Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதல் பிரிவு - சில கீற்றுக்கள்

Featured Replies

கடற்கரையில்

நாம் நடந்த

சுவடுகளை

கடலலை அழிக்கும்!

கண்ணே நீ

என் இதயத்தில்

நடந்த சுவடுகளை

யாரழிப்பார்?

***********

மனசுக்குள்

மத்தாப்புக்

கொளுத்தியவள்...

மனசையே

கொளுத்துவாள் என்று

யார் அறிவார்?

***********

வீணை அங்கே

விரல்கள் இங்கே

இராகத்தை மட்டும்

ஏனடி

திருடிக் கொண்டாய்?

***********

என் இதயச்

சுவற்றில்

உன்

ஞாபகச் சிலுவைகள்!

எப்போதடி

உயிர்த்தெழும்?

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பிரிவில விரக்தியாய் வந்த உங்க கவிதை வரிகள் நன்றாய் இருக்கு .

கடற்கரையில்

நாம் நடந்த

சுவடுகளை

கடலலை அழிக்கும்!

கண்ணே நீ

என் இதயத்தில்

நடந்த சுவடுகளை

யாரழிப்பார்?

கவிரூபன் அண்ணா காதல் பிரிவு கவிதை போல இருகிறது கவிதை வரிகள் நன்றாக இருகிறது!!ஆனால் காதல் பிரிவு நன்றாக இருக்காது!!இந்த வரிகளிற்கான கேள்விக்கு ஜம்மு பேபியின் பதில் கண்ணே நீ இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பர் என்றா என்னொருத்தி உங்கள் இதயத்தில் வந்தா தானா அழிந்திடும்!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

உறவென்று வந்ததும்,

உயிருருக வார்த்தைகளைத் தந்ததும்,

சிறகை விரித்ததும்.

பறந்ததும்.....!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

க.பி அக்கா, ஜம்மு பேபி (???) நன்றிகள்...

வீணை அங்கே

விரல்கள் இங்கே

இராகத்தை மட்டும்

ஏனடி

திருடிக் கொண்டாய்?

காதல் கவிதைகள் நன்றாக உள்ளது பாராட்டுக்கள் கவிரூபன்

Edited by இலக்கியன்

அருமையான கவிதை வாழ்த்துக்கள் கவிரூபன்.

பிரிவில் வந்த உங்கள் கவிதை கூட அழகாக உள்ளது அண்ணா

மனசுக்குள்

மத்தாப்புக்

கொளுத்தியவள்...

மனசையே

கொளுத்துவாள் என்று

யார் அறிவார்?

நெ.போ அண்ணா பார்த்த சொல்லுவார்..... "இதுக்குதான் சொல்றனான் காதலிக்க வேண்டாம் என்று" :):(

  • தொடங்கியவர்

இலக்கியன், மருமகன் (கன நாளா ஆளைக் காணலைப் போல....), கவரிமான் உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

நெ.போ அண்ணா பார்த்த சொல்லுவார்..... "இதுக்குதான் சொல்றனான் காதலிக்க வேண்டாம் என்று"

எல்லாம் ஒரு வகை சுகம் தானே.... :icon_mrgreen:

கவி ரூபன் கவிதை நல்லா இருக்கு...யம்முன்ர சிற்றுவேஸன் கவிதையும்தான் :-

  • தொடங்கியவர்

சிநேகிதி வருகைக்கு நன்றி...

என் இதயச்

சுவற்றில்

உன்

ஞாபகச் சிலுவைகள்!

எப்போதடி

உயிர்த்தெழும்?

நல்ல வரிகள்!

காதல் சோகத்தில் வரைந்த கவிவரிகள் அழகு கவி ரூபன்!

உறவென்று வந்ததும்,

உயிருருக வார்த்தைகளைத் தந்ததும்,

சிறகை விரித்ததும்.

பறந்ததும்.....!!

நிழலென வந்ததும்,

விரல்களை கோர்த்ததும்,

இதயத்தை பறித்ததும்,

நிஜமற்று போனதும்....!

சிநேக் அக்கா சிட்டுவேசன் கவிதை நல்லா இருக்கோ அது அரைவாசி உல்டா அது தான் நல்லா இருக்குது போல என்றாலும் நன்றி!! :unsure:

நிழலென வந்ததும்,

விரல்களை கோர்த்ததும்,

இதயத்தை பறித்ததும்,

நிஜமற்று போனதும்....!

சகி அக்கா உங்க சிட்டுவேசன் கவிதையும் நல்லா தான் இருக்கு :) ..........நிழல் எப்பவும் நிஜம் இல்லை என்று சகி அக்காவிற்கு தெரியாம போச்சு பேபிக்கே தெரியும்!! :)

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...

இதயத்தை காதல் தழுவ

பிரியா பிரிவு

சோகம் சொல்ல

கவிதை அருமை

என்றாலும் உன் சாபம் உடைத்து

வந்து விட்டேன் ஆனாலும்

அதிகாலை தேனீர் கசக்கின்றது

  • தொடங்கியவர்

கஜந்தி,

அதிகாலை தேநீர் கசக்கிறது என்றால் சில காரணங்கள் இருக்கலாம்

- கசப்பு மருந்து ஏதேனும் தேநீரில் கலந்திருக்கலாம்

- வாயில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் (குறிப்பாக நாக்கில்... )

ஆகவே கவிஞர்களுடன் கலந்தாலோசிக்காமல் வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள்... :D

சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படியே கவிதை எழுதிப் புலம்பிட்டு இருங்கோ.. ஏமாத்திட்டுப் போறவள்.. காயா இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருப்பாள்..! :D:D

நீங்கள் இப்படியே கவிதை எழுதிப் புலம்பிட்டு இருங்கோ.. ஏமாத்திட்டுப் போறவள்.. காயா இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருப்பாள்..! :D:lol:

அநுபவம் பேசுது. பாவம் நம்ம நெடுக் அண்ணா :D

கவிரூபன் என்ன நீங்கள் கவிதையில் தான் பிரிவை உணர்ந்து கவலைப்படுறீங்களாஅ? இல்லை நிஜத்திலுமா? :D

நல்ல கவிவரிகள் கவிரூபன்

கஜந்தி,

அதிகாலை தேநீர் கசக்கிறது என்றால் சில காரணங்கள் இருக்கலாம்

- கசப்பு மருந்து ஏதேனும் தேநீரில் கலந்திருக்கலாம்

- வாயில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் (குறிப்பாக நாக்கில்... )

ஆகவே கவிஞர்களுடன் கலந்தாலோசிக்காமல் வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள்... jhq;f

தாங்கள் ஊற்றிய தேனீர் குடித்தால் வந்த பிரச்சனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.