Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது !

kugenJune 25, 2024
 

20240624_144200.jpg

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை (25) அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டம் திங்கட்கிழமை (25) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று பொது வேட்பாளர் தொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் எமக்குள் இடம்பெற்று இருந்தது. இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் திங்கட்கிழமை (25) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழர் தரப்பில் உள்ள சிவில் அமைப்புகளுடன் பேசி ஏனையவர்களையும் இணைத்து இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தமிழ் மக்களினுடைய உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலையை அடையக்கூடிய வகையில் இந்த தேர்தல் களத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்பதை தீர்மானமாக எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இன்றைய உயர் பீட சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜனா கருணாகரன், ஈ பி ஆர் எல் எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் மற்றும் துளசி, புளொட் சார்பில் முன்னாள் விவசாய அமைச்சர் சிவனேசன், ஜனநாயக தமிழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் இந்திரலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

https://www.battinews.com/2024/06/blog-post_490.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லாக் காலத்தில் பொதுவேட்பாளரே தமிழரின் ஆயுதம்!

1619160714.jfif

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இருந்தது. ஆனால், இப்போது எமக்கான எந்தப் பாதுகாப்பும் இல்லை. அதனால் எமது இனத்தை தங்களின் காலடியில் வீழ்த்திவிடலாம் என பேரினவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால், அதனை முறியடித்து, புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எமது புதிய ஆயுதமாக பொதுவேட்பாளர் விடயத்தைக் கையாள்வோம். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

கைதடியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நானும் இந்தப் பொதுவேட்பாளருக்கு ஆதரவானவன். ஜனாதிபதித் தேர்தலில் காலாதிகாலமாக இலங்கை தேசியக் கட்சிகளுக்கே தமிழ் மக்களாகிய நாம் வாக்களிக்கப் பழகியிருக்கின்றோம்.

பொதுவேட்பாளராக தமிழர் வெற்றி வாகைசூடமுடியாது என்பதும், எந்த ஒரு தமிழனும் ஜனாதிபதியாக இலங்கையில் வரமுடியாது என்பதும் எமக்கு நன்கு தெரியும். ஆனால், இங்கே வெற்றி தோல்வியென்பதற்கு அப்பால், எமது உரிமைக்கான குரலை அழுத்தமாக வெளிப்படுத்தும் ஒரு கருவியாக பொதுவேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். மீண்டும் இந்த பதிமூன்றாவது திருத்தம் பற்றிய கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. பொதுவாகத் தேர்தல் காலங்களில் பதின்மூன்றாம் திருத்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கதைத்து, அதனை மூலதனமாக்கி வாக்குகளை அள்ளுவது பேரினவாத வேட்பாளர்களுக்குக் கைவந்தகலை. அதையே இப்போதும் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தல்களத்தில் மூவர் போட்டியிடப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால், அவர்களின் தலைவிதி தமிழர்களின் கையில் என்பதால்தான். அந்த மூவரும் அடிக்கடி வடக்குக்கு வருவதை வாடிக்கையாக்கிவிட்டார்கள்.

தமிழ் மக்களை சிங்களப்பேரினவாதம் கிள்ளுக்கீரையாக அடக்கியாள நினைத் தது. எப்பொழுது விடுதலைப் புலிகள் மீண்டும் திருப்பியடிக்கத் தொடங்கினார் களோ அன்றிலிருந்து தான் தமிழர்கள் மீது கைவைப்பதை சிங்களப் பேரின அரசு நிறுத்தியது. இப்பொழுது புலிகள் இல்லையென்பதால், மீண்டும் பழைய படி தமிழர்களை அடக்கியொடுக்க நினைக்கிறார்கள்.

வடக்கு-கிழக்கு முழுவதுமே இப்போது புலனாய்வாளர்களின் தீவிரக் கண்காணிப்பில் வந்துவிட்டது. தமிழ்மக்கள் எங்கு சென்றாலும் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒரு கருத்தைக் கூட சுதந்திரமாகச் சொல்லவிடாமல் தடுக்கிறார்கள். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இனியொரு ஆயுதப்போராட்டத்தை தமிழர்கள் இப்போதைக்கு சிந்தித்துக்கூடப்பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட கையறு நிலையில் எமது உரிமைகளை வென்றெடுக்க புதிய வழிகளைக் கண்டறியவேண்டும். அப்படியான புதிய வழிகளுக்கான முதற்படியாக, புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எம தினத்தின் புதிய ஆயுதமாக பொதுவேட்பாளரை மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். (ச)

 

https://newuthayan.com/article/புலிகள்_இல்லாக்_காலத்தில்_பொதுவேட்பாளரே_தமிழரின்_ஆயுதம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்சங்கர் உதத்தான் சொன்னவரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஜெய்சங்கர் உதத்தான் சொன்னவரோ? 

அவருக்கு  இங்கே என்ன வேலை  ...தமிழ்நாட்டில்  குடிசைகளுக்கும் அங்கு வாழும் தமிழருக்கும்   தீர்வை முதலில் பெற்றுக் கொடுக்கட்டும்.     தமிழன் இந்தி படிக்க மாட்டான்   இந்தியை திணிக்காதே  என்று சொல்ல படு புழுத்த பயம்  ......நாங்கள் வெள்ளைக்காரனுக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறோம்   😂🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:
3 hours ago, Kapithan said:

ஜெய்சங்கர் உதத்தான் சொன்னவரோ? 

அவருக்கு  இங்கே என்ன வேலை

இந்தியா வைன் பண்ணினால்த் தான் நமது நாட்டு தமிழ் பொம்மைகள் ஆடும்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன முடிவையும் எடுக்கட்டும்.மக்கள் தமது முடிவை எடுக்கட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.