Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JUN, 2024 | 01:14 PM
image

எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில்  தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது.

சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்துகின்றன.

 

யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர் தோல்வி அடைந்தார். அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இதுவரை  கதைக்கவில்லை.

மைத்திரி, மஹிந்த தேர்தலில் போட்டியிட்ட போது இரண்டும் எதிரி, அதில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்து மைத்திரிக்கு ஆதரவளித்தோம். அதிலும் தோற்றோம் அடுத்து சஜீத்துக்கு ஆதரவு அளித்தோம் அங்கும் இராஜதந்திரம் தோல்வியடைந்தது.

நாட்டில் அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது டலஸ்க்கு ஆதரவு அளித்தோம் அங்கும் தோல்வியடைந்தோம். மக்களிடத்தில் அபிவிருத்தி தேவையுள்ளது. மேடையில் அதைப்பற்றி நாங்கள் கதைக்கவில்லை. உரிமைக்காகவே மக்கள் என்றும் வாக்களிக்கின்றனர்.எங்கள் சுகபோகத்திற்காக இல்லை. 

15வருட வரலாற்றில் அநுர,சஜித், ரணில் பேசிய வரலாறு இல்லை. ஆனால் இப்பொழுது பேசுகிறார்கள் அவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.

தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வேட்பாளரை இறக்கக்கூடாது.13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜெய் சங்கருடன் கதைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்த சஜித் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அப்பொழுது தமிழில் கேட்டார் பொலிஸ் அதிகாரமும் இருக்கின்றதா என்று, சஜீத் இங்கே இப்படி சொல்ல மரிக்கார் கொழும்பில் இவ்வாறு சொல்லவில்லை என்கிறார்.

தமிழ் நாட்டில் பொலிஸ், நிதி அதிகாரங்கள் இருக்கு எமக்கு இல்லை. வடக்கு மாகாண சபை முறைமை தான் 13. இதில் மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை. 

பொது வேட்பாளரை களமிறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள். 13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம் என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம் ஏற்கனவே உள்ள 13 ஐ தருவோம் என்று சொல்கிறார்கள். 

34வருடமாக பொலீஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை மத்திய அரசாங்கம் காணிகளை பிடிக்கிறது. 

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராக  களமிறங்கியபோது அவரை ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லை. குமார் பொன்னம்பலம் ஒரு இலட்சத்திற்கு மேல் கிடைத்தது. சிங்கள மக்கள் கூட வாக்களிக்கவுள்ளனர்.

எனவே, வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கியாக பிடித்து இந்த மண்ணில் நாம் யார் என்பதை காட்டலாம் 

ரணிலுக்கு மஹிந்த ஆதரவு, சஜித் இறங்கி போனால் அநுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் பொதுவேட்பாளர்.

தேர்தல் விஞ்ஞானபத்தில் எமக்கான தீர்வை வெளியிட்டால் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்றால் இந்திய, அமெரிக்க,பிரித்தானியா தூதுவருக்கு முன்பாக மறைமுகமாக தீர்வை  எழுதித் தாருங்கள் எனவும் சிறிதரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/187249

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில்  தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

large.IMG_6815.jpeg.cefd1fc44c0e34b04eec

  • கருத்துக்கள உறவுகள்

தமிழப் பொதுவேட்பாளரை நிறுத்தி அவரைத் தமிழர் வாக்குகளால் தோற்கடித்து தமிழர் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்று நிறுவத் துடிக்கும் முயற்சியாளர்களில் அய்யாவும் ஒருவர். இது ஆரிண்ட அஜெண்டாவா இருக்கும்!🤔

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...! தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்...! சிறிதரன் எம்.பி

கோஷான் சே யாழ்களத்தில் தமிழரசு கட்சி தலைவரன இவர் தமிழ் பொது வேட்பாளர் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கின்றாரே என்று காரசாரமாக சாடி இருந்தார்.அதை இவர் படித்து விட்டு ஏதாவது சொல்லுவோம் என்றுவிட்டு  இப்படி சொல்கிறார்.
இனி எதிர்காலத்தில் இலங்கை ஒவ்வொரு ஜனாதிபதி  தேர்தல்களிலும் இப்படியான சந்தர்ப்பம் வரும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 12:01, ஏராளன் said:

நாட்டில் அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது டலஸ்க்கு ஆதரவு அளித்தோம் அங்கும் தோல்வியடைந்தோம்.

பின்கதவால் 5 போர் ரணில்வாக்களித்ததாகவும் அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்றும் சுமத்திரன் குற்றஞ் சாட்டியிருந்தார். அந்த 5 பேர்களில் ஒருவர் சிறிதரன் என ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவை எந்தவிதத்தில் ஆதரித்தீர்கள் . அப்பவே தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்க வேண்டும். காலம் கடந்த அறிவு .  

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 12:01, ஏராளன் said:

தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில்  தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஐயோ இந்த லூசு ஓவரா அலட்ட தொடங்கிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தீவில் சிங்கள பெளத்தர் அல்லாத ஒருவர் ஜனாதிபதி ஆகமுடியாது என்ற நிலமை இருந்தும் பொதுவேட்பாளர் என்ற ஒருவரை நிறுத்தி கிட்டிபுள்ளு விளையாடுவது ...

தனி சிங்களவர்களின் பெரும் ஆதரவோடு வரபோகும் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு  எப்படி கோத்தபாய ஆட்சி தேர்வு செய்யப்பட்டதோ அதேபோல உங்களை நம்பி நாங்கள் இல்லையென்ற சிங்களவனின் எகத்தாளம் மேலும் அதிகரிக்கவே வழி வகுக்கும்.

சிறிதரனுக்கு  தெரியாத அரசியலா நமக்கு தெரிந்துவிட போகிறது , ஆனால் சிங்களவர்களின் நடுவில் சிக்கிகொண்டுவிட்ட எமது இனத்தின் அரசியல் சூழலை  சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி கையாளவேண்டும் என்பதே  ஆதங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் யாரும் எங்கட வாக்குகளால் வென்றால் என்ன அல்லது தனித்து வென்றால் என்ன , சிங்களம் எப்பவுமே ஒன்றும் செய்யாது . தனித்து தமிழ் வேட்பாளரை நிறுத்தி அவருக்கு மட்டும் தமிழ் மக்கள் வாக்களித்தால் நாம் திருமபவும் சொல்ல முடியும் நாம் வேறு சிங்களம் வேறு , எமக்கான தேர்வை அழுத்தமாக சொல்ல முடியும். திரும்ப திரும்ப ஓரே தவறை சம்பந்தர் செய்தமாதிரி இருக்க கூடாது .
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.