1375370

தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன்.

தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம்.

அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம்.

நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்....
நாலாம் மாடியில் வைத்து, animiertes-gefuehl-smilies-bild-0438.gif கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. animiertes-gefuehl-smilies-bild-0091.gif

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான். 

அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான். 

அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 

முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .

இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/3/2024 at 07:13, தமிழ் சிறி said:

tero.jpg

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? :cool:

spacer.png

நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார்.

மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂

ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? :cool:

சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? :cool:

 

4 minutes ago, விசுகு said:

சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜

1-521-765x510.jpg

நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை animiertes-gefuehl-smilies-bild-0029.gif சொன்னவர். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

 

1-521-765x510.jpg

நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை animiertes-gefuehl-smilies-bild-0029.gif சொன்னவர். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

 

அதைத்தானே ராசா  நானும் சொன்னேன்

அதே கம்பி தான்...animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

🤣....

இது தானே அவர்களின் வழக்கம்.

டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 

Published By: VISHNU   29 MAR, 2024 | 06:07 PM

image

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட  கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இதற்கு முன்னரும் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியமைக்காக கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179981

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 

பாத்தியளே சிங்கன் தன்ரை விளையட்டை காட்ட தொடங்கீட்டான்.....பின் புலத்திலை பயங்கர ஐடியா ஏதோ இருக்கு   😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பாத்தியளே சிங்கன் தன்ரை விளையட்டை காட்ட தொடங்கீட்டான்.....பின் புலத்திலை பயங்கர ஐடியா ஏதோ இருக்கு   😂

🫣......

இந்தச் செய்தி டெய்லி மிர்ரரில் நேற்று வந்தவுடனேயே, அந்தச் செய்தியின் கீழ் சிலர் இப்படி நடக்கும் என்றும் சொல்லியிருந்தனர். எப்படியும் இந்த தேரர் போய் ஆஸ்பத்திரியில் படுத்து விடுவார் என்று. இதை செப்படி வித்தை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்..........🫣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ரசோதரன் said:

🫣......

இந்தச் செய்தி டெய்லி மிர்ரரில் நேற்று வந்தவுடனேயே, அந்தச் செய்தியின் கீழ் சிலர் இப்படி நடக்கும் என்றும் சொல்லியிருந்தனர். எப்படியும் இந்த தேரர் போய் ஆஸ்பத்திரியில் படுத்து விடுவார் என்று. இதை செப்படி வித்தை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்..........🫣

ஆஸ்பத்திரியால வெளியில வரேக்க தள்ளு வண்டிலிலை வைச்சு தள்ளிக்கொண்டு வருவாங்கள். 😂

அதை பாத்திட்டு அங்கையிருக்கிற அத்தனை தெய்யோக்களும் சரண்டர் 😄

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரருக்கு பிணை வழங்க கோரிய மனு நிராகரிக்கப்பட்டது!

Published By: DIGITAL DESK 3   02 APR, 2024 | 02:27 PM

image

4 வருட  கடூழியச்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள  பொதுபல சேனாவின் பொதுச்  செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம்  இன்று செவ்வாய்க்கிழமை (02) நிராகரித்துள்ளது.  

தனது  சேவை பெறுபவரைப்  பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை மனு இன்றைய தினம் காலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே  இந்த மனுவை நிராகரித்தார்.

கலகொட அத்தே ஞானசார  தேரர் இஸ்லாத்துக்கு  எதிராக தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவருக்கு  நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/180242

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

Published By: DIGITAL DESK 3   18 JUL, 2024 | 12:13 PM

image

நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டிருந்த பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கூர­கல தொல்­லியல் அமை­விடம் தொடர்­பாக 2016 இல் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஊடக மாநா­டொன்றில் இஸ்லாமிய மதத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை தெரி­வித்­த­மைக்­காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டது. அத்­துடன் அவ­ருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

https://www.virakesari.lk/article/188753

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.