Jump to content

குறுங்கதை 18 -- பூவரசம் வேர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பூவரசம் வேர்
--------------------
எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன். பூவரசங்குழை வீட்டிலும், வெளியிலும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆடுகள் அறிவுள்ளவையாக இருந்தன. பூவரசம் குழை குப்பைக்குள் மட்டுமே போய்க் கொண்டிருந்தது.
 
பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீரென்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தது. அதில்  இருந்த மஞ்சள் பூ கண்ணுக்கு தெரிந்தது. பச்சை இலைகள் எப்போதும் பசுமையாக இருந்ததும் தெரிந்தது. பூவரசம் மரங்கள், எவரும் அவைகளைக் கவனிக்காமல் இருந்தாலும் கூட, ஒரு கவலையும் இல்லாமல் எப்போதும் செழிப்பாகவே இருந்தன.
 
சமூக ஊடகங்கள் மிகப் பிந்தியே எனக்கு அறிமுகமானது. அதுவும் ஒரே ஒரு ஊடகம் மட்டுமே. ஆனால் ஒரே ஒரு சமூக ஊடகமே ஒரு மனிதனுக்கு ஒரு வாழ்நாளில் போதும். மேலும் ஒருவர் எவ்வளவு தான் பிந்திச் சேர்ந்தாலும், சுழற்சி முறையில் வந்து கொண்டிருக்கும் பதிவுகளால், பிந்திச் சேர்ந்தவரும் முந்திச் சேர்ந்தவர்கள் போலவே சமூக ஊடகங்களில் ஒரு பூரண நிலையை மிக விரைவில் அடைந்தும் விடுகின்றார்.
 
பூவரசின் பயன்கள் என்ன என்னவென்று கும்பமுனி சித்தர் எழுதிய பாடல் ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வந்தது. அகத்திய முனிவரைத் தான் கும்பமுனி என்றும் சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் பூவரசு ஒரு ஆயுர்வேத மருந்தகம் என்று அந்தப் பாடல் சொல்கின்றது. பூவரசின் பச்சை இலை, பழுத்த இலை, பட்டை, வேர், பூ, விதை இவை எல்லாமே மருந்து என்றும், அவை என்ன என்ன நோய்களைக் குணப்படுத்தும் என்ற விளக்கங்களும் அதில் இருந்தது.
 
எல்லாமே மருந்து, எல்லாமே நோய் என்கின்ற மாதிரித்தான் சமூக ஊடகங்களில் பதிவுகளும், காணொளிகளும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு நண்பன் நான் அவன் வீட்டிற்கு போய் இருந்த பொழுது வாழைப்பூ வடை சுட்டுக் கொடுத்திருந்தான். முப்பது வருடங்களுக்கும் மேலாக நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டிருக்கவில்லை. நான் அவனிடம் போயிருந்த போது அவனுக்கு நீரிழிவு உச்சத்தில் இருந்தது. அவன் இப்போது இல்லை. இந்த விடயத்தில் முறையான ஆலோசனைகளை தகுதியானவர்களிடம் இருந்து பெறுவதே சரியான வழியாக இருக்கும்.   
 
ஊருக்கு போய் வரும் போது, ஒவ்வொரு தடவையும், சில பொருட்களை கட்டாயம் வாங்கி வருவது ஒரு வழக்கம். சுளகு, இடியப்ப தட்டுகள், இடியப்ப உரல் போன்றவை. நல்ல ஒரு இடியப்ப உரல் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க, அங்கே ஊரிலேயே ஒரு கடையில் பல இடியப்ப உரல்கள் நீட்டாகத் கட்டித் தொங்க விட்டிருப்பது தெரிந்தது. ஆட்டோவில் எங்கேயோ போய்க் கொண்டிருந்த நாங்கள் அந்தக் கடையடியில் ஆட்டோவை நிற்பாட்டச் சொன்னோம். ஆட்டோக்காரர் மிகவும் தெரிந்தவர், உறவினர் கூட.
 
எங்களுடன் இறங்கி வந்த ஆட்டோக்காரர் நாங்கள் உரல் வாங்குவதை தடுத்துவிட்டார். இந்த உரல்கள் சரியில்லை வேறு ஒரு இடத்தில் நல்ல உரல்கள் விற்கின்றார்கள், அங்கே கூட்டிக் கொண்டு போகின்றேன் என்றார். வீட்டில் இடியப்பம் எப்போதும் நல்லாவே தான் வந்து கொண்டிருந்ததது. இன்னும் நல்ல உரலில் இன்னும் நல்லா இடியப்பம் வரும் போல என்று நினைத்தேன். 
 
நல்ல உரல் விற்கிற அந்தக் கடை அயல் கிராமத்தில் இருந்தது, ஆனால் நாங்கள் போன அன்று பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த வீட்டில் கேட்டோம்.  இப்ப சில நாட்களாகவே பூட்டியிருக்குது என்றார்கள். திரும்பி வரும் போது ஆட்டோக்காரர் நல்ல இடியப்ப உரல் என்ன மரத்தில் செய்வார்கள் என்று எனக்குத் தெரியுமா என்று கேட்டார். எனக்கு உண்மையில் தெரியாது, ஆனால் வேம்பாக இருக்குமோ என்று அவரைக் கேட்டேன். 'பூவரசம் வேர்' என்ற பதில் அவரிடமிருந்து வந்தது.
 
இதைக் கும்பமுனி கூட அவரின் பூவரச மரம் பற்றிய பாடலில் சொல்ல மறந்துவிட்டார். அடுத்த முறை ஊருக்கு போகும் போது பூவரசம் வேரில் செய்த ஒரு இடியப்ப உரல் வாங்கியே தீரவேண்டும்.
  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் 4000ரூபா வரை போனது பூவரசம் தடியில் செய்த இடியப்ப உரல்.
பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டுகள் வாங்கிவிடாதீர்கள், பனை நார்/பிரப்பந்தடியில் செய்த இடியப்பத்தட்டுகள் வாங்குங்கோ.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

முன்னர் 4000ரூபா வரை போனது பூவரசம் தடியில் செய்த இடியப்ப உரல்.
பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டுகள் வாங்கிவிடாதீர்கள், பனை நார்/பிரப்பந்தடியில் செய்த இடியப்பத்தட்டுகள் வாங்குங்கோ.

மிக்க நன்றி ஏராளன்.

பிளாஸ்டிக்கால் புற்றுநோய் வருகுது என்று சொன்ன பின், யார் சொன்னார்கள் என்று நான் தேடிப் பார்க்கவில்லை, இங்கு பல விதமானவற்றால் செய்த பல பொருட்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நான்ஸ்டிக் பாத்திரங்களும் புற்றுநோயை உண்டாக்கும் என்ற செய்தி வந்து அவையும் பின்னுக்கு போய்விட்டன. எவர் சில்வர் பாத்திரங்கள் பற்றி இன்னமும் செய்தி எதுவும் வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன்.

முடிந்தளவிற்கு மரம், நார், ஓலை போன்றவற்றால் செய்த பொருட்களை பாவித்தால், இவர்களின் ஆராய்ச்சிகளை நாங்கள் ஆராயத் தேவையில்லை............👍.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன்.

 

எங்கள் வீட்டிலும் சுற்றிவர பூவரசு முருங்கை கிளுவை கிளிசறியா இப்படி பல மரங்கள் வீட்டு எல்லையாக இருந்தது.

ஆடு மாடுகளுக்கு குழை.பாடசாலை போகும் போது சாப்பாடு கட்ட பெரிய மூன்று இலை காணும்.

அப்பாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் எம்மை பதம் பார்த்ததும் இதே பூவரசு தான்.

அத்தோடு இடியப்ப உரல் செய்யவென்று பெரிய கொழுத்த பூவரசுகளை விட்டி எடுப்பார்கள்.

இப்ப என்ன கொடுமை என்றால் வீட்டுக்கு வீடு மதில்களைக் கட்டி அழகு பார்க்கிறார்கள்.

1 hour ago, ரசோதரன் said:

பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீரென்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தது

இந்தப் பாட்டு வரமுதலே பூவரசு எம்முடன் வாழத் தொடங்கிவிட்டது.

இல்லை இல்லை பூவரசுடன் நாம் வாழத் தொடங்கிவிட்டோம்.

1 hour ago, ஏராளன் said:

பனை நார்/பிரப்பந்தடியில் செய்த இடியப்பத்தட்டுகள் வாங்குங்கோ.

இதில் இடியப்பம் அவித்தால் நன்றாக உலர வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் வெகுவிரைவிலேயே சக்குப் பிடித்துவிடும்.

எங்க வீட்டில் அவசரஅவசரமாக எங்கோ புறப்பட்ட போது இப்படி நடந்து அத்தனையும் எறிந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

ஊருக்கு போய் வரும் போது, ஒவ்வொரு தடவையும், சில பொருட்களை கட்டாயம் வாங்கி வருவது ஒரு வழக்கம். சுளகு, இடியப்ப தட்டுகள், இடியப்ப உரல் போன்றவை. நல்ல ஒரு இடியப்ப உரல் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க, அங்கே ஊரிலேயே ஒரு கடையில் பல இடியப்ப உரல்கள் நீட்டாகத் கட்டித் தொங்க விட்டிருப்பது தெரிந்தது.

நினைச்சது சரிதான். சமையல் ஐயாதான் என்பது மேலும் உறுதியாயிற்று.

பூவரசும் தேக்கு மாதிரி உறுதியானதுதான். தளபாடம் செய்யப் பயன்படுத்துவார்கள்.

அடுத்தமுறை ஊருக்குப் போய் பூவரசம் வேரில் செய்த இடியப்ப உரல் வாங்கி வந்து இடியப்பம் அவிச்சு எப்படி  இருந்தது  என்று சொல்லுங்கள். ஒன்றும் அவசரம் இல்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

 

அப்பாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் எம்மை பதம் பார்த்ததும் இதே பூவரசு தான்.

நீங்கள் சொன்னவுடன் வீட்டில் பூவரசம் தடி ஒன்று மேலே செருகப்பட்டிருப்பது ஞாபகத்தில் வருகின்றது.

நினைத்தே பார்க்க முடியாத கால மாற்றம் ஒன்று........... இப்பொழுது பிள்ளைகளுக்கு அடிப்பதற்காக தடியோ அல்லது பிரம்போ வைத்திருப்பதை நினைக்கவே மனம் மறுக்கின்றது........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா கு.க .எழுத்தாளரே...ஊரில் பூவரச மரத்தின்..முக்கியமான..தேவை ஒன்று இருந்ததையும் மறந்து விட்டீர்கள்  தெரிகிறது...யாராவது மோசம்போனால் (ஏரிப்பவர்களானால்)  முதலில் தேடுவது..நல்ல பச்சை பூவரசைத்தான்...அதுதான்  பூவுடலின்மேல் ...குறுக்காக வைக்கப்படும் நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்கப்படும்... அதாவது ..இறுதிவாரை நம்முடன் வந்து சேருவார்...இந்த நெஞ்சாங்கட்டை சரியில்லை எனில்..அவர் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவாராம் என்பது கதை....அதைவிட இன்னுமொன்றும் இருக்கு..கோவில் தேவைகளுக்கு பாவிக்கும் சகடைகளுக்கு...பெரிய பூவரசுகள் ..அச்சுலக்கை ஆகவும் பாவிக்கப் படும்...சாரு  இது நம்ம ஏரியாக் கதை இது..

2 hours ago, ரசோதரன் said:

நீங்கள் சொன்னவுடன் வீட்டில் பூவரசம் தடி ஒன்று மேலே செருகப்பட்டிருப்பது ஞாபகத்தில் வருகின்றது.

நினைத்தே பார்க்க முடியாத கால மாற்றம் ஒன்று........... இப்பொழுது பிள்ளைகளுக்கு அடிப்பதற்காக தடியோ அல்லது பிரம்போ வைத்திருப்பதை நினைக்கவே மனம் மறுக்கின்றது........... 

பட்டென்று புடுங்கி..பச்சையாய் தாற அடி ..இன்னும் சுவையாய் இருக்கும் ... எனக்கு நிறைய அனுபவம்

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுவண்டிலின் இரு மாடுகளும் கட்டுமிடமான நுகம் பூவரசிலேயே செய்வதாக எண்ணுகிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

மாட்டுவண்டிலின் இரு மாடுகளும் கட்டுமிடமான நுகம் பூவரசிலேயே செய்வதாக எண்ணுகிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

நுகம் மஞ்சவுண்ணாவிலும் செய்வார்கள் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

நீங்கள் சொன்னவுடன் வீட்டில் பூவரசம் தடி ஒன்று மேலே செருகப்பட்டிருப்பது ஞாபகத்தில் வருகின்றது.

பூவரசம் தடி எல்லாம் செருகி வைச்சிருக்கதேவையில்லை. துவரம் கேட்டி தான் செருகி வைச்சிருக்க வேணும். பூவரசம் கேட்டி  ஊரிலையெல்லாம் நினைச்ச நேரத்தில நினைச்ச இடத்திலை புடுங்கி வெளுக்கலாம்.பச்சை மட்டைய விட  விசேசமானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, ஈழப்பிரியன் said:

மாட்டுவண்டிலின் இரு மாடுகளும் கட்டுமிடமான நுகம் பூவரசிலேயே செய்வதாக எண்ணுகிறேன்.

 

 

இதை நான் ஆமோதிக்கின்றேன்..

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

அய்யா கு.க .எழுத்தாளரே...ஊரில் பூவரச மரத்தின்..முக்கியமான..தேவை ஒன்று இருந்ததையும் மறந்து விட்டீர்கள்  தெரிகிறது...யாராவது மோசம்போனால் (ஏரிப்பவர்களானால்)  முதலில் தேடுவது..நல்ல பச்சை பூவரசைத்தான்...அதுதான்  பூவுடலின்மேல் ...குறுக்காக வைக்கப்படும் நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்கப்படும்... அதாவது ..இறுதிவாரை நம்முடன் வந்து சேருவார்...இந்த நெஞ்சாங்கட்டை சரியில்லை எனில்..அவர் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவாராம் என்பது கதை....அதைவிட இன்னுமொன்றும் இருக்கு..கோவில் தேவைகளுக்கு பாவிக்கும் சகடைகளுக்கு...பெரிய பூவரசுகள் ..அச்சுலக்கை ஆகவும் பாவிக்கப் படும்...சாரு  இது நம்ம ஏரியாக் கதை இது..

👍.....

இவை எல்லாமே எனக்கு புதிய தகவல்கள், அல்வாயன்.....

கும்பமுனி என்ன பாட்டெழுதி வைத்திருக்கின்றாரோ.... அவருக்கும் பூவரசு அறிவு அரைகுறை போல.....🫢.

5 hours ago, குமாரசாமி said:

பூவரசம் தடி எல்லாம் செருகி வைச்சிருக்கதேவையில்லை. துவரம் கேட்டி தான் செருகி வைச்சிருக்க வேணும். பூவரசம் கேட்டி  ஊரிலையெல்லாம் நினைச்ச நேரத்தில நினைச்ச இடத்திலை புடுங்கி வெளுக்கலாம்.பச்சை மட்டைய விட  விசேசமானது

👍.....

துவரம் தடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் பார்த்ததில்லை...... ஊரில் மரங்கள், வேலிகள் குறைவு தான் ஒப்பீட்டளவில்.....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவரசம் கட்டையில்தான் இடியாப்ப உரல் செய்வது....... அதன் வேரில் இடியாப்ப உரல் செய்வது எல்லாம் எமது தாத்தன் காலத்துடன் போச்சுது ....... இப்ப ஒரு உரல் செய்யுமளவு வேருள்ள பூவரசு எங்கு இருக்கு......அந்தளவு வைரமான வேருள்ள பூவரசு வளர குறைந்தது 50 வருடமாவது இருக்க வேண்டும்...... அதெல்லாம் நாங்கள் தறித்து மதில்கள் கட்டி விட்டம் .......!

ஒரு வீட்டில் யாராவது மோசம்போனால் முதல் வேலையாக எல்லையில் நிக்கும் பெரிய பூவரசு ரெண்டைத் தறித்து சுடலைக்கு அனுப்பி விடுவார்கள்......!

நெஞ்சாங் கட்டை சறுக்கினால் பிணம் சுருண்டு எழும்பிவிடும் ......பிறகென்ன கட்டையால் அடித்து வளத்தி எரிப்பார்கள் ........ அவரும் சமத்தாக ஒரு பிடி சாம்பலாவார் ......!

ஒரு தகவல்: இப்பவெல்லாம் வீர விறகுகள் வைத்துத்தான் எரிப்பது.......எதை வைத்து எரித்தாலும் மனித உடலின் சாம்பல் ஏனையவற்றில் இருந்து தனியாகத் தெரியும்......வாளியால் தண்ணீர் ஊற்றி அலசும் போது ஏனைய சாம்பல் கரைந்து கலைந்து போக இது மட்டும் எலும்புகளும் உக்கி  தனியாக வெள்ளையாய் தெரியும் ...... அவற்றைச் சேகரித்துத்தான் கடல், குளம், ஆற்றிலோ விட்டு  காடாத்து செய்வார்கள்.....!

இப்ப உள்ள தலைமுறைக்குத் தெரியக்கூடியவாறு பல தகவல்கள் இதை வருகின்றன......நன்றி ரசோ ........! 👍

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு! தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவா் தொிவித்தாா். https://athavannews.com/2024/1397827 @Kapithan 
    • மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை: நீண்ட வரிசையில் பொதுமக்கள்! கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெறுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் கடந்த பல நாட்களாக மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர் குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது இதனையடுத்து கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக இணையவழி ஊடாக முன்கூட்டிபதிவு செய்யும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்திருந்தார். இதனையடுத்து நாளாந்தம் 750 கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக மக்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக காத்திருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது அந்த வகையில் இன்றைய தினமும் மக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்ததனை அவதானிக்க முடிந்தது. https://athavannews.com/2024/1397866
    • கொடுத்த கடனுக்கு வட்டியும் முதலும் எடுக்காமல் விடமாட்டானுக.  😀
    • தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்? சுமந்திரன் எப்படி TNA இற்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் தொிவித்தாா். கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைவர் புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது. 2010ம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி TNA க்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்” என அவா் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1397836
    • தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.