Jump to content

வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்

May 25, 2024
 

sarath 1 வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் - பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்

சஜித் பிரேமதாசவுடன் நிலவும் முரண்பாடுகளின் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் தலைமை தாங்கிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் எழுதிய புத்தகத்தை வெளியிடவுள்ளதாகவும் இதன் மூலம் இதற்கு முன்னர் வெளிவந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் கமல் குணரத்ன ஆகியோரின் புத்தகங்களிலுள்ள பல விடயங்கள் பொய்யென நிரூபிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, சஜித் பிரேமதாச போன்றவர்கள் பற்றிய பல உண்மைகளை இந்தப் புத்தகம் வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாசவுடன் நிலவி வரும் அரசியல் முரண்பாடே இந்த புத்தகம் விரைவாக வெளிவருவதற்கு முதன்மையான காரணம் எனவும் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்தின் கீழ் அக்கட்சியின் பல உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வைக்கும் திட்டம் இருப்பதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டு அவரைச் சுற்றி பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி பெரும் பலம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக சி.ஏ.சந்திர பிரேமா எழுதியுள்ள “கோட்டாவின் போர்’ என்ற நூலில் உள்ள பல விடயங்களும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவால் வெளியிடப்பட்ட “ரோட் ரு நந்திக்கடல்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/sarath-fonsekas-book-on-the-war-is-out/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டும் புதிதாக என்ன சொல்லிவிடப்போகிறார்? புலிகளைக் கொன்றோம், வென்றோம், ஒரு கையில் ஐ நா மனிதவுரிமை சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்திப் போரிட்டோம், ஒரு பொதுமகனும் சாகவில்லை, மனிதாபிமானப் போர் நடத்தினோம், போர்க்குற்றங்கள் என்கிற பேச்சிற்கே இடமில்லை......
இன்னொரு போர்க்குற்றவாளி எழுதும் தனது புழுகல் உரை! 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாசவுடன் நிலவி வரும் அரசியல் முரண்பாடே இந்த புத்தகம் விரைவாக வெளிவருவதற்கு முதன்மையான காரணம் எனவும் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்தின் கீழ் அக்கட்சியின் பல உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வைக்கும் திட்டம் இருப்பதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

அப்ப இதில்  போர் பற்றிய உண்மையும் வராது பொய்யும் வராது...பொன்னர்   சஜீத்தின் பிக்கல் புடுங்கல்தான் வரும்...இதுக்கேன் இவ்வளவு பில்டப்பு..நரி இடையில் அப்பம் சாப்பிட சந்தோசமாக இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல உண்மைகள் வரும், வரும் என்பார்கள்.  கோதாவின் புத்தகத்தில் வெளி நாடுகளின் சதி என்று வந்தது போல, ஏதாவது பொத்தாம் பொதுவான விசயங்கள் மட்டுமே இதிலும் இருக்கும். உண்மைகள் இவர்களின் புத்தகங்களில் வந்தால், இவர்கள் போர்க் குற்ற விசாரணைகளுக்கு போக வேண்டி இருக்குமே.......சரத்திற்கு கொஞ்ச காசு வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடந்த காலத்தில் நடந்த உண்மைகளை யாரும் நேர்மையாக எழுதினால் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பின் ஆதரவாளர்களும் அதை ரசிக்கப்போவதில்லை என்பதுடன் அவர்களை அது கோபப்படுத்தும்.   இருதரப்பும் தமது வீரப்பிரதாபங்களை மட்டுமே பீற்றிக்கொள்ளும்.  

இவர்களை எல்லாம் கடந்த,  ஓரளவுக்காவது மக்களை நேசிக்கும் அரசியலாளர்கள் உருவாகும் போதே இனவாதம் ஒழிந்து காத்திரமான அதிகாரப்பகிர்வு ஏற்படலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படியான நிலைக்கான சாத்தியக்கூறுகள் கூட தெரியவில்லை. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
    • யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
    • நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர் 8 சுற்றில் நுழைந்தது பங்களாதேஷ் 17 JUN, 2024 | 12:17 PM   (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக சென் வின்சன்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நேற்று (16) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டது. இப் போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்டே பங்களாதேஷ் வெற்றி பெற்றது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கடும் சிரமத்துக்கு மத்தியில் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. 7 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 5 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியதால் பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குஷால் மல்லா (27), தீப்பேந்த்ரா சிங் அய்ரீ (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், அவர்களது இணைப்பாட்டம் முடிவுக்கு வந்த பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. நேபாளத்தின் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி 4 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தன்ஸிம் ஹசன் சக்கிப் https://www.virakesari.lk/article/186257
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.