Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   20 MAY, 2024 | 11:28 AM

image

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று  திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். 

துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை, புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார். 

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியின் பிறந்ததினம் இன்றைய தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184019

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊரில் அடுத்தடுத்த மூன்றாவது மரணம். எனது அண்ணாவின் இறப்பினால் ஊரில்நிற்கையில் எனது உறவினரான இப்பெண்ணின் அகால மரணமும்!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாதவூரான் said:

எனது ஊரில் அடுத்தடுத்த மூன்றாவது மரணம். எனது அண்ணாவின் இறப்பினால் ஊரில்நிற்கையில் எனது உறவினரான இப்பெண்ணின் அகால மரணமும்!

ஓ..நோ..எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாதவூரன்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளன்று விபத்து.நெஞ்சை நெருடும் விபத்து.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

38 minutes ago, வாதவூரான் said:

எனது ஊரில் அடுத்தடுத்த மூன்றாவது மரணம். எனது அண்ணாவின் இறப்பினால் ஊரில்நிற்கையில் எனது உறவினரான இப்பெண்ணின் அகால மரணமும்!

வாதவூரான் உங்கள் அண்ணாவின் இழப்பு பற்றி துயர்பகிர்வோமில் பதிந்திருக்கலாமே?

நாங்களும் அஞ்சலிகளை செலுத்தியிருக்கலாம்.

உங்கள் அண்ணாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வாதவூரான் said:

எனது ஊரில் அடுத்தடுத்த மூன்றாவது மரணம். எனது அண்ணாவின் இறப்பினால் ஊரில்நிற்கையில் எனது உறவினரான இப்பெண்ணின் அகால மரணமும்!

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

எனது ஊரில் அடுத்தடுத்த மூன்றாவது மரணம். எனது அண்ணாவின் இறப்பினால் ஊரில்நிற்கையில் எனது உறவினரான இப்பெண்ணின் அகால மரணமும்!

அடுத்தடுத்து நடந்த மூன்று இழப்புகளையும் தாங்கும் சக்தியை ஆண்டவன் தர வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

வாதவூரான் உங்கள் அண்ணாவின் இழப்பு பற்றி துயர்பகிர்வோமில் பதிந்திருக்கலாமே?

அண்ணை பகிர்ந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் ; இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

21 MAY, 2024 | 10:56 AM
image
 

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (20) இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியோரமாக, வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதியை மோதி விபத்துக்கு உள்ளானதில் யுவதி உயிரிழந்திருந்தார். 

வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) என்பவரே தனது 23ஆவது பிறந்தநாளான நேற்றையதினம் உயிரிழந்திருந்தார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் இராணுவ சிப்பாயை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சிப்பாயை 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது 

அதேவேளை, குறித்த வாகனத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் , அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் ; இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.