Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 AUG, 2024 | 09:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.  இதனை அலட்சியப்படுத்த முடியாது. தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

குருணாகல் - கல்கமுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

கட்சி என்ற ரீதியில் நாங்கள் நாட்டுக்கு அபிவிருத்தி செய்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நகரத்தை அபிவிருத்தி செய்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையை நாங்கள் செயற்படுத்தினோம். 

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.  இதனை அலட்சியப்படுத்த முடியாது. 

பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத்தாக்கினார்கள். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர்  குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. 

உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். இதனை பற்றி எந்த நாடும் பேசுவதில்லை. நாங்கள் மனிதாபிமான கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம். தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

எமது அரசாங்கத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம். இராணுவத்தினர் இந்த நாட்டுக்கு செய்த சேவையை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர்களுக்கான புதிய நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்போம். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளுக்கமைய  விவசாயத்துறையில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தால் இரண்டு போக விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய கொள்கையையே நான் செயற்படுத்துவேன். 

இறக்குமதி செய்து உணவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தேசிய உற்பத்திகளை சகல வழிகளிலும் மேம்படுத்த விசேட கொள்கை திட்டங்களை செயற்படுத்துவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/192152

  • கருத்துக்கள உறவுகள்

namal-1.jpg?resize=680,375

தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!

நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

குருணாகல் – கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

கட்சி என்ற ரீதியில் தாங்கள் நாட்டுக்கு அபிவிருத்திகளைச் செய்துள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையைச் செயற்படுத்தியதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிவதாகவும்  நாமல் ராஜபக்ஷ தொிவித்தாா்.

அத்துடன், பிறிதொரு தரப்பினர் நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர்  குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்றும், அவா்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவா் குற்றம் சுமத்தியுள்ளாா்.

உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுவதைப்பற்றி எந்த நாடும் பேசுவதில்லை எனவும்,  தமிழர்களைப் பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

https://athavannews.com/2024/1397380

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம் இல்லாமல் உங்கள் அரசியல் நகராது என்பது தெரியும். உங்களின் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி உறுதி என்பதை  தெரிவித்து கொள்கிறேன்.😆

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-loewe-bild-0039.gifanimiertes-loewe-bild-0105.gif animiertes-loewe-bild-0005.gif

இனத் துவேசத்திலை...  தகப்பன் எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயுது. 😂

Edited by தமிழ் சிறி

நாமலின் நேர்மையை பாராட்டுகின்றேன்.

மற்றவர்களின் மனசிலும் இது தான் உள்ளது. முக்கியமாக சஜித், ரணில், அனுர ஆகிய முன்னனி வேட்பாளர்களின் மனசிலும் இது தான் உள்ளது. ஆனால், தமிழ் வாக்குகளிலும் தம் வெற்றி தங்கியுள்ளதால் வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றனர். எப்படியும் தான் வெல்லப் போவதில்லை என்பதால், கடும்போக்கு சிங்கள வாக்காளர்களையாவது கவரலாம் என நேர்மையாக கதைக்கின்றார் நாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

நாமலின் நேர்மையை பாராட்டுகின்றேன்.

மற்றவர்களின் மனசிலும் இது தான் உள்ளது. முக்கியமாக சஜித், ரணில், அனுர ஆகிய முன்னனி வேட்பாளர்களின் மனசிலும் இது தான் உள்ளது. ஆனால், தமிழ் வாக்குகளிலும் தம் வெற்றி தங்கியுள்ளதால் வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றனர். எப்படியும் தான் வெல்லப் போவதில்லை என்பதால், கடும்போக்கு சிங்கள வாக்காளர்களையாவது கவரலாம் என நேர்மையாக கதைக்கின்றார் நாமல்.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் போர்க்குற்ற விசாரணையோ ராணுவத்தைத் தண்டிப்பதோ பிக்குகளைப் பகைப்பதோ செய்யப்போவதில்லை. சிலவேளை ஒரு சிலர் அவர்களைத் தூக்கிப்பிடிக்காமல் விடுவினம் அவ்வளவும் தான்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இனவாதம் இல்லாமல் உங்கள் அரசியல் நகராது என்பது தெரியும். உங்களின் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி உறுதி என்பதை  தெரிவித்து கொள்கிறேன்.😆

நாய் நடுக்கடல் போனாலும் நக்கித்தான் குடிப்பதை மாற்ற முடியாது. அதுபோலவே மகிந்த குடும்பத்தினராலும் இனவாதம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. நாயைவிட மகிந்த குடும்பத்துக்குக் கிடைத்த பெறுபேறு, மகிந்தர் சேர்த்து  வைத்திருக்கும் மில்லியன்கள். இது பணநாயக உலகம், அவர்கள் பின்னால் நாக்கைத் தொங்கப்போட்டுத்திரியவும் நாய்கள் பல உள்ளன.🐕🦮

  • கருத்துக்கள உறவுகள்

2019ம் ஆண்டு கோதாபய 69 இலட்சம் வாக்குகள் எடுத்து வென்ற போது போது யாழ் மாவட்டத்தில் அவருக்கு கிடைத்தது 23, 261 வாக்குகள் மட்டுமே. சஜித்திற்கு கிடைத்தது 312,722 வாக்குகள். 

பொய் வாக்குறுதிகளைச் சொல்லி நீங்கள் வடக்கில் வாக்குகளை பெற்றுக் கொள்ளுங்கள், உண்மையைச் சொல்லி நாங்கள் மற்ற இடங்களில் பெற்றுக் கொள்கின்றோம் என்று ராஜபக்ச குடும்பம் முடிவெடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வடக்கு வாக்கு இப்பொழுது இன்னும் தேய்ந்து, ஒரு பொருட்டாக இல்லாமலும் ஆகிக் கொண்டிருக்கின்றது. 

கோதாவும் பசிலும் கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்திருந்தால், நாமலும் ஒரு காலத்தில் ஜனாதிபதியாகி இருப்பார். கோதாவும் பசிலும் பண்ணிய சேட்டையில் நாமலுக்கு வடக்கும் இல்லை, தெற்கும் இல்லை என்றாகிவிட்டது.     

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பைச் "சிரிக்கலாம் வாங்க" பகுதிக்கு மாற்றுமாறு சிபாரிசு செய்கிறேன். 

😁

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்க போவதில்லை - நாமல் ராஜபக்ஷ

Published By: VISHNU   31 AUG, 2024 | 01:49 AM

image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன. நாடு என்ற ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தால்  வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பியகம பகுதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்துவோம். தேசிய உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவோம். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவோம்.

தொழிலின்மை பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளின் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்துவோம். அதற்கான திட்டங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிப்போம். தேசிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்போம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பொய்யுரைக்க வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்போம், முடியாததை முடியாது என்போம். வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன. நாடு என்ற ரீதியில் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அப்போது அரசியல்வாதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் போகும்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஒருமித்த தன்மையில் உள்ளன. அதிகார பகிர்வு, தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தல், இறக்குமதி பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை நாங்கள் வகுக்க போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/192442

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.