Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
07 SEP, 2024 | 02:22 PM
image

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், அதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். இத்தேர்தலில் அவர் வெல்லப்போவதில்லை என்றாலும், இதன்மூலம் கிடைக்கப்பெறும் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.    

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் அரியநேத்திரன், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் வட, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கை ஒருபோதும் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அல்லாத ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தைக் கொண்டிருக்கிறார்களாக என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அரியநேத்திரன், அவ்வாறானதொரு கருத்தை அவர்கள் இதுவரையில் எங்கும் கூறவில்லை எனவும், அவர்கள் அத்தகைய உத்தேசத்தில் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் களமிறங்குவார்கள் என்று தான் கருதவில்லை எனவும், மாறாக பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அவர்களது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வார்கள் எனவும் அரியநேத்திரன் விளக்கமளித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/193076

  • கருத்துக்கள உறவுகள்

அவரேன் போட்டியிடப் போறார். எல்லாத்தையும் முடிச்சாப்பிறகு  என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் பாராளுமன்றம் போகவேணும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

அவரேன் போட்டியிடப் போறார். எல்லாத்தையும் முடிச்சாப்பிறகு  என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் பாராளுமன்றம் போகவேணும்?

அப்ப முடிவே செய்து போட்டியள்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அப்ப முடிவே செய்து போட்டியள்!!

கிழக்கு மாகாணத்தில் இவருக்கு கிடைக்கிற அடி எப்பவுமே வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரித்துவிடப்போகின்றது. தமிழர் தாயகம் இணைந்த வடக்கு கிடக்கு மாகாணங்கள் என்ற நிலைப்பாட்டிற்கு பலத்த அடிவிழப்போகின்றது!  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

கிழக்கு மாகாணத்தில் இவருக்கு கிடைக்கிற அடி எப்பவுமே வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரித்துவிடப்போகின்றது. தமிழர் தாயகம் இணைந்த வடக்கு கிடக்கு மாகாணங்கள் என்ற நிலைப்பாட்டிற்கு பலத்த அடிவிழப்போகின்றது!  

அப்ப சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்கில் தான் சங்கே முழங்கு கோஷம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் சாணக்கியனும் ஊதிய சங்கை விட சின்னதாகவே இருக்கும் என நம்பலாம்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

சுமந்திரனும் சாணக்கியனும் ஊதிய சங்கை விட சின்னதாகவே இருக்கும் என நம்பலாம்.🙂

சுமந்திரனும் சாணக்கியனும் இந்தியாவுக்கு ஊதியிருந்தால் போற்றப்பட்டிருப்பர் இல்லையா? 

இந்தியாவிற்கு கழுவும்வரை தமிழருக்கு விடிவு இல்லை. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

சுமந்திரனும் சாணக்கியனும் இந்தியாவுக்கு ஊதியிருந்தால் போற்றப்பட்டிருப்பர் இல்லையா? 

இந்தியாவிற்கு கழுவும்வரை தமிழருக்கு விடிவு இல்லை. 

😁

யாருக்கு கழுவினாலும் விடிவில்லை .😂


இந்தியாவை மனிதராகவே மதிப்பதில்லை. சஜித்துக்கு கழுவினால் மட்டும் போற்றி விடுவமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அப்ப சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்கில் தான் சங்கே முழங்கு கோஷம். 😂

சும்மா இருந்த சங்கை எடுத்து ஊதி முழங்கி கெடுப்பது சும்மா இல்லை அது தமிழ் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையாம் சங்கு ஊதி கெடுக்க உதவி செய்கின்ற  சிறிதரன் விளங்கபடுத்தி உள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.