Jump to content

ரணில் விசேட உரை


nunavilan

Recommended Posts

 

ரணில் விசேட உரை!

ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

 இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள நிலையில், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

https://tamil.adaderana.lk/news.php?nid=194466

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தில் அனுபவசாலிகள் அவசியம் - விசேட அறிக்கையில் ரணில்

image

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்களது எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் ஜனாதிபதி தேர்தலில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் புதிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன. இவர்கள் அனைவரும் எனது தலைமையின் கீழ் செயற்பட்டனர்.

இவர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைகின்றனர். புதிய ஜனநாயக கட்சியாக போட்டியிடுகின்றனர். எனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் உரிய அனுபவம் உள்ளவர்கள். இவர்கள் கடந்த காலங்களில் தங்கள் பணியை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடகாலமாக என்னுடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கான அனுபவம் உள்ளது. ஆகவே அவர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவேண்டும். அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது. நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/196503

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நான் ஜனாதிபதி தேர்தலில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் புதிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன. இவர்கள் அனைவரும் எனது தலைமையின் கீழ் செயற்பட்டனர்.

ஆமாம் எல்லா கள்வர்களும் இணைந்து 

கொள்ளைக்கூட்ட தலைவனுக்கு ஆதரவளித்தார்கள்.

மக்களின் தலையில் வரியை சுமத்தி அவர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்தீர்கள்.

உங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த ஒரு அம்மாவே தனக்கு தந்த வாகனத்தைப் பற்றிய முறைப்பாட்டிலேயே உங்கள் அபிமானம் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது

புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள் நாடாளுமன்றம் வரக்கூடாத???    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:
3 hours ago, ஏராளன் said:

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது

புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள் நாடாளுமன்றம் வரக்கூடாத???  

அனுபவம் உள்ளவர்களுக்கு தான் எங்கெங்கே எப்படி அமுக்குவது என்பது தெரியும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசேட உரையில் ரணில் என்ன கூறினார்?

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை எனவும் வலியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நிதி அதிகாரத்தை வைத்திருக்கும் பாராளுமன்றம் வலுவாக இருக்க அந்த குழு வெற்றி பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,

“கடனைச் செலுத்த முடியாமல் திவாலாகிவிட்டதாக அறிவித்தபோது நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றேன்.

அந்த நேரத்தில் எனது முதன்மை நோக்கம் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதும் திவால்நிலையைத் தவிர்ப்பதும் ஆகும்.

 அதற்காக எமக்கு கடன் வழங்கிய பதினெட்டு நாடுகளும், தனியார் பிணை முறியாளர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இரண்டு வருடங்களில் உடன்படிக்கைக்கு வந்தோம்.

அதன்படி, நமது கடன் செலுத்தும் காலத்தை நீடித்து  பின்னர் நமது நாட்டை திவால் நிலையில் இருந்து மீட்பது குறித்தும் ஒரு உடன்பாட்டை எட்டினோம்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தனியார் பிணை முறியாளர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

நாம் ஏற்படுத்திய அமைப்பு காரணமாக, இப்போது வெளிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியும்.

வெளிநாட்டு உதவியும் கிடைக்கும். எங்கள் கடன் நிலைத்தன்மையின் காரணமாக திவால்நிலை இப்போது முடிந்துவிட்டது.

நாடு திவாலானதால் பிணை எடுப்புப் பங்கிற்கு கடந்த நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றினேன்.

நாட்டை வங்குரோத்திலிருந்து மீட்கும் பணிகளுக்காக நான் கடந்த பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டேன்.

எனக்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நான்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அந்த பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றிய எனது அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நாம் அந்த நிலைத்தன்மை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி திருத்தங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால், திருத்தப்பட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டில் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது.

அதனை நடைமுறைப்படுத்துவது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்பு.

நிலைத்தன்மையை செயல்படுத்துவதற்கும் அதை அடைவதற்கும் எங்களிடம் பல இலக்குகள் உள்ளன.

 முதலில் 2028ஆம் ஆண்டிலிருந்து கடனை அடைக்க வேண்டும்.

2027-க்குள் நமது அரசின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருக்க வேண்டும்.

 இப்போது அந்த எண்ணிக்கை 12 சதவீதமாக உள்ளது. அந்த இலக்கை அடைய, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும்.

அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள், 2019ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் பெற முடியும்.

 அதே சமயம் அன்னியச் செலாவணி கையிருப்பையும் அதிகரிக்க வேண்டும். அந்த அந்நியச் செலாவணி கையிருப்பு 10-14 பில்லியன் டொலர் வரம்பில் இருக்க வேண்டும்.

இந்த இலக்குகளை அடைந்த பிறகு, கடனை அடைக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் நாம் மேற்கூறிய இலக்குகளை அடைய வேண்டும்.

அதற்கு விரைவான வளர்ச்சியை உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் பலவற்றை செயல்படுத்துவதாகும்.

இந்த அனைத்து விடயங்களுக்கும் பாராளுமன்றமே பொறுப்பு.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.

எப்படியாவது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமானால் கடந்த பாராளுமன்றத்தில் பெற்ற அனுபவத்தை நிறுத்த வேண்டும்.

அதாவது கடந்த பாராளுமன்றத்தில் இந்தப் பொறுப்புகளை ஏற்க எவரும் முன்வரவில்லை.

நான் வந்து மொட்டு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை கூட்டி வந்து இந்த அரசாங்கத்தை அமைக்க உழைத்தேன்.

அடுத்த நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது.

இந்த நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய குழுக்கள் உள்ளன. அந்த மூன்று குழுக்களில் ஒரு குழுவை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நான் சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்.

மொட்டு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புதிய கூட்டணி என அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன.

இவர்கள் எனது தலைமையின் கீழ் பணியாற்றினர். இப்போது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அந்த எம்.பி.க்களில் ஒரு பகுதியினரும் என்னுடன் பணியாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியினரும் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 அவர்கள் புதிய ஜனநாயகக் கட்சியின் மூலம் தங்களை முன்வைக்கின்றனர். எனது தலைமையில் இந்த தேர்தல் பணியை செய்ய உள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் அந்த அனுபவம் உண்டு. இந்தப் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட அனுபவம் உள்ளவர்கள் எனவே அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தில் இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த முடியாது.

பின்னர் அவர்கள் இலக்குகளை அடைவதில் தோல்வியடைகிறார்கள்.

எனவே மொட்டு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எமக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டவர்கள், புதிய கூட்டணியின் ஏனைய கட்சிகள் என அனைவரும் எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும், முன்னதாக வாக்களிக்காதவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

உங்கள் எதிர்காலத்தை புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடாக மீண்டு வரலாம்.

தவறினால் நாடு மீண்டும் அழியும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு நகரும்.

எனவே, சிலிண்டருக்காக அனைவரும் தங்களது பெறுமதியான வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 

http://www.samakalam.com/விசேட-உரையில்-ரணில்-என்ன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இந்த ரணில்? போனதேர்தலிலேயே அவருக்கு ஓய்வு கொடுத்தாச்சு. பிறகு குறுக்கு வழியில் வந்தாலும் மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் வெட்கம் ரோசம் இல்லாமல் திரும்பவும் பதவி ஆசையில் அலைகிறார். அவருடையை உரையை அவரோ கேட்பாரோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு உரை இல்லை.............. இது ஒரு தேர்தல் பிரச்சாரம் அவருடைய புதிய ஜனநாயக் கட்சிக்காக, சிலிண்டர் சின்னத்துக்காக...... நாம தான் தப்பாக புரிந்து கொண்டு வேற எதையோ எதிர்பார்த்துவிட்டோம் போல............🤣.

சிலிண்டர், குக்கர், தபால்பெட்டி, ஃபோன், கல்குலேட்டர்................ எங்கள் காலத்து ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையே பரவாயில்லை போல............

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.