Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

04 SEP, 2024 | 01:31 PM
image
 

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/192821

  • கருத்துக்கள உறவுகள்

girl-.1.jpg?resize=610,375

தனது மகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது!

தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை , ஆசிரியரான அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1398184

@நிழலி

15 minutes ago, தமிழ் சிறி said:

girl-.1.jpg?resize=610,375

தனது மகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது!

தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை , ஆசிரியரான அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1398184

@நிழலி

காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.

நானும் அதைத் தான் நினைத்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.

நிழலி,  தகப்பனின் உத்தியோகத்தை கவனித்தீர்களா. ஆசிரியராம்.
எப்படியிருந்த சமூகம், தலைகீழாக மாறியிருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.

பிஸ்டலால் தீர்க்கப்பட கூடிய விசயம் அல்ல....கழுத்து வெட்டுகின்ற நாடுகளிலும் இது இருந்த படியால் தான் பெண்கள் முற்றாக மறைத்து கொண்டு வீடுகளில் வாழ வேண்டியிருக்கு ....தண்டனை வழங்கலாம் ஆனால் மற்றொருவன் செய்ய தான் போகிறான்...

  • கருத்துக்கள உறவுகள்

@putthan

 உண்மையை அப்படியே சொன்னீர்கள் அண்ணா👍

21 minutes ago, putthan said:

பிஸ்டலால் தீர்க்கப்பட கூடிய விசயம் அல்ல....

வெறுமனே கடுமையான தண்டனைகளால் இப்படியான குற்றங்களை 100 வீதம் இல்லாமல் செய்ய முடியாது என்பது நிரூபிக்கட்டது தான். ஆனால் 99% குறைக்க முடியும். இதனால் தான் புலிகள் இருந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் மிக மிக குறைவாக இருந்தன.

Quote

கழுத்து வெட்டுகின்ற நாடுகளிலும் இது இருந்த படியால் தான் பெண்கள் முற்றாக மறைத்து கொண்டு வீடுகளில் வாழ வேண்டியிருக்கு ....தண்டனை வழங்கலாம் ஆனால் மற்றொருவன் செய்ய தான் போகிறான்...

கழுத்து வெட்டுகின்ற தண்டனை இருக்கும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே. இங்கு பெண்களை முழுக்க மூடிக் கொண்டு இரு என்று உத்தரவு போடுவது, கடைந்தெடுத்த அடிப்படைவாத இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் ஆகும். இது பெண்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட நடைமுறை அல்ல.

இந்த கழுத்தறுக்கும் நாடுகளில் முஸ்லிம் தந்தை தன் மகளை வல்லுறவுக்குள்ளாக்கினால் பெரியளவில் தண்டனை கொடுக்க மாட்டாது. காரணம், திருமணத்துக்கு முன் பெண்ணின் பாதுகாவலன் அவளது தந்தை அல்லது சகோதரன் என்பதால், அவர்களுக்கு அதுக்கான உரிமை இருக்கு என்று நியாயம் பிளப்பர்.

https://english.alarabiya.net/News/middle-east/2015/08/02/Saudi-court-sentences-man-who-raped-daughter-to-13-years-in-jail-

https://www.buzzfeednews.com/article/tasneemnashrulla/saudi-arabian-preacher-who-raped-and-tortured-his-5-year-old
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.

பிஸ்ரல் குழுக்களையும் மின்கம்ப தண்டனையையும் வெறுத்த பலர் 

இன்று இப்படி தண்டனை கொடுக்க யாராவது வரமாட்டார்களா என ஏங்குகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.