Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

சிவராமை கொன்றது, இலங்கை புலனாய்வு அமைப்பு. இதிலும் இனியபாரதி நேரடியாக பங்கு கொண்டார்.

புலிகளின் தலைமையால் கிழக்கு மாகாண போராளிகள் மீது  பாரபட்சம் காட்டப்படுகிறது என தூண்டி விட்டவர்களில் ஒருவர் சிவராம். பின்னர் வன்னிக்கு தலைமையால் அழைக்கப்பட்டு அவர்களால்  " கருணாவுக்கு ஒரு கடிதம்" என ஒரு கடிதம் கருணாவை விமர்சித்து வீரகேசரியில் ஒரு கடிதத்தை பிரசுரிக்க வைத்தனர்.

சிவராம் வெள்ளவத்தையில் ஒமேகா ஹோட்டலில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருக்கும் போது, அவரது கைத்தொலைபேசிக்கு கருணா அழைத்து நீ இப்ப எங்கிருக்கின்றாய் என்ன குடித்துக் கொண்டு இருக்கின்றாய் என எனக்கு தெரியும், உன்னை தூக்குவது எனக்கு இலகு, நீ இப்ப நல்ல பிள்ளை வேசம் போடுகிறாய்..ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என கூறியிருந்தார்.

கருணா தன்னை ஒன்றும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் சிவராம் பலர் எச்சரித்தும் உயிர் பயம் இன்றி கொழும்பில் நடமாடினார்.

ஆனால் சிங்கள புலனாய்வு அமைப்பு அவரை பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தி ஜயவர்த்தனபுரவில் வைத்து கொன்றது. இதற்கு அவர்கள் சித்தார்த்தனின் வாகனத்தை தான் பயன்படுத்தி இருந்தனர்.

கடத்தும் போது சிவராமுடன் இருந்தவர்களில் ஒருவர் லங்கா தீப எனும் சிங்கள நாளிதழின் பத்திரிகையாளர் ( ஆசிரியர் என நினைக்கிறேன்). அவர் உடனடியாக அன்றைய இராணுவ தளபதி வரைக்கும் தொடர்பு கொண்டு சிவராமை காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை எடுத்திருந்தார். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் கூட சிவராமிற்கு இருக்கும் தொடர்புகள் மூலம் விடுவிக்க வேண்டி வந்து விடும் என்பதால் கடத்தி சில மணி நேரங்களில் கடத்தியவர்களால் கொல்லப்பட்டார்.

அவர் கடத்தப்பட்டவுடன் என் நண்பர்கள் மூலம் அதை அறிந்து கொண்டேன். அவரது தொலைபேசியிற்கு தவிப்புடன் அழைப்பு எடுக்கும் போது, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் எனும் சந்திரமுகி படப் பாடல் ஒலித்தது. தன் caller tune ஆக அதை சிவராம் வைத்து இருந்தார். இப் பாடலை நான் எப்ப கேட்பினும் உடம்பு ஒரு முறை அதிரும். இதை எழுதும் போது கூட அதிர்கின்றது.

 

3 hours ago, நிழலி said:

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இருந்த ரபிந்தரநாத் கொழும்பில் BMICH இல் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டவர். இதில் கருணாவுக்கு நேரடி பங்களிப்பு இருக்கு (வாகனத்தில் வைத்தே கருணா குரூரமாக சித்திரவதை செய்து அவரை கொன்றதாக சொல்கின்றனர்).

இன்று வரை க்கும் அவருக்கு என்ன நடந்தது என  அரசு கூறவில்லை.

ஏன் இதனை விசாரிக்க சொல்லவில்லை என தெரியவில்லை.

கண்டிப்பாக விசாரிக்க வேண்டிய வழக்கு இது.

நாம் மறந்த  பல விடயங்களை… நினைவில் வைத்திருந்து பகிரும் நிழலிக்கு நன்றி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

image-4a798c3c5b.jpg

அதில் ஒரு கல்லை சிவராம் கொலை வழக்கை வைத்து விடுங்க 😁

image-f4c1be8070.jpg

கடைசியில் நடக்கபோவதை dailymirror.lk காரன் இன்றே சொல்லி விட்டான் நாங்கதான் ..........................

இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் .

ஆடறுக்க முன்னர் புடு,...கு விலை பேசாதீர்கள் பெருசு. 

அந்தாள் வந்து இன்னும் ஒரு மாசமும் ஆகவில்லை. அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? 

அது தவிர, பொறுப்புமிக்க ஒரு சனாதிபதி சட்ட நடைமுறைகளூடாகத்தான் நகர முடியும். ஆகவே கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே,..😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

image-4a798c3c5b.jpg

அதில் ஒரு கல்லை சிவராம் கொலை வழக்கை வைத்து விடுங்க 😁

image-f4c1be8070.jpg

கடைசியில் நடக்கபோவதை dailymirror.lk காரன் இன்றே சொல்லி விட்டான் நாங்கதான் ..........................

இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் .

இதை தானே நானும. கூறினேன். அதையே எனக்கு திருப்பி சொல்வீர்களா?

நீங்கள் எப்படி உங்கள் செல்லங்கள் செய்த  கொலைகளை மறைக்க விரும்புகின்றீர்களோ அதே போல் அவர்களும் தமது செல்லங்கள் செய்த  கொலைகளை மறைக்கவே விரும்புவார்.  இதில் ஒரு பொறுப்பான ஜனாதிபதியாக,  அநுர சற்றே மேம்பட்ட  சில முன்னேறகரமான நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது  என்ற நிலையிலேயே நாம். 

அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானைச் சுற்றி இறுகத் தொடங்கியுள்ள வலை?

அஷ்ரப் அலி-

ழு முக்கிய வழக்குகளின் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது
அதன் பிரகாரம் கடந்த 2006ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக அன்றைய உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள பிள்ளையான் மிக விரைவில் கைது செய்யப்படலாம் என்றே தெரிய வருகின்றது.
அதேபோன்று ரவீந்திரநாத் கடத்தல் விவகாரத்தில் கருணாவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.
462620339_1076536881139266_1204154593213566944_n.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

சிவராமை கொன்றது, இலங்கை புலனாய்வு அமைப்பு. இதிலும் இனியபாரதி நேரடியாக பங்கு கொண்டார்.

புலிகளின் தலைமையால் கிழக்கு மாகாண போராளிகள் மீது  பாரபட்சம் காட்டப்படுகிறது என தூண்டி விட்டவர்களில் ஒருவர் சிவராம். பின்னர் வன்னிக்கு தலைமையால் அழைக்கப்பட்டு அவர்களால்  " கருணாவுக்கு ஒரு கடிதம்" என ஒரு கடிதம் கருணாவை விமர்சித்து வீரகேசரியில் ஒரு கடிதத்தை பிரசுரிக்க வைத்தனர்.

சிவராம் வெள்ளவத்தையில் ஒமேகா ஹோட்டலில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருக்கும் போது, அவரது கைத்தொலைபேசிக்கு கருணா அழைத்து நீ இப்ப எங்கிருக்கின்றாய் என்ன குடித்துக் கொண்டு இருக்கின்றாய் என எனக்கு தெரியும், உன்னை தூக்குவது எனக்கு இலகு, நீ இப்ப நல்ல பிள்ளை வேசம் போடுகிறாய்..ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என கூறியிருந்தார்.

கருணா தன்னை ஒன்றும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் சிவராம் பலர் எச்சரித்தும் உயிர் பயம் இன்றி கொழும்பில் நடமாடினார்.

ஆனால் சிங்கள புலனாய்வு அமைப்பு அவரை பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தி ஜயவர்த்தனபுரவில் வைத்து கொன்றது. இதற்கு அவர்கள் சித்தார்த்தனின் வாகனத்தை தான் பயன்படுத்தி இருந்தனர்.

கடத்தும் போது சிவராமுடன் இருந்தவர்களில் ஒருவர் லங்கா தீப எனும் சிங்கள நாளிதழின் பத்திரிகையாளர் ( ஆசிரியர் என நினைக்கிறேன்). அவர் உடனடியாக அன்றைய இராணுவ தளபதி வரைக்கும் தொடர்பு கொண்டு சிவராமை காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை எடுத்திருந்தார். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் கூட சிவராமிற்கு இருக்கும் தொடர்புகள் மூலம் விடுவிக்க வேண்டி வந்து விடும் என்பதால் கடத்தி சில மணி நேரங்களில் கடத்தியவர்களால் கொல்லப்பட்டார்.

அவர் கடத்தப்பட்டவுடன் என் நண்பர்கள் மூலம் அதை அறிந்து கொண்டேன். அவரது தொலைபேசியிற்கு தவிப்புடன் அழைப்பு எடுக்கும் போது, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் எனும் சந்திரமுகி படப் பாடல் ஒலித்தது. தன் caller tune ஆக அதை சிவராம் வைத்து இருந்தார். இப் பாடலை நான் எப்ப கேட்பினும் உடம்பு ஒரு முறை அதிரும். இதை எழுதும் போது கூட அதிர்கின்றது.

https://dbsjeyaraj.com/dbsj/?p=40889

  • கருத்துக்கள உறவுகள்

462747404_947618740736432_85560443109147

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா !

தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார்.  கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார்.  சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம்.

 

கருணாவை எதிர்த்து நின்ற சிவராம்

கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார்.

 

அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை.

 

புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின்  ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.

கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ  புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது.

சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு  வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர்.

ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட,  புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது.

இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் தனது கையாலேயே அவர்  கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது.

அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2024 at 11:30, valavan said:

சிவராமை போட்டது கருணா இல்லை புளொட் என்றே பேச்சு உண்டு தமிழ்சிறி.,

அதேபோல பத்திரிகையாளர் நிர்மலராஜனை சுட்டுக்கொன்ற வழக்கை எடுத்தால் டக்ளஸ் மாட்டிக்கொள்வார்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை துரிதபடுத்தினால் பிள்ளையான் & கருணா இனியபாரதி என்று  அப்படி நீண்டுகொண்டே போகும்.

பொது தேர்தலின் பின்னர் எப்படி போகுமோ தெரியாது, ஆனால் கருணாவில் மிக கடுமையாக சிங்களவன் கை வைக்கமாட்டான் என்று நினைக்கிறேன் ஏனென்றால் சிங்களத்துக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.

இல்லாவிட்டால் அரந்தலாவ பிக்குகள் படுகொலை மற்றும் சரணடைந்த 600 பொலிசார் கொலைக்கு கருணாவுக்கு எப்போதோ ஆப்படிச்சிருப்பார்கள்.

அநுர தண்டனை வழங்குறானோ இல்லையோ, பொது தேர்தலில் தமிழர் பகுதியில் இவர்கள் ஆதரவில்லாமல் அநுர கட்சி பெரும்பான்மை பெற்றால், இவர்களினதும் பாரம்பரிய தமிழர் அரசியல்கட்சிகளினதும்  அரசியல் அஸ்தமனம்தான்.

 

On 13/10/2024 at 19:20, நிழலி said:

சிவராமை கொன்றது, இலங்கை புலனாய்வு அமைப்பு. இதிலும் இனியபாரதி நேரடியாக பங்கு கொண்டார்.

புலிகளின் தலைமையால் கிழக்கு மாகாண போராளிகள் மீது  பாரபட்சம் காட்டப்படுகிறது என தூண்டி விட்டவர்களில் ஒருவர் சிவராம். பின்னர் வன்னிக்கு தலைமையால் அழைக்கப்பட்டு அவர்களால்  " கருணாவுக்கு ஒரு கடிதம்" என ஒரு கடிதம் கருணாவை விமர்சித்து வீரகேசரியில் ஒரு கடிதத்தை பிரசுரிக்க வைத்தனர்.

சிவராம் வெள்ளவத்தையில் ஒமேகா ஹோட்டலில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருக்கும் போது, அவரது கைத்தொலைபேசிக்கு கருணா அழைத்து நீ இப்ப எங்கிருக்கின்றாய் என்ன குடித்துக் கொண்டு இருக்கின்றாய் என எனக்கு தெரியும், உன்னை தூக்குவது எனக்கு இலகு, நீ இப்ப நல்ல பிள்ளை வேசம் போடுகிறாய்..ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என கூறியிருந்தார்.

கருணா தன்னை ஒன்றும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் சிவராம் பலர் எச்சரித்தும் உயிர் பயம் இன்றி கொழும்பில் நடமாடினார்.

ஆனால் சிங்கள புலனாய்வு அமைப்பு அவரை பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தி ஜயவர்த்தனபுரவில் வைத்து கொன்றது. இதற்கு அவர்கள் சித்தார்த்தனின் வாகனத்தை தான் பயன்படுத்தி இருந்தனர்.

கடத்தும் போது சிவராமுடன் இருந்தவர்களில் ஒருவர் லங்கா தீப எனும் சிங்கள நாளிதழின் பத்திரிகையாளர் ( ஆசிரியர் என நினைக்கிறேன்). அவர் உடனடியாக அன்றைய இராணுவ தளபதி வரைக்கும் தொடர்பு கொண்டு சிவராமை காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை எடுத்திருந்தார். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் கூட சிவராமிற்கு இருக்கும் தொடர்புகள் மூலம் விடுவிக்க வேண்டி வந்து விடும் என்பதால் கடத்தி சில மணி நேரங்களில் கடத்தியவர்களால் கொல்லப்பட்டார்.

அவர் கடத்தப்பட்டவுடன் என் நண்பர்கள் மூலம் அதை அறிந்து கொண்டேன். அவரது தொலைபேசியிற்கு தவிப்புடன் அழைப்பு எடுக்கும் போது, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் எனும் சந்திரமுகி படப் பாடல் ஒலித்தது. தன் caller tune ஆக அதை சிவராம் வைத்து இருந்தார். இப் பாடலை நான் எப்ப கேட்பினும் உடம்பு ஒரு முறை அதிரும். இதை எழுதும் போது கூட அதிர்கின்றது.

 

On 14/10/2024 at 06:16, colomban said:

பிள்ளையானைச் சுற்றி இறுகத் தொடங்கியுள்ள வலை?

அஷ்ரப் அலி-

ழு முக்கிய வழக்குகளின் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது
அதன் பிரகாரம் கடந்த 2006ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக அன்றைய உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள பிள்ளையான் மிக விரைவில் கைது செய்யப்படலாம் என்றே தெரிய வருகின்றது.
அதேபோன்று ரவீந்திரநாத் கடத்தல் விவகாரத்தில் கருணாவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.
462620339_1076536881139266_1204154593213566944_n.jpg
 
 

 

On 14/10/2024 at 07:22, ரஞ்சித் said:

மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா !

தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார்.  கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார்.  சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம்.

 

கருணாவை எதிர்த்து நின்ற சிவராம்

கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார்.

 

அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை.

 

புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின்  ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.

கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ  புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது.

சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு  வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர்.

ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட,  புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது.

இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் தனது கையாலேயே அவர்  கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது.

அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.

 

@valavan  அவர்களே... சிவராம் கொலையை செய்தவர்கள் பற்றிய மேலும் சில தகவல்கள் வந்துள்ளன.
சிலவேளை உங்களுக்கு உதவலாம். நேரம் கிடைக்கும் போது ஒரு முறை பாருங்கள். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

 

 

 

@valavan  அவர்களே... சிவராம் கொலையை செய்தவர்கள் பற்றிய மேலும் சில தகவல்கள் வந்துள்ளன.
சிலவேளை உங்களுக்கு உதவலாம். நேரம் கிடைக்கும் போது ஒரு முறை பாருங்கள். நன்றி. 

ஆம் நீங்கள் சொல்வதுபோல் பலதரப்பட்ட  தகவல்களை தருகிறார்கள், இப்படியும் ஒரு தகவல் உள்ளது.

 

மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றவாளி இராகவன் சாவடைந்தார்

rr.jpg

மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) இன்று மாலை  சாவடைந்தாக அறிவிக்கப்பட்டள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மற்றொரு தலைவரான கிசோர் மரண செய்தியை பெரும் துயரத்தோடு அறியத்தருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பணிப்பின் பேரில் இலங்கை புலனாய்வு துறை முகவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கூலிப்படை சகிதம் கொலையை முன்னெடுத்திருந்தனர்.

அவ்வகையில் மாமனிதர் தராகி சிவராமினை கடத்தி சென்று பீற்றர் எனும் சக கொலையாளி சகிதம் கொலையை அரங்கேற்றியதாக ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கைதான இருவரும் பின்னர் புலனாய்வு பிரிவின் கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில் இராகவன் தராகி சிவராமினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளராகியிருந்தார். எனினும் அவர் எதனையும் அறிந்திராத மகான் என விசுவாசிகள் வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://vidiyel.com/ஈழத்தீவு/மாமனிதர்-தராகி-சிவராம்-க/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

ஆம் நீங்கள் சொல்வதுபோல் பலதரப்பட்ட  தகவல்களை தருகிறார்கள், இப்படியும் ஒரு தகவல் உள்ளது.

 

மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றவாளி இராகவன் சாவடைந்தார்

rr.jpg

மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) இன்று மாலை  சாவடைந்தாக அறிவிக்கப்பட்டள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மற்றொரு தலைவரான கிசோர் மரண செய்தியை பெரும் துயரத்தோடு அறியத்தருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பணிப்பின் பேரில் இலங்கை புலனாய்வு துறை முகவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கூலிப்படை சகிதம் கொலையை முன்னெடுத்திருந்தனர்.

அவ்வகையில் மாமனிதர் தராகி சிவராமினை கடத்தி சென்று பீற்றர் எனும் சக கொலையாளி சகிதம் கொலையை அரங்கேற்றியதாக ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கைதான இருவரும் பின்னர் புலனாய்வு பிரிவின் கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில் இராகவன் தராகி சிவராமினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளராகியிருந்தார். எனினும் அவர் எதனையும் அறிந்திராத மகான் என விசுவாசிகள் வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://vidiyel.com/ஈழத்தீவு/மாமனிதர்-தராகி-சிவராம்-க/

 

எமது காலத்தில் நடந்த ஒரு கொலை....
குறிப்பிட்ட சில வருடங்களிலேயே பல்வேறு தகவல்களால் திசைமாறி உள்ளது சோகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

எமது காலத்தில் நடந்த ஒரு கொலை

சிவராம் இறப்பதற்கு 3-4 கிழமைக்கு முன் நியூயோர்க் வந்திருந்தார்.அவர் புறப்படும் போது விமானநிலையத்தில் கொண்டு போய் இறக்கிவிட்டேன்.

எதைக் கேட்டாலும் விரல்நுனியில் இருந்து பதிலளித்தார்.

கடைசியாக பிள்ளைகளுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் இறந்தபோது மிகவும் கஸ்டமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

சிவராம் இறப்பதற்கு 3-4 கிழமைக்கு முன் நியூயோர்க் வந்திருந்தார்.அவர் புறப்படும் போது விமானநிலையத்தில் கொண்டு போய் இறக்கிவிட்டேன்.

எதைக் கேட்டாலும் விரல்நுனியில் இருந்து பதிலளித்தார்.

கடைசியாக பிள்ளைகளுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் இறந்தபோது மிகவும் கஸ்டமாக இருந்தது.

இப்படித் தான் எனக்கு குமார் பொன்னம்பலம் அவர்கள்.. போகவேண்டாம் என்று தடுத்தும்.....?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.