Jump to content

டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகி விட்டது ஆச்சரியமில்லை. அமெரிக்க சனநாகயமே தூக்கில தொங்கிக்கிட்டு கிடக்குது. இதில.. நீதித்துறை சொல்லி வேலையில்லை.

ரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் வெளி வருவார். தேர்தலிலும் வெல்ல வாய்ப்பிருக்குது. வென்றால் பைடனும் குடும்பமும் இதே நீதித்துறையால்.. 340 குற்றங்களுக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அமெரிக்க நீதித்துறை அரசியல்மயமாகிவிட்டது. டொலருக்கு அடிமையாகிவிட்டது. 

Thousands of U.S. judges who broke laws or oaths remained on the bench

https://www.reuters.com/investigates/special-report/usa-judges-misconduct/

 

எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது.

அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல்.

வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது. 

இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

 

எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது.

அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல்.

வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது. 

இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 

உங்கள் அவதானிப்பின் அடிப்படையை ஒருக்கா எனக்கும் சொல்லுங்களேன்?

நெடுக்கர் தந்த இணைப்பு (அவர் வாசித்திருக்க மாட்டார், தலைப்பைத் தாண்டி😎) தெற்கில் ஒரு பரவலான பிரச்சினை. அந்த இணைப்பில் இருக்கும் தகவல் படி, கறுப்பின மக்கள், லோயர் வைக்கவும், பிணை கட்டவும் இயலாத ஏழைகள், இந்த நீதிபதிகளால் பாதிக்கப் படுகிறார்கள் என்று காட்டுகிறது.

தம்பு போன்றோர்- ஒரு பில்லியனர், ஒரு லோயர் படையணியோடு வலம் வருபவர்- இந்த வகை நீதிபதிகளால் பாதிக்கப் படுவதில்லை. உண்மையாகப் பார்த்தால், அவர் போன வருடம் நியமித்த ஒரு நீதிபதி தன் நன்றிக் கடனாக அவருக்கெதிரான சமஷ்டிக் கேஸ் ஒன்றை தள்ளி வைத்து உதவியிருக்கிறார். 

எனவே, இந்த றொய்ரர்ஸ் இணைப்பின் படி, நீதிபதிகளால் தம்பு பாதிக்கப் படவில்லை. இது சாமான்ய மக்களை உள்ளடக்கிய ஜூரர் தீர்ப்பு என்பதையும் கவனிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

உங்கள் அவதானிப்பின் அடிப்படையை ஒருக்கா எனக்கும் சொல்லுங்களேன்?

நெடுக்கர் தந்த இணைப்பு (அவர் வாசித்திருக்க மாட்டார், தலைப்பைத் தாண்டி😎) தெற்கில் ஒரு பரவலான பிரச்சினை. அந்த இணைப்பில் இருக்கும் தகவல் படி, கறுப்பின மக்கள், லோயர் வைக்கவும், பிணை கட்டவும் இயலாத ஏழைகள், இந்த நீதிபதிகளால் பாதிக்கப் படுகிறார்கள் என்று காட்டுகிறது.

தம்பு போன்றோர்- ஒரு பில்லியனர், ஒரு லோயர் படையணியோடு வலம் வருபவர்- இந்த வகை நீதிபதிகளால் பாதிக்கப் படுவதில்லை. உண்மையாகப் பார்த்தால், அவர் போன வருடம் நியமித்த ஒரு நீதிபதி தன் நன்றிக் கடனாக அவருக்கெதிரான சமஷ்டிக் கேஸ் ஒன்றை தள்ளி வைத்து உதவியிருக்கிறார். 

எனவே, இந்த றொய்ரர்ஸ் இணைப்பின் படி, நீதிபதிகளால் தம்பு பாதிக்கப் படவில்லை. இது சாமான்ய மக்களை உள்ளடக்கிய ஜூரர் தீர்ப்பு என்பதையும் கவனிக்க வேண்டும். 

 

எனது அவதானிப்பின் அடிப்படை எவருக்கும் பக்கசார்பு இல்லாத தன்மை. சுதந்திரமான கண்ணோட்டம். 

உலகின் மிகப்பெரியதொரு ஜனநாயக நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பலரும் அவதானிக்கின்றார்கள். 

அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல் விளையாடுகின்றது. அரசியல் அமெரிக்க நீதித்துறையின் போக்கில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றது. 

காட் பிலஸ் அமெரிக்கா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலாக ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளாராகப் போட்டியிட்ட தேர்தலில் திருமதி கிலாரி கிளின்டனே வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவருக்கே அதிகளவிலான மக்கள் வாக்களித்திருந்த நிலையிலும் அமெரிக்க அரசியலமைப்பின் படி ட்ரம் அவர்களே வென்று பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.ஒரு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கருதப்படுபவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முயொத அரசியலமைப்பு இருக்கும் நிலையில் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் தனது பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறவே முயற்சிப்பார். இந்தத்தேர்தலை வெர் தண்டனையிலிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாகவே அவர் பாவிப்பார்.மறுதரப்பில் பைடன் வெற்றி பெற்றாலும் அவரது அடுத்த பதவிக்காலத்தை முழுமையாக வகிப்பார் என்று சொல்ல முடியாது. அமரிக்காவின் ஜனாதிபதியாக வருபவர் உடல் உள ஆரோக்கியத்துடன் உற்சாகமானவராக திடமானமடிவுகளை எடுக்க்கூடியவராக இருப்பதையே அமெரிக்க குடிமக்கள் விரும்புவார்கள். உண்மையில்  பைடன் இந்த முறை வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். மாறாக ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் ஊழித்தாண்டவம்தான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

முதன்முதலாக ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளாராகப் போட்டியிட்ட தேர்தலில் திருமதி கிலாரி கிளின்டனே வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவருக்கே அதிகளவிலான மக்கள் வாக்களித்திருந்த நிலையிலும் அமெரிக்க அரசியலமைப்பின் படி ட்ரம் அவர்களே வென்று பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.ஒரு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கருதப்படுபவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முயொத அரசியலமைப்பு இருக்கும் நிலையில் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் தனது பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறவே முயற்சிப்பார். இந்தத்தேர்தலை வெர் தண்டனையிலிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாகவே அவர் பாவிப்பார்.மறுதரப்பில் பைடன் வெற்றி பெற்றாலும் அவரது அடுத்த பதவிக்காலத்தை முழுமையாக வகிப்பார் என்று சொல்ல முடியாது. அமரிக்காவின் ஜனாதிபதியாக வருபவர் உடல் உள ஆரோக்கியத்துடன் உற்சாகமானவராக திடமானமடிவுகளை எடுக்க்கூடியவராக இருப்பதையே அமெரிக்க குடிமக்கள் விரும்புவார்கள். உண்மையில்  பைடன் இந்த முறை வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். மாறாக ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் ஊழித்தாண்டவம்தான்.

 

அட சும்மா போங்க. அமெரிக்காவில் இப்போது ஊழித்தாண்டவம் ஆட இல்லையா. 

டிரம்ப் வந்தால் அமெரிக்காவை மட்டும் முன்னிலைப்படுத்தி பல திட்டங்களை செயற்படுத்துவார். எனவே உலக நாடுகள் டிரம்ப் வரக்கூடாது என்பதையே பெரும்பாலும் விரும்புவார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, புலவர் said:

மாறாக ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் ஊழித்தாண்டவம்தான்.

யாருக்கு ஊழித்தாண்டவம் ?

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

இந்தத் தேர்தலில் தனது பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறவே முயற்சிப்பார்.

ரம்புக்கு எதிராக தீர்ப்பெழுதி 24 மணி நேரத்துக்குள் 53 மில்லியன் டாலர்களை மக்கள் வழங்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

யாருக்கு ஊழித்தாண்டவம் ?

யாருக்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 12:46, புலவர் said:

முதன்முதலாக ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளாராகப் போட்டியிட்ட தேர்தலில் திருமதி கிலாரி கிளின்டனே வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவருக்கே அதிகளவிலான மக்கள் வாக்களித்திருந்த நிலையிலும் அமெரிக்க அரசியலமைப்பின் படி ட்ரம் அவர்களே வென்று பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.ஒரு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் கருதப்படுபவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முயொத அரசியலமைப்பு இருக்கும் நிலையில் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் தனது பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறவே முயற்சிப்பார். இந்தத்தேர்தலை வெர் தண்டனையிலிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாகவே அவர் பாவிப்பார்.மறுதரப்பில் பைடன் வெற்றி பெற்றாலும் அவரது அடுத்த பதவிக்காலத்தை முழுமையாக வகிப்பார் என்று சொல்ல முடியாது. அமரிக்காவின் ஜனாதிபதியாக வருபவர் உடல் உள ஆரோக்கியத்துடன் உற்சாகமானவராக திடமானமடிவுகளை எடுக்க்கூடியவராக இருப்பதையே அமெரிக்க குடிமக்கள் விரும்புவார்கள். உண்மையில்  பைடன் இந்த முறை வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். மாறாக ட்ரம்ப் வெற்றி பெறுவாராக இருந்தால் ஊழித்தாண்டவம்தான்.

பகுதியளவில் சரியான அவதானிப்பு.

ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியானாலும் கூட மாநில வழக்குகளின் தீர்ப்பில் இருந்து மன்னிப்புப் பெற (தனக்குத் தானே pardon வழங்கிக் கொள்ள) முடியாது. இதனால் தான் இந்த நியூ யோர்க் தீர்ப்பும், ஜோர்ஜியாவின் மாநில வழக்கும் முக்கியமாகப் பார்க்கப் படுகின்றன. ஆனால், தீர்ப்புகளால் அவருக்காகத் "தீக்குளிக்கக் காத்திருக்கும் அடிப்பொடிகள்" அவருக்கு வாக்களிக்காமல் விடப் போவதில்லை. நடு நிலையாக இருக்கும் (படித்தோர், பெண்கள், இளையோர், நம்மைப் போன்ற லிபரல் குடியேறிகள்) ஆட்களின் வாக்குகளைத் தான் ட்ரம்ப் இழப்பார். பென்சில்வேனியா, கொலராடோ போன்ற ஊசலாடும் (swing) மாநிலங்களில் இது நிகழ்ந்தால், தோல்வி வரலாம்.

எனவே தான், சேர்த்த காசு வெற்றியைத் தீர்மானிக்கும் பாரிய காரணியல்ல. எந்தக் குழுவின் வாக்குகளை தீர்ப்புகள் பாதிக்கும் என்பது தான் காரணியாக இருக்கும்.

அடுத்த 4 வருடங்களில் பைடனுக்கு ஏதாவது ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் கமலா ஜனாதிபதியாக வந்து விடுவார் என்ற அச்சம் இருக்கிறதல்லவா? அந்த அச்சம் உண்மையில் பெண் வெறுப்பும், நிறவாதமும் கலந்த துவேஷத்தின் வெளிப்பாடு. இந்த துவேஷம் எங்கள் ஆசிய வம்சாவளி அமெரிக்கர்களிடையேயும் இருப்பது தான் ஆச்சரியமான விடயம். இது தவறு தான் என்றாலும், நீலக்கட்சி இதைக் கணக்கிலெடுத்திருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2024 at 14:34, Justin said:

உங்கள் அவதானிப்பின் அடிப்படையை ஒருக்கா எனக்கும் சொல்லுங்களேன்?

நெடுக்கர் தந்த இணைப்பு (அவர் வாசித்திருக்க மாட்டார், தலைப்பைத் தாண்டி😎) தெற்கில் ஒரு பரவலான பிரச்சினை. அந்த இணைப்பில் இருக்கும் தகவல் படி, கறுப்பின மக்கள், லோயர் வைக்கவும், பிணை கட்டவும் இயலாத ஏழைகள், இந்த நீதிபதிகளால் பாதிக்கப் படுகிறார்கள் என்று காட்டுகிறது.

தம்பு போன்றோர்- ஒரு பில்லியனர், ஒரு லோயர் படையணியோடு வலம் வருபவர்- இந்த வகை நீதிபதிகளால் பாதிக்கப் படுவதில்லை. உண்மையாகப் பார்த்தால், அவர் போன வருடம் நியமித்த ஒரு நீதிபதி தன் நன்றிக் கடனாக அவருக்கெதிரான சமஷ்டிக் கேஸ் ஒன்றை தள்ளி வைத்து உதவியிருக்கிறார். 

எனவே, இந்த றொய்ரர்ஸ் இணைப்பின் படி, நீதிபதிகளால் தம்பு பாதிக்கப் படவில்லை. இது சாமான்ய மக்களை உள்ளடக்கிய ஜூரர் தீர்ப்பு என்பதையும் கவனிக்க வேண்டும். 

Michael Cohen accused of lying over phone call at Trump hush-money trial

Donald Trump’s lawyer on Thursday attacked the core charge against the former president as he sought to undercut Michael Cohen, the former attorney whose $130,000 hush-money payment to the adult film star Stormy Daniels is at the heart of the criminal trial in New York.

As Cohen returned to the stand for the third day, Blanche suggested Cohen’s latest objective was to see Trump go to jail, seeding the possibility that he might have also lied about the extent of Trump’s involvement in the hush-money scheme with Daniels.

https://www.theguardian.com/us-news/article/2024/may/16/michael-cohen-cross-examination-trump-trial

இந்த வழக்கில் ரம்பை சிக்க வைக்க பல பொய்கள்.. உருட்டுக்களை நடப்பு பைடன் அரசு சார்ப்பு ஆட்கள் செய்திருக்காங்க.

அமெரிக்காவின் நீதித்துறை வெளியார் செல்வாக்குகளுக்கு உள்ளாகி இருப்பது வெளிப்படை. இது அமெரிக்காவின் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இருக்கிறது. 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

Michael Cohen accused of lying over phone call at Trump hush-money trial

Donald Trump’s lawyer on Thursday attacked the core charge against the former president as he sought to undercut Michael Cohen, the former attorney whose $130,000 hush-money payment to the adult film star Stormy Daniels is at the heart of the criminal trial in New York.

As Cohen returned to the stand for the third day, Blanche suggested Cohen’s latest objective was to see Trump go to jail, seeding the possibility that he might have also lied about the extent of Trump’s involvement in the hush-money scheme with Daniels.

https://www.theguardian.com/us-news/article/2024/may/16/michael-cohen-cross-examination-trump-trial

இந்த வழக்கில் ரம்பை சிக்க வைக்க பல பொய்கள்.. உருட்டுக்களை நடப்பு பைடன் அரசு சார்ப்பு ஆட்கள் செய்திருக்காங்க.

அமெரிக்காவின் நீதித்துறை வெளியார் செல்வாக்குகளுக்கு உள்ளாகி இருப்பது வெளிப்படை. இது அமெரிக்காவின் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இருக்கிறது. 

நீங்கள் "ட்ரம்பை நிரபராதியாக்கும் தகவல்கள்" என்று குறிப்பாகத் தேடினால் இது உட்பட்ட பல செரிப் பழங்கள் கிடைக்கும், நீங்களும் சுவைத்து  இங்கே இருக்கும் "ட்ரம்ப் காதலர்களோடும்"😎 பகிரலாம், நல்ல விடயம் தான்.

ஆனால், சில நூறு பக்கங்கள்  இருக்கும் கேஸ் transcript, நீதி மன்ற தளத்தில் இருக்கிறது, அதில் போய் மைக் கோஹனின் சாட்சியத்தை உறுதி செய்த ஏனைய சாட்சிகளையும் ஒருக்காப் பார்த்தால் இப்படி செரிப் பழம் பிடிங்கி மெனக்கெடத் தேவையில்லை. ஜூரர்கள், deliberate செய்யும் போது திரும்பி வந்து ஒரு குறிப்பிட்ட சாட்சியத்தை மீள தாங்கள் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், அதையும் ஒரு தடவை யாரென்று தேடிப் பாருங்கள். அதைக் கேட்ட போதே தீர்ப்பு எப்படியிருக்கப் போகிறதென்று உள்ளூரில் இருப்போருக்கு விளங்கி விட்டது.

பி.கு: கேஸ் மாநில கேஸ், சமஷ்டி கேஸ் அல்ல. பைடன் நிர்வாகம், ஆட்கள் எப்படி செல்வாகுச் செலுத்துவர்? இது நாசாக் கதை மாதிரிப் போகும் போல இருக்கே😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் பிராண்ட் குத்துக்கரணம் அடிக்கின்றது. டொனால்ட் டிரம்ப் ஒரு யோக்கியர் என்று எவரும் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. இங்கு நீதி பரிபாலனம் எப்படி கையாளப்படுக்கின்றது என்பதை கண்ணுற்றே பலர் விமர்சனம் வைக்கின்றார்கள். டொமோகிராட்டிக் தரப்பு உள்ளடி வேலைகள் நல்லாய் செய்கின்றார்கள். 

ஒரு காலத்தில் சீ என் என் செய்தி சேவை சொல்வதை வேத வாக்காக கேட்டு நம்பியதும் உண்டு. இப்போது எப்படி மாவரைக்கின்றார்கள் என கொஞ்சம் புரிகின்றது.

அமெரிக்க சாம்ராச்சியத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் பல பாகங்கள் எமது காலத்திலேயே நடந்தேறுகின்றன போல. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அதை கட்டியம் கூறுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் சார்ந்த கட்சி நல்ல கட்சி தான்.அதனால் பைடனுக்கு வெள்ளை அடிக்க மாட்டேன்
மாற்று அரசியல் ஜோர்ஜ் புஸ் கொம்பனி பல போர்கள் செய்தாலும் உலக பொருளாதாரத்தை இன்று இருக்கும் அளவிற்கு சீரழிக்கவில்லை. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் கை வைக்கவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

பைடன் சார்ந்த கட்சி நல்ல கட்சி தான்.அதனால் பைடனுக்கு வெள்ளை அடிக்க மாட்டேன்
மாற்று அரசியல் ஜோர்ஜ் புஸ் கொம்பனி பல போர்கள் செய்தாலும் உலக பொருளாதாரத்தை இன்று இருக்கும் அளவிற்கு சீரழிக்கவில்லை. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் கை வைக்கவுமில்லை.

கிளின்டன் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அழித்து நாசமாக்கியவர்கள்.

அதோட தொடங்கிய கடன் இப்போ எங்கேயோ போய் நிற்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கிளின்டன் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அழித்து நாசமாக்கியவர்கள்.

அதோட தொடங்கிய கடன் இப்போ எங்கேயோ போய் நிற்கிறது.

நீலக்கட்சி சேர்த்து வைத்ததை  சிவப்பு கட்சி அழிக்கும் என்றொரு பழைய கதை உண்டு. ஆனால் அது இப்போது தலை கீழாக நடக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

நீலக்கட்சி சேர்த்து வைத்ததை  சிவப்பு கட்சி அழிக்கும் என்றொரு பழைய கதை உண்டு. ஆனால் அது இப்போது தலை கீழாக நடக்கின்றது.

இப்ப அழிக்கிறதுக்கு என்ன இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயம் said:

அமெரிக்கன் பிராண்ட் குத்துக்கரணம் அடிக்கின்றது. டொனால்ட் டிரம்ப் ஒரு யோக்கியர் என்று எவரும் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. இங்கு நீதி பரிபாலனம் எப்படி கையாளப்படுக்கின்றது என்பதை கண்ணுற்றே பலர் விமர்சனம் வைக்கின்றார்கள். டொமோகிராட்டிக் தரப்பு உள்ளடி வேலைகள் நல்லாய் செய்கின்றார்கள். 

ஒரு காலத்தில் சீ என் என் செய்தி சேவை சொல்வதை வேத வாக்காக கேட்டு நம்பியதும் உண்டு. இப்போது எப்படி மாவரைக்கின்றார்கள் என கொஞ்சம் புரிகின்றது.

அமெரிக்க சாம்ராச்சியத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் பல பாகங்கள் எமது காலத்திலேயே நடந்தேறுகின்றன போல. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அதை கட்டியம் கூறுகின்றன. 

இதற்குத் தான் அடிப்படை என்னவென்று கேட்டேன். "எனது நடுநிலைமையான பார்வை" என்று உங்கள் பார்வையையே "தரவாக" எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் தொடர்ந்து உங்களை கேட்கவில்லை😎.

அமெரிக்கன் பிராண்ட் குத்துக் கரணம் அடிக்க முயன்றது உண்மை. தேர்தலை ஏற்றுக் கொள்ளாமல் ஜனவரி 6 இல் கலகத்தை த் தூண்டிய போது தான் குத்துக் கரணம் உச்சம் தொட்டது. அது முதல் ட்ரம்ப் அணி மீது ஆதாரங்களுடன் குற்றச் சாட்டுகளும், தற்போது ஒரு தீர்ப்பும் வந்திருக்கிறது. இந்த வழக்குகளின் பின்னால் இருக்கும் சட்டவாளர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென நினைக்கிறேன். முடிந்தால், ஒரு சாம்பிளுக்கு இந்த வழக்கிலேயே ட்ரம்பிற்கு எதிராக அவர்கள் நீதிமன்றில் காட்டிய நுணுக்கமான சான்றுகளை (exhibits) ஒரு தடவை போய் பாருங்கள். இதற்கு உள்ளடி வேலை அவசியமில்லை, ட்ரம்பே தூக்கிக் கொடுத்திருக்கிறார் சாட்சியங்களை. அந்தளவுக்கு சட்டமும் தெரியாத, தன் லோயர் மாரையும் செயல்பட அனுமதிக்காத ஒரு முட்டாப் பீசு அவர்😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இதற்குத் தான் அடிப்படை என்னவென்று கேட்டேன். "எனது நடுநிலைமையான பார்வை" என்று உங்கள் பார்வையையே "தரவாக" எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் தொடர்ந்து உங்களை கேட்கவில்லை😎.

அமெரிக்கன் பிராண்ட் குத்துக் கரணம் அடிக்க முயன்றது உண்மை. தேர்தலை ஏற்றுக் கொள்ளாமல் ஜனவரி 6 இல் கலகத்தை த் தூண்டிய போது தான் குத்துக் கரணம் உச்சம் தொட்டது. அது முதல் ட்ரம்ப் அணி மீது ஆதாரங்களுடன் குற்றச் சாட்டுகளும், தற்போது ஒரு தீர்ப்பும் வந்திருக்கிறது. இந்த வழக்குகளின் பின்னால் இருக்கும் சட்டவாளர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென நினைக்கிறேன். முடிந்தால், ஒரு சாம்பிளுக்கு இந்த வழக்கிலேயே ட்ரம்பிற்கு எதிராக அவர்கள் நீதிமன்றில் காட்டிய நுணுக்கமான சான்றுகளை (exhibits) ஒரு தடவை போய் பாருங்கள். இதற்கு உள்ளடி வேலை அவசியமில்லை, ட்ரம்பே தூக்கிக் கொடுத்திருக்கிறார் சாட்சியங்களை. அந்தளவுக்கு சட்டமும் தெரியாத, தன் லோயர் மாரையும் செயல்பட அனுமதிக்காத ஒரு முட்டாப் பீசு அவர்😂!

 

கண்ணாடி வீட்டுக்குள் கல்லெறிய தொடங்கி உள்ளார்கள் என பொருள் கொள்ளலாமா?

டொனால்ட் டிரம்ப் இற்கு மணி கட்டிவிட முயற்சி செய்தது ஒரு ஆரம்பமே. இது இனி எவ்வாறான பல சம்பவங்களுக்கு முன்னோடியாக அமையும் என்பது எதிர்காலத்தில் தெரியும். 

அமெரிக்காவில் நீதித்துறை அடிப்படையில் இரு கட்சிகள் சார்ந்து இயங்குகின்றது எனும் தோற்றப்பாடு அண்மையில் தெளிவாக முழு உலகுக்கும் புலப்படும்படி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 

பைடன் ஐயா (அவசர அவசரமாக?) அண்மையில் ஏராளம் நீதிபதிகளை நியமித்தார். தனது பதவி முற்றுப்பெற முன் இன்னும் எத்தனை பேருக்கு நியமனம் கொடுப்பாரோ தெரியாது. நியமனம் பெறுபவர்கள் விசுவாசத்தை காட்டமாட்டார்கள் என கூறமுடியாது. 

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு முன்னாள் அமெரிக்க நீதிபதிகளின் உரையாடல் பார்த்தேன். இங்கு இவர்களின் இலக்கு நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதை விட டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முட்டுக்கட்டை போடவேண்டும். தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாதவாறு செய்யவேண்டும் எனும் சூக்குமங்களின் அடிப்படையில் இயங்குவது தெளிவாகின்றது. 

தீர்ப்பு கூறும்போது அவர்களின் உள்ளார்ந்தம் இந்த சூக்குமங்களின் அடிப்படையிலேயே கையாளப்படும் என்பது எனது ஊகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

கண்ணாடி வீட்டுக்குள் கல்லெறிய தொடங்கி உள்ளார்கள் என பொருள் கொள்ளலாமா?

டொனால்ட் டிரம்ப் இற்கு மணி கட்டிவிட முயற்சி செய்தது ஒரு ஆரம்பமே. இது இனி எவ்வாறான பல சம்பவங்களுக்கு முன்னோடியாக அமையும் என்பது எதிர்காலத்தில் தெரியும். 

அமெரிக்காவில் நீதித்துறை அடிப்படையில் இரு கட்சிகள் சார்ந்து இயங்குகின்றது எனும் தோற்றப்பாடு அண்மையில் தெளிவாக முழு உலகுக்கும் புலப்படும்படி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 

பைடன் ஐயா (அவசர அவசரமாக?) அண்மையில் ஏராளம் நீதிபதிகளை நியமித்தார். தனது பதவி முற்றுப்பெற முன் இன்னும் எத்தனை பேருக்கு நியமனம் கொடுப்பாரோ தெரியாது. நியமனம் பெறுபவர்கள் விசுவாசத்தை காட்டமாட்டார்கள் என கூறமுடியாது. 

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு முன்னாள் அமெரிக்க நீதிபதிகளின் உரையாடல் பார்த்தேன். இங்கு இவர்களின் இலக்கு நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதை விட டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முட்டுக்கட்டை போடவேண்டும். தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாதவாறு செய்யவேண்டும் எனும் சூக்குமங்களின் அடிப்படையில் இயங்குவது தெளிவாகின்றது. 

தீர்ப்பு கூறும்போது அவர்களின் உள்ளார்ந்தம் இந்த சூக்குமங்களின் அடிப்படையிலேயே கையாளப்படும் என்பது எனது ஊகம்.

 

தற்போது நடக்கும் விடயங்களை செய்தித் துணுக்குகளாகப் பார்த்து, யானை பார்த்த குருடன் போல இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அவசர அவசரமாக பைடன் நியமித்த நீதிபதிகள் எத்தனை பேர்? ட்ரம்ப் தன் காலத்தில் நியமித்த நீதிபதிகள் எத்தனை பேர்? இவர்கள் எந்த வகை நீதிபதிகள் (federal? appellate) ? ட்ரம்பிற்கெதிராக சமஷ்டிக் கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகள் எத்தனை (அது தான் சமஷ்டி நீதிபதிகளின் கீழ் நடக்கும்), மாநிலக் கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகள் (பைடன் நியமிக்காத நீதிபதிகளின் கீழ் வருவன) எத்தனை? இப்படி ஏதாவது தேடினீர்களா? அல்லது, ட்ரம்ப் நியமித்த நீதிபதிகளே ட்ரம்ப் கேஸ்களில் சாட்சியங்களையும் சட்டங்களையும் மட்டும் அடிப்படையாக வைத்து நடப்பதைச் செய்திகளில் பார்க்கவில்லையா?

ஒரு தீர்ப்பு வருகிறது. உடனே ஒரு அமெரிக்க அதிபர் வழமையாக நியமிக்கும் நீதிபதிகள் அவசரமாக நியமிக்கப் பட்டு எதிராளிக்கெதிராக நகர்த்தப் படுகின்றனர் என்ற புரிதலை ஏற்படுத்த தீர்ப்பை விரும்பாதோர் - ட்ரம்ப் விசிறிகள்- கதையைப் பரப்புவர் தான். இதையெல்லாம் கேட்ட நீங்கள், தீர்ப்பை வழங்கியது 12 சாதாரண நியூ யோர்க் மக்கள் என்பதை cognitive dissonance போல மறந்து விட்டீர்களென நினைக்கிறேன்.

ஜனவரி 6 இல் அமெரிக்க அரசியலைப்பிற்கெதிராக கலகத்தைத் தூண்டிய போதே ட்ரம்ப் எந்த அரச பதவியையும் வகிக்கும் தகுதியை இழந்து விட்டார் என்பது தான் பல நிபுணர்களின் கருத்து. அதையே அந்த இரு முன்னாள் நீதிபதிகளும் சொல்லியிருப்பர், அதிசயமில்லை. இதனால் தான் இரண்டாம் முறை ட்ரம்ப் impeach செய்யப் பட்டார், அவரது அரசியல் சகாக்கள் காப்பாற்றினர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2024 at 21:44, Justin said:

பி.கு: கேஸ் மாநில கேஸ், சமஷ்டி கேஸ் அல்ல. பைடன் நிர்வாகம், ஆட்கள் எப்படி செல்வாகுச் செலுத்துவர்? இது நாசாக் கதை மாதிரிப் போகும் போல இருக்கே😂?

ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???!

கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??!

ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???!

கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??!

ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜

மணி 👍   எழுதிய கருத்துக்கள் அவ்வளவும் பொருள் நெடுக்கர் 👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???!

கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??!

ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜

கிளின்ரன் - மோனிகா விடயத்தில் "வழக்கு" நடந்ததோ நெடுக்கர்? எங்க? சந்திரனிலா😎??

(நீங்கள் எனக்கு பதிலாக எதை எழுதினாலும் பச்சை போட ஒரு "முதுகு சொறியும்" குழு இருக்கும்! பப்பா மரம் தான் என்றாலும் பார்த்து ஏறுங்கோ😊!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

கிளின்ரன் - மோனிகா விடயத்தில் "வழக்கு" நடந்ததோ நெடுக்கர்? எங்க? சந்திரனிலா😎??

(நீங்கள் எனக்கு பதிலாக எதை எழுதினாலும் பச்சை போட ஒரு "முதுகு சொறியும்" குழு இருக்கும்! பப்பா மரம் தான் என்றாலும் பார்த்து ஏறுங்கோ😊!)

In April 1999, about two months after being acquitted by the Senate, Clinton was cited by federal District Judge Susan Webber Wright for civil contempt of court for his "willful failure" to obey her orders to testify truthfully in the Paula Jones sexual harassment lawsuit. For this, Clinton was assessed a $90,000 fine and the matter was referred to the Arkansas Supreme Court to see if disciplinary action would be appropriate.

https://en.wikipedia.org/wiki/Impeachment_trial_of_Bill_Clinton#Public_opinion

 

He was subsequently acquitted on all impeachment charges of perjury and obstruction of justice in a 21-day U.S. Senate trial. Clinton was held in civil contempt of court by Judge Susan Webber Wright for giving misleading testimony in the Paula Jones case regarding Lewinsky, and was also fined $90,000 by Wright.

https://en.wikipedia.org/wiki/Clinton–Lewinsky_scandal#:~:text=He was subsequently acquitted on,21-day U.S. Senate trial.&text=Clinton was held in civil,also fined %2490%2C000 by Wright.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

In April 1999, about two months after being acquitted by the Senate, Clinton was cited by federal District Judge Susan Webber Wright for civil contempt of court for his "willful failure" to obey her orders to testify truthfully in the Paula Jones sexual harassment lawsuit. For this, Clinton was assessed a $90,000 fine and the matter was referred to the Arkansas Supreme Court to see if disciplinary action would be appropriate.

https://en.wikipedia.org/wiki/Impeachment_trial_of_Bill_Clinton#Public_opinion

 

He was subsequently acquitted on all impeachment charges of perjury and obstruction of justice in a 21-day U.S. Senate trial. Clinton was held in civil contempt of court by Judge Susan Webber Wright for giving misleading testimony in the Paula Jones case regarding Lewinsky, and was also fined $90,000 by Wright.

https://en.wikipedia.org/wiki/Clinton–Lewinsky_scandal#:~:text=He was subsequently acquitted on,21-day U.S. Senate trial.&text=Clinton was held in civil,also fined %2490%2C000 by Wright.

பௌலா ஜோன்ஸ் என்ற பெண் தொடுத்த சிவில் கேஸை (மொனிகா கேஸ் அல்ல), ட்ரம்பின் கிரிமினல் கேசோடு ஒப்பிடும் அளவுக்கு "தெளிவாக" இருக்கிறீர்கள் நெடுக்கர்!

அமெரிக்காவில் convicted felon ஆக வருவது மிகக் கஷ்டம் -இது ட்ரம்பின் வரலாற்றுச் சாதனை, ஆனால் சிவில் கேஸ் (இது அரச தரப்பு தொடுக்கும் வழக்கு அல்ல) போறவன் வாறவன் எல்லாம் போடலாம், வெல்லலாம். அதைத் தான் "செரிப் பழமாக" பிடுங்கி வந்து இங்கே போட்டிருக்கிறீர்கள்.

அது சரி, ட்ரம்பும் ஒரு சிவில் கேசில் இதை விட 3 மடங்கு பணம் ஒரு பெண்ணுக்குக் கட்டினார் (அந்தப் பெண்ணைக் கிண்டல் பண்ணியவர் கூட உங்க குறுக்கால மறுக்கால ஓடித் திரியிறார்😎!).

கிளின்ரனுக்கும் வழக்கு, ட்ரம்புக்கும் வழக்கு, தற்போது ஹன்ரர் பைடனுக்கும் வழக்கு என்றால் உங்கள் அமெரிக்காவின் ஊழல் நீதி வாதம் அடிபட்டுப் போகிறதே?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது.  Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.   
    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.