Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7  09 JUL, 2024 | 02:16 PM

image
 

சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம்  அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். 

சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவளி  காற்றினால் இந்த வீடு அழிய கூடும் இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும். ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டுதிட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

எமது கடற்றொழிலாளர்கள் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். தொடர்ந்து இழுவை மடியாலும் பாதிக்கபட்டுள்ளோம். பொது மக்களுக்கு பல நெருக்கடியான சூழலிலும்  மீனவ தொழிலை ஜீவனோபாயமாக  மேற்கொண்டுவருகின்றோம். எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் வழங்கவேண்டும். உண்மையில் எமக்கு சீன அரசு தரமான பொருட்களையும் நல்ல திட்டங்களையும் வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர். இன்றுவரை எமது அலைமகள் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் சீன அரசினால் கிடைக்கப்பெறவில்லை. அரிசி தருவதாக கூறினார்கள் அதிலும் தர பிரச்சினை, அரசியல் ரீதியாக தங்களுடைய காரியாலயங்களில் வைத்து அரிசியினை வழங்கினார்கள். அரசியல் வாதிகள் பொதுமக்களை கவனிக்க வேண்டும் எனவே என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/188030

  • கருத்துக்கள உறவுகள்

.சீன அரசு தரமான பொருட்களையும் நல்ல திட்டங்களையும் வழங்கவேண்டும்.""

உது சரி 👆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு மீனவர்களுக்கான பொருத்து வீடுகள் கொண்டு செல்லபட்டுள்ளன!

09 JUL, 2024 | 05:42 PM
image
 

யாழ் மாவட்ட மீனவர்களுக்கான சீனாவின் பொருத்து வீடுகள் இன்று  செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் கொண்டு செல்லபட்டுள்ளன.

வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சீன அரசாங்கம் 500 வீடுகளை ஒதுக்கியிருந்த நிலையில்  யாழ் மாவட்டத்துக்கு 116 பொருத்துவீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்நிலையில் யாழ்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 116 பொருத்து வீடுகள் பாரவூர்த்திகள் மூலம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளன.

இவ்வாறு கொண்டு செல்லபட்ட வீடுகள் அனைத்தும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பொறுப்பில் நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. 

IMG_8028.jpeg 

IMG_8021.jpeg

https://www.virakesari.lk/article/188061

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, Kapithan said:

.சீன அரசு தரமான பொருட்களையும் நல்ல திட்டங்களையும் வழங்கவேண்டும்.""

உது சரி 👆

2 hours ago, ஏராளன் said:

சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம்  அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

பின் புலத்திலை ஆரோ இருக்கினம் போல கிடக்கு....😂

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய பயம்  கவலை எல்லாம் சீனா கொடுக்கும் வீட்டை மக்கள் ஏற்று கொண்டு அவர்களுக்கு வீடுகள் கிடைத்து விடுமோ என்பது தான்.  எப்போதோ வரும் சூறாவளிக்கு  இந்த வீடு அழிந்து விடும் என்று இவர் இப்பவே கவலைபடுகின்றாராம்.
இந்தியாவில் இருந்து கொள்யைடிக்க வருகின்ற இந்திய மீனவர்களால் இலங்கை தமிழ் மீனவர்கள் பாதிப்படையவில்லை.இழுவை மடி வலையால் தானாம் பாதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் பொருத்து வீடுகள்

news-02-4.jpg

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடுகள் அமைப்பதற்காக பொருட்கள் நேற்று முல்லைத்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

குறித்த திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 64 வீடுகள் அமைப்பதற்கு தேவையான பொருட்களே இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/305675

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2024 at 06:45, குமாரசாமி said:
On 9/7/2024 at 03:44, ஏராளன் said:

சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம்  அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

பின் புலத்திலை ஆரோ இருக்கினம் போல கிடக்கு.

சீனத் திட்டங்கள் எதுவானாலும் எதிர்க வேண்டுமென்பதற்காகவே நிரந்தர குடில் போட்டு பக்கத்து புலனாய்வாளர்கள் இருக்கிறார்களே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சீனத் திட்டங்கள் எதுவானாலும் எதிர்க வேண்டுமென்பதற்காகவே நிரந்தர குடில் போட்டு பக்கத்து புலனாய்வாளர்கள் இருக்கிறார்களே!

பொருத்து வீடு வந்து சேர்ந்துவிட்டது அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.