Jump to content

இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-7126.jpg
விமானத்தில் வழங்கப்படும்
உணவு என்பது ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தரப்படும் உணவின் தரத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது நாங்கள் அறிந்ததுதான்.ஆனாலும் அதன் தரம் முக்கியமானது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு  குறைந்த பட்சம் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது.

Suyesha Savant தன் மகனுடன் டெல்லியிலிருந்து நியூயோர்க்கிற்கு எயர் இந்தியாவில் பறந்து கொண்டிருந்தாள். விமானத்தில் வழங்கப்பட்ட உணவை அவள் உட்கொள்ள ஆரம்பித்தாள். ஒம்லெட்டுக்கும் உருளைக்கிழங்கும் இடையில் இரண்டு அன்ரெனாக்களுடனும் இறக்கைகளுடனும் கருமையான உடல் கொண்ட கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. அதைகண்டதும் அவள் அதிர்ச்சி அடைந்தாள்.

நான் அந்தக் கரப்பான் பூச்சியை கண்டு பிடிக்க முன் எனது இரண்டு வயது மகன்  அந்த உணவில் பாதியைச் சாப்பிட்டு விட்டான்.அந்த உணவை நான் விசமாகவே பார்க்கிறேன்என Suyesha Savant டிவிட்டரில் (X) பதிந்திருக்கிறாள்.

https://indianexpress.com/article/business/aviation/cockroach-meal-air-india-delhi-new-york-flight-9593185/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சி என்று புரிந்து கொள்ள முடியாத இந்த இரண்டு வயது பிள்ளை பாவம் தான்.......இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியாது..நான் ஓய்வாக இருக்கும் போது விமான பயயத்தில் ஏற்படக் கூடிய நன்மை தீமைகள் பற்றி பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் விமானத்த்தில் வழங்கப்படும் தேனீரிலிருந்து, பிளைங்கற்,தலையணை வரை சுகாதாரமற்றவையாகவே கருதுகிறேன்.கொரோணாவின் பின்னர் பலராலும் வீடியோக்களாக வெளியிடப்படும் விடையங்கள் நிறையவே பார்க்க கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது.

கரப்பான் பூச்சியை  அங்காலை தூக்கி வைச்சமாம்......இருக்கிறதை மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டமாம் எண்டு இருக்கணும்.😎
அந்த ஓம்லெட்ல எலி இல்லை எண்டு அந்த யுவதி சந்தோசப்பட்டிருக்கோணும்....😂
போறது ஏர் இண்டியா இதில குறை குற்றம் வேற......😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கரப்பான் பூச்சியை  அங்காலை தூக்கி வைச்சமாம்......இருக்கிறதை மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டமாம் எண்டு இருக்கணும்.😎
அந்த ஓம்லெட்ல எலி இல்லை எண்டு அந்த யுவதி சந்தோசப்பட்டிருக்கோணும்....😂
போறது ஏர் இண்டியா இதில குறை குற்றம் வேற......😁

உலகத்தில் நான் போக விரும்பாத விமான நிலையம் - மும்பை சத்ரபதி சிவாஜி  சர்வதேச விமான நிலையம்.  (அதற்காக  மற்றய இந்திய விமான நிலையங்கள் திறமோ என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் வேறெந்த இந்திய விமான நிலையத்திற்கும் நான் செல்லவில்லை. )

இந்தியர்களின் உண்மையான முகத்தை அங்கே பார்க்கலாம். 

🤮

Edited by Kapithan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.