Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தகுற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை - 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எங்கே? சரத்பொன்சேகா கேள்வி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   16 JUL, 2024 | 10:56 AM

image
 

முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா யுத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும்  குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்தப்பட்டவை என சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார்.

40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர் ஒருசம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் விசாரணையை தொடரமுடியவில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

mullivaikal11.jpeg

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறுதியுத்தத்தின்போது உயிர்தப்பினார்கள் அவர்களை நான் பாதுகாப்பாக வெளியேற்றினேன் முதலில் 2009 மே 19ம் திகதி வெள்ளமுள்ளிவாய்க்காலில் இருந்து 150,000 பேரை மீட்டேன், யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 85000 பேரை மீட்டேன் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா நாங்கள் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை தவிர்த்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் கனரக ஆயுதங்களை ஆட்டிலறிகள் போன்றவற்றை மிகவும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினோம், குறிப்பாக 2009ம் ஆண்டின் ஐந்து மாதங்களில் அவ்வாறே போரிட்டோம் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2009 இல் 2000 படையினரை இழந்தேன் என குறிப்பிட்டுள்ள அவர் 2008 ம் ஆண்டு முழுவதும் நான் 2000 படையினரை இழந்தேன் ஆனால் 2009 இன் நான்கரை மாதங்களில் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டதால் நான் 2000 படையினரை இழந்தேன் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் அந்த சிறிய பகுதிக்குள் முற்றுகையிடபட்டிருந்தார்கள் எங்களால் ஒரு மாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம் கண்மூடித்தனமாக பொதுமக்கள் உட்பட அனைவரின் மீதும் தாக்குதலை மேற்கொண்டிருந்தால் ஒருமாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம், ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை நாங்கள் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டோம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயமாக இந்த உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தகவல்கள் உண்மையென்றால்  நீங்கள் அந்த பகுதியில் எங்கு சென்றாலும் மனித புதைகுழிகளை பார்க்க கூடியதாகயிருக்கவேண்டும், ஆனால் அவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தில் உள்ள சிலர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை நீங்கள் நம்பவில்லையா?

பதில் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்னால் நிராகரிக்க முடியாது, நான் இது குறித்து நாடாமன்றத்திலும் பேசியுள்ளேன், இரண்டு முறை பேசியுள்ளேன்.

சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை மோதலின் போது இடம்பெறவில்லை யுத்தத்தின் பின்னரே இடம்பெற்றன.

https://www.virakesari.lk/article/188578

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ புதை குழிகள் இன்னும் தோண்டப்படாமல் உள்ளன. மக்களுக்கு முன் கையளிக்கப்பட்ட போராளிகள், மக்களை எங்கே என்று சொல்ல வக்கில்லை. தமது உறவினர்களை காணவில்லை என வருடக்கணக்கில் போராடும் மக்கள் பொய்யா சொல்கிறார்கள்? பச்சை இனவாதி மக்களையும் கொன்று விட்டு பொய்யையும் சொல்லி அதே தமிழ் மக்களிடம் வாக்கும் கேட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே

large.IMG_6869.jpeg.77dc091e89888a32792d

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கை நிராகரிக்காமல் இவனுக்கு வாக்குப்போட்ட தமிழருக்கு அடிச்ச அடி இது. Acid என்ற ஒன்றை பொன்சேகா கேள்விப்படேலையாம் நம்பீட்டம்.

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

வாக்கை நிராகரிக்காமல் இவனுக்கு வாக்குப்போட்ட தமிழருக்கு அடிச்ச அடி இது. Acid என்ற ஒன்றை பொன்சேகா கேள்விப்படேலையாம் நம்பீட்டம்.

சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடச் சொல்லி… சம்பந்தர் தானே சொன்னவர். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடச் சொல்லி… சம்பந்தர் தானே சொன்னவர். 

சம்பந்தர் சொல்லிக் கேக்கிற நிலையிலையா நாங்கள் இருந்தனாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா எதையோ பெறுவதற்காக இந்த இருபக்கமும் கூரான கத்தியை கையில் எடுக்கிறார். ஆனால் எங்கடையள் இதையும் பயன் படுத்தாதுகள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.