Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழைகள்.. வயிற்றுக்கு..இயன்றதை நீ செய்..

Featured Replies

என்ன உலகமிது..ஐயா

என்ன உலகமிது...

பசியினில் மனிதன்

பரிதவித்தே..

தூக்கிலிட்டு..வாழ்விழந்து

போகிறதே...

பார்க்க.. கேட்க

மனிதத்தின் உதவியின்றி..

ஒரு சமுதாயம்..

உணவின்றி சாகிறதே..

உணவின் மேலே..

உருளுது

ஒரு உலகம்..

உணவிற்காக உயிரைக்

கரைத்து அலையுது

ஒரு உலகம்..

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

ஏற்றமும் இறக்கமும்..

ஏனிந்த உலகில்-நல்

மாற்றங்கள் வருமோ

மனிதனின் வாழ்வில்

உனக்கான உணவை..

அளவாக அருந்து..

பிறர்க்காக உனது..

உணவினைப்பகிர்ந்து

ஏழைக்கு உதவ

நாளைக்கு என்றேன்..

இன்றே ஏதும் செய்..

மானிட உணர்வை..

மனதினில் வை

மனித நேயத்தை

மலர்ந்திட வை

இறைவன் இப்போது

இளைப்பாறும் வேளை..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

நல்லாக இருக்கு உங்க கவிதை

சிந்திக்க தூண்டுகின்றன வரிகள்.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கொடிது கொடிது பசிக்கொடுமை கொடிது.

உங்க கவிதை வாசிக்கும் போது இன்று நிகழ்ந்த "அனலைதீவில் பெரும் பட்டினி அவலம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை" என்ற நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கான உணவை..

அளவாக அருந்து..

பிறர்க்காக உனது..

உணவினைப்பகிர்ந்து

<<

தம்பி (விகட)கவி, ஒவ்வோர் வரிகளிலுமே ஏக்கமும் உதவிடு என்கிற நோக்கமும் வேகமும் தெறிக்கின்றன.

மேற்கண்ட வரிகள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய மிகச் சிறந்த விடயம்.

"எழுதிக்கொண்டே இருக்கின்றோம்!! இருளைக் கடக்க நினைக்கின்றோம்! சூரியனின் கதிர்களை எங்களுக்காய் திருப்புவோம்"..

விடியும்!" பகை முடியும்" ஆனால்!! போராட்டம் ஓயாது!

நன்றி! வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விகடகவி!

நல்ல வரிகள், சிந்தித்தால் மட்டும்போதுமா? ஊருக்கு உபதேசம் பண்ணியால் மட்டும் போதுமா?

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

விகடகவிமாமா ஸ்பேசல் வாழ்த்துகள் இந்த கவிதைக்கு அப்படி ஒரு பல விடயங்களை உள்ளடக்கிய கவிதை வாழ்த்துகள் மாமா!!அதிலும் இந்த வரிகளிள் பல அர்த்தங்களை காண்பித்து செல்வது அழகு மாமா!! :rolleyes:

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

மண்ணில் வந்து இறங்கிய போது

மலைத்து போயின மழலையின் கண்கள்.

ஆகா உலகம் எத்தனை அழகு!

இன்னும் எனகாய் என்னென்ன உளது!

பொருட்களை எல்லாம் பங்கிடபடத்து

பிஞ்சு முகதிற்கு தெரியுமா!! :D

அப்ப நான் வரடா!!

மானிட உணர்வை..

மனதினில் வை

மனித நேயத்தை

மலர்ந்திட வை

அழகான கவிதை வரிகள் விகடகவி... உங்கள் எண்ணம் கூட அழகு...

உணவின் மேலே..

உருளுது

ஒரு உலகம்..

உணவிற்காக உயிரைக்

கரைத்து அலையுது

ஒரு உலகம்..

இது கவிதை மட்டும் அல்ல , இது தான் நிஜம்,

மாற்றம் காண அனைவரும் பாடுபடுவேம்....

நன்றி

அருமையான கவிதை தந்த விகடகவிக்கு நன்றிகள். தொடர்ந்தும் இப்படியான கவிதைகளை எதிர்பார்த்த வண்ணம்.....................

இயன்றதை செய்வோம்

ஏழையை சிரிக்க வைப்போம்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

அன்புடன்

சுகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கசப்பான நிஜத்தை கவிதையாக வடித்த விகடகவிக்கு வாழ்த்துக்கள்

நல்ல கவி வரிகள்.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஏற்றமும் இறக்கமும்..

ஏனிந்த உலகில்-நல்

மாற்றங்கள் வருமோ

மனிதனின் வாழ்வில்

மேலே குறிப்பிட்ட வரிகள்

இன்றைய யதார்த்தத்தின் விம்பங்கள்.

  • தொடங்கியவர்

என்னோட இந்த எழுத்தை நீங்க வரவேற்றால் உங்கள் பணத்தில் ஒருநாள் ஒரு ஏழை பசியை போக்கினால்... அந்த ஏழை வடிவில் கடவுள் ஆசி உங்களைச் சேரும்..

எல்லோருக்கும் அன்பு கலந்த நன்றிகள்..

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

உங்கள் கவிதையில் பசியால் குழந்தை துடிக்கும்போது தந்தையின் மனக் குமுறலை உணர முடிகிறது.

எமக்குப் பசிக்கும்போது உணவைத் தவிர எதுவும் நினைவிற்கு வருவதில்லை. ஆனால் தினமும் உலகில் பசியால் இறக்கும் நூற்றுக்கணக்கான சிறார்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது சோகமான உண்மை.

  • தொடங்கியவர்

இணையவன்... எதியோப்பியாவில் வறமையில் குழந்தைகள் சாவது எப்போதோ கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால்..

அதை பெரிய வலியாக உணரவில்லை .. இப்போது எங்கள் உறவுகள்.. பசியால் வாடி இறப்பதாக அறிந்ததும்.. வேதனையாக இருக்கிறது..

Edited by vikadakavi

வறுமையில் உழலும் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட தூண்டவைக்கும் கவிதை உணர்வுபூர்மகாக உள்ளது

  • தொடங்கியவர்

இலக்கியன்.. நன்றி உங்கள் கருத்துகளுக்கு...

//ஏற்றமும் இறக்கமும்..

ஏனிந்த உலகில்-நல்

மாற்றங்கள் வருமோ

மனிதனின் வாழ்வில்//

மிகவும் நல்ல வரிகள்..உண்மையிலேயே அருமையான கவிதை ..கவிதைக்கரு...

  • தொடங்கியவர்

நன்றி தூய்ஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.