Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி

உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஓஸ்திரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு திரும்பியுள்ளார்.

ஒஸ்ட்ரியாவுக்கு (AUSTRIA) விஜயம் செய்திருந்த போது ,  அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

 

இதனை தொடர்ந்து ஓஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார்.

அப்போது, “பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது” என்று மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1391849

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் கெட்ட இழிவான மனிதன்.  புத்தர் பிறந்தது லும்பினியில் அது நேபாளில் உள்ளது. அப்போது இந்தியா என்றொரு நாடே இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

“பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது” என்று மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாயை திறந்தால் பொய். பொய்யை தவிர வேறேதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் என்றாலே உலகத்தால் வெறுக்கப்படும் மனிதர்கள் என்றாகிவிட்டது. 

அந்த இந்திய  சவப்பெட்டிக்கு  இறுதி  ஆணிகளை அடித்ததில் நரேந்திர மொடியின் பங்கு முக்கியமானது 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இதனை தொடர்ந்து ஓஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார்.

அப்போது, “பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது” என்று மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1391849

என்ன மிஸ்டர் ஜீ ராமரிலிருந்து புத்தரிற்கு மாறிவிட்டார்? முடிந்த தேர்தலில் அயோத்தி இருக்கும் தொகுதியில் விழுந்த அடிக்குப் பின் ஜீக்கு ராமரில் கடும் கோபம் போல........ நான் ஒரு அனுமன் என்றாரே.........

ஜீ ஆஸ்ரியாவில் பேசும் போது, ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா என்று திருப்பி திருப்பிச் சொன்னார். சனம் ஆஸ்ரியா, ஆஸ்ரியா என்று சத்தம் போட்டது......... ஜோ பைடனுக்கு நினைவு தப்புது, ஜீக்கு நினைவே இல்லை......🫣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

ஜீ ஆஸ்ரியாவில் பேசும் போது, ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா என்று திருப்பி திருப்பிச் சொன்னார். சனம் ஆஸ்ரியா, ஆஸ்ரியா என்று சத்தம் போட்டது......... ஜோ பைடனுக்கு நினைவு தப்புது, ஜீக்கு நினைவே இல்லை......🫣

அண்ணை அவருக்கு என்னைப்போல ஆங்கிலம் தெரியாதோ?!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

அண்ணை அவருக்கு என்னைப்போல ஆங்கிலம் தெரியாதோ?!

எங்களைப் போன்றவர்களுக்கு தான் இது தெரியும், இது தெரியாது என்ற வேறுபாடுகள் இருக்கின்றன. ஜீ தான் மனிதப் பிறவியே இல்லையே............ நடந்து முடிந்த தேர்தல் இந்தியாவைக் கொஞ்சம் காப்பாற்றிவிட்டது.......😀.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை அவருக்கு என்னைப்போல ஆங்கிலம் தெரியாதோ?!

உங்களைப் பற்றி தெரியாது, இந்தியாவின் முதல் இங்லிஷ் பேசத்தெரியாத பிரதமர் இவர்! அதனால்தான் இதுவரை பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பதில்லை. அவர்கள் இங்லிஷ்ல கேள்விகேட்டா இவருக்கு விளங்காது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வாலி said:

உங்களைப் பற்றி தெரியாது, இந்தியாவின் முதல் இங்லிஷ் பேசத்தெரியாத பிரதமர் இவர்! அதனால்தான் இதுவரை பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பதில்லை. அவர்கள் இங்லிஷ்ல கேள்விகேட்டா இவருக்கு விளங்காது!

இங்கே ஆங்கில மொழி மகிமை ஏன் வருகின்றது?
அவரவற்கு தம் மொழி ஒழுங்காக தெரிந்தாலே போதும்.
இதுதான் அன்றைய இன்றைய உலகம்.

ஆங்கிலம் தெரிந்தவன் ஆதிமுக பகவன் என்ற போதையை அழித்து நீண்ட காலமாகி விட்டது.

5 hours ago, ஏராளன் said:

அண்ணை அவருக்கு என்னைப்போல ஆங்கிலம் தெரியாதோ?!

ஆங்கிலம் அது ஒரு மொழி மட்டுமே.

அது அறிவல்ல.

ஐரோப்பாவில் பல மொழிகள் இருக்கின்றன. அதாவது இந்தியாவைப் போல்......
ஆனால் அந்த ஒவ்வொரு நாட்டவரும் தம் மொழியை கோழி குஞ்சு போல் பாதுகாக்கின்றனர். போகும் வரும் இடமெல்லாம் தம் மொழியையே பேசுகின்றனர். ஏனைய மொழியை தரம் தாழ்த்தி பேசுபவர்களும் அல்லர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

உங்களைப் பற்றி தெரியாது, இந்தியாவின் முதல் இங்லிஷ் பேசத்தெரியாத பிரதமர் இவர்! அதனால்தான் இதுவரை பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பதில்லை. அவர்கள் இங்லிஷ்ல கேள்விகேட்டா இவருக்கு விளங்காது!

ஏதோ ஒரு யுனியில் பட்டம் எடுத்தவராம் அதை கிண்ட போன புலனாய்வு நிருபர் காணாமல் போயிட்டாராம் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அண்ணை அவருக்கு என்னைப்போல ஆங்கிலம் தெரியாதோ?!

ஆங்கிலம் தெரிந்தவன் தான் அறிவாளி என்றால் இங்கிலாந்து கோம் லெஸ் பிச்சைகாரனும் அறிவாளியே.

லண்டன் வந்த காலத்தில் நமக்கு  பேக்கரிதான் முதல் தொழில் அங்கு வீல் என்ற ஒருத்தர் இருப்பார் முழு பெயர் தெரியாது தெரிந்து கொள்ளவும் ஆர்வப்பட்டது இல்லை அரியாலை ஆள் இங்கிலிஷ் சும்மா பிச்சு உதறுவார் 9௦ கடைசிகளில் நம்ம ஆட்கள் நிறைய பேர் வந்தார்கள் அவர்கள் பலர் மனேஜர் லெவலுக்கும் பதவிக்கு சென்றார்கள் ஆனால் நம்ம ஆள் வீல் அவுனில் பாண் அடிக்கும் வேலைதான் கடைசி வரை செய்தார் என்று கேள்விபட்டேன் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.