'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 2 27 SEP, 2024 | 06:23 PM நா.தனுஜா நாட்டின் சமகால பொருளாதார நிலைவரங்களை கருத்திற்கொண்டு வட்டிவீதங்களை முன்னைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்திருக்கும் மத்திய வங்கி, இவ்வாண்டின் முடிவில் பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறப்பட்டதை விடவும் உயர்வான மட்டத்தில் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 5ஆவது மீளாய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் மேற்கூறப்பட்ட பொருளாதார எதிர்வுகூறல்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதன்படி, நாணயச் சபையானது கொள்கை வட்டிவீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் ஆகிய தற்போதைய மட்டங்களிலும், நியதி ஒதுக்கு வீதத்தை 2 சதவீதமாகவும் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அதேபோன்று எதிர்வரும் சில காலாண்டுகளில் பணவீக்கம் 5 சதவீதத்துக்குக் கீழான மட்டத்தில் பேணப்பட்டு, நிர்ணயிக்கப்படும் விலைகள் மற்றும் நிரம்பல் நிலைமைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் எதிர்காலத்தில் பணச்சுருக்கம் பதிவாகும் என மத்திய வங்கியினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இருப்பினும் அண்மையில் மின்சாரத் தீர்வைகள், எரிபொருள் மற்றும் பெற்றோலிய எரிவாயு போன்றவற்றின் விலைகளில் மேற்கொள்ளப்பட்ட கீழ்நோக்கிய திருத்தங்களாலும், உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வீழ்ச்சியினாலும் முதன்மைப்பணவீக்கம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அதேவேளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பிரகாரம், நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் 5.3 சதவீத விரிவாகத்தினையும், இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்திருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்று அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், 2024இன் முதலாம் அரையாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சிப்போக்கு, ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் தொடரும் எனவும், அது தொடக்கத்தில் எதிர்வுகூறப்பட்டதை விட உயர்ந்த வளர்ச்சியாக அமையும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க, அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது சமகால பொருளாதார நிலைவரங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும், குறுங்காலத்தில் அடைய எதிர்பார்க்கும் அடைவுகள் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் நேற்றைய தினம் தெரிவித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அச்சந்திப்பின்போது விரிவாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழான நிபந்தனைகளுக்கு அமைவாகத் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதா அல்லது அவை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற தீர்மானம் நிதியமைச்சினாலேயே மேற்கொள்ளப்படும் எனவும், இருப்பினும் நாணய நிதியத்துடனான ஒத்துழைப்புக்கள் தொடரும் என ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையில் உத்தரவாதம் அளித்திருக்கிறார் எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194940 -
By விளங்க நினைப்பவன் · Posted
இன்றைய செய்திகள் தமிழ் சிங்களம் பேசுகின்ற படித்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுரா அரசாங்க ஆட்சியில் யாழ்ப்பாணம் சிங்கபூர் மாதிரி மாறுமா வியக்க வைக்கும் புதிய மாற்றங்களுடன் யாழ் நகரம் -
புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து Published By: VISHNU 27 SEP, 2024 | 11:15 PM வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/194955
-
தகவலுக்கு நன்றி என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது. Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.
-
வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார். https://akkinikkunchu.com/?p=293162
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 1 reply
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 2 replies
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts