Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி தனி நபரின் கம்பனியாக மாறிவிட்டது - கே.வி.தவராசா 

image

னநாயக தமிழரசு கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (20) வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

16 ஆண்டுகள் தமிழரசு கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் ஆஜராகியுள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை.

இலங்கை தமிழ் அரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறியிருக்கிறது. அந்த நபர் இவ்வாறு சர்வாதிகாரம் மிக்க நிலையில் செயற்படுவதற்காக தலைமைத்துவமும், சம்பந்தரும் காரணமாக உள்ளனர். கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கிறார். 

கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.

தமிழ் தேசியம் தான் எமது தமிழ் அரசு கட்சியின் தாரக மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். ஆனால், தமிழ் அரசு கட்சிக்குள் அது நடைபெறவில்லை.

கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்கக்கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள். மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன். 

நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர், பலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விலகுகிறார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது.

கட்சியின் செயலாளர் பதவியினை சுமந்திரன் கோரினார். ஆனால், அவருக்கான பதவி மறுக்கப்பட்டது. இதன்போது சுமந்திரன் அவர்கள் நாங்கள் இரண்டு அணி என கூறினார். இப்போது தேர்தல் வரும்போது நாங்கள் ஒரு அணி என கூறுகின்றார். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். 

https://www.virakesari.lk/article/196778

  • கருத்துக்கள உறவுகள்

சேடமிழுக்கும் தமிழரசுக் கட்சியை இந்த தடவை பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்படுபவர்களால் புத்துயிர் கொடுக்கப்படுமா?

இல்லை சாவுமணிஓசை கேட்குமா என்று இருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

 

 
 

கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்கக்கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள். மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன்.

https://www.virakesari.lk/article/196778

😂 "எல்லோரும் ஒரு பதவிக்காக இருந்தார்கள்". தவராசா அவர்கள் "சீற்றுக்காக" கடைசிவரை இருந்து அது கிடைக்காததால் வெளியேறினார். கதை மிகவும் சுருங்கியது, ஆனால் வேற கதை தான் சொல்வார்கள்.

அதை விடுவோம்: தமிழரசுக் கட்சி அல்லது அதை "தனிக் கம்பனியாக" வைத்திருக்கும் சுமந்திரனின் செயல்களில் இருந்து நீங்கள் எப்படி வித்தியாசமாக நடந்து கொள்வீர்கள் என்று சொன்னால் வாக்காளர்களுக்குப் பயன் இருக்கும். இந்த "கம்பனி" கதையால் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2024 at 21:41, ஏராளன் said:

கட்சியின் செயலாளர் பதவியினை சுமந்திரன் கோரினார்.

தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பதவி காலாவதியாகிவிட்டது, இன்னும் அந்தபதவியை பிடித்து வைத்துக்கொண்டு அலம்பித்திரியிறார். தலைவர் பதவியை முடக்கி வைத்திருக்கிறார், கட்சிக்குள் ஏகாதிபத்தியம் செய்கிறார், அவருக்கு பதவியாசை இல்லை. எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும் என்னும் பகுத்தறிவு இல்லை, செயற்றிறன் இல்லை, மற்றவர்களையும் மதித்து அவர்களுக்கும் உரிய சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதை மறுக்கும், அதை நிஞாயப்படுத்தும் யாவரும் அடாவடிகள். அவர்களது கல்வி வெறும் ஏட்டுக்கல்வியே அன்றி பொது வாழ்வுக்குதவாது. 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் நலன்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பதால் எல்லோரும் கழன்று போகிறார்கள். 

தவராசாவுக்கு நன்றி கூற வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2024 at 10:21, Justin said:

"எல்லோரும் ஒரு பதவிக்காக இருந்தார்கள்". தவராசா அவர்கள் "சீற்றுக்காக" கடைசிவரை இருந்து அது கிடைக்காததால் வெளியேறினார். கதை மிகவும் சுருங்கியது, ஆனால் வேற கதை தான் சொல்வார்கள்.

உண்மை தான்.

ஆனால் ஒரு சீற் அவருக்கு கொடுத்திருக்கலாம்.80களில் இருந்து கட்சியுடன் இணைந்திருந்தவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் சற்று சிந்தியுங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான்.

ஆனால் ஒரு சீற் அவருக்கு கொடுத்திருக்கலாம்.80களில் இருந்து கட்சியுடன் இணைந்திருந்தவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் சற்று சிந்தியுங்களேன்?

இதில் சிந்திக்க என்ன இருக்கிறது? "

தெற்கில் ஜேவிபி இளைஞர்கள் புதியவர்களை ஊக்குவிக்கிறது, எனவே நாமும் அப்படிச் செய்வோம்" என்று "சுமந்திரன் எதிர்ப்பாளர்கள்" புது முகமூடியோடு வந்தார்கள்😂. அதே "முகமூடியை" வைத்து சுமந்திரன் அணி "உள் வீட்டுக் காரரும், 60 தாண்டியவருமான" தவராசா அவர்களை தவிர்த்து புதியவர்களை, இளையோரை போட்டியிட வைத்தது.

இது பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய அல்லது "பூமராங்" திரும்பி வந்து எய்தவரையே தாக்கிய ஒரு உதாரணம். வேறேதுவும் இதில் குழம்பிக் கொள்ள இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இதில் சிந்திக்க என்ன இருக்கிறது? "

தெற்கில் ஜேவிபி இளைஞர்கள் புதியவர்களை ஊக்குவிக்கிறது, எனவே நாமும் அப்படிச் செய்வோம்" என்று "சுமந்திரன் எதிர்ப்பாளர்கள்" புது முகமூடியோடு வந்தார்கள்😂. அதே "முகமூடியை" வைத்து சுமந்திரன் அணி "உள் வீட்டுக் காரரும், 60 தாண்டியவருமான" தவராசா அவர்களை தவிர்த்து புதியவர்களை, இளையோரை போட்டியிட வைத்தது.

இது பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய அல்லது "பூமராங்" திரும்பி வந்து எய்தவரையே தாக்கிய ஒரு உதாரணம். வேறேதுவும் இதில் குழம்பிக் கொள்ள இல்லை!

இது இந்த தேர்தலில் மட்டுமல்ல நடந்து முடிந்த தேர்தல்களிலும் இவர் ஒதுக்கப்பட்டுள்ளார்.

ஜேவிபியை பின்பற்றுகிறார்களா?

அவர்கள் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சியிடமிருந்து செலவுக்கு பணம் வாங்குகிறார்களா?

தமிழரசுக்கட்சி என்றால் என்னவென்று தெரியாத ஆட்களை வேட்பாளராக போடும் போது கட்சிக்காக உழைத்தவனை ஏன் ஒதுக்க வேண்டும்.

காலாகாலமாக இது தானே நடைமுறை.

1 hour ago, ஈழப்பிரியன் said:

இது இந்த தேர்தலில் மட்டுமல்ல நடந்து முடிந்த தேர்தல்களிலும் இவர் ஒதுக்கப்பட்டுள்ளார்.

 

தவராசா கொழும்பில் வாழ்கின்றவரா? அவர் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையில் பல வருடங்களாக பணியாற்றியவர் என்பதால் கேட்கின்றேன்.

வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றவர்கள் அந்தந்த பிரதேசங்களில் வாழுகின்றவர்களாக இருப்பின் நல்லது. தாம் சார்ந்த இனத்தின் புரிதல் மட்டுமின்றி தாம் பிரதி நிதித்துவம் செய்யும் பிரதேசத்தில் / தொகுதியில் வாழும் மக்களின் பிரச்சனைகளையும் பண்பாட்டையும் புரிந்து வைத்திருத்தல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

தவராசா கொழும்பில் வாழ்கின்றவரா? அவர் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையில் பல வருடங்களாக பணியாற்றியவர் என்பதால் கேட்கின்றேன்.

வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றவர்கள் அந்தந்த பிரதேசங்களில் வாழுகின்றவர்களாக இருப்பின் நல்லது. தாம் சார்ந்த இனத்தின் புரிதல் மட்டுமின்றி தாம் பிரதி நிதித்துவம் செய்யும் பிரதேசத்தில் / தொகுதியில் வாழும் மக்களின் பிரச்சனைகளையும் பண்பாட்டையும் புரிந்து வைத்திருத்தல் அவசியம்.

இவர் தீவகத்தை பிறப்பிடமாக கொண்டவர் என எண்ணுகிறேன்.

தொழிலுக்காக கொழும்பு யாழ் என திரிகிறார்.துணைவியாருடன் கொழும்பிலே வசித்தவராயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இது இந்த தேர்தலில் மட்டுமல்ல நடந்து முடிந்த தேர்தல்களிலும் இவர் ஒதுக்கப்பட்டுள்ளார்.

ஜேவிபியை பின்பற்றுகிறார்களா?

அவர்கள் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சியிடமிருந்து செலவுக்கு பணம் வாங்குகிறார்களா?

தமிழரசுக்கட்சி என்றால் என்னவென்று தெரியாத ஆட்களை வேட்பாளராக போடும் போது கட்சிக்காக உழைத்தவனை ஏன் ஒதுக்க வேண்டும்.

காலாகாலமாக இது தானே நடைமுறை.

ஜேவிபியை தமிழரசு பின்பற்றுகிறது என்று நான் சொன்னேனா? தவறாகப் புரிந்திருக்கிறீர்கள்.

"ஜேவிபியை பின்பற்றி புதியவர்கள் இளையோர்" வரவேண்டுமென்று சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் புதிய பொல்லோடு வந்தார்கள். அந்தப் பொல்லையே எடுத்து சுமந்திரனிடம் வாங்கிக் கட்டியிருக்கிறார்கள்😂. புதியவர்கள் வரவேண்டுமென்று கோரியோர் ஏன் "காலாகாலமாக கட்சிக்குள் இருப்பவர் தான் வரவேண்டுமென்று" இப்போது தாளத்தை மாற்றியிருக்கிறார்களாம்? ஏனெனில் இந்த "புதியவர், இளையோர்" வரவேண்டுமென்ற கோரிக்கையே சுமந்திரனையும், சாணக்கியனையும் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய எடுத்த முகமூடி தான்!

என்னுடைய அபிப்பிராயம்: இந்த எதிரெதிர் தரப்புகளை போட்டியிட அனுமதியுங்கள் - எந்தக் கட்சியிலாவது அல்லது சுயேட்சையாக. வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும்.

ஒற்றுமை என்ற பெயரில் கொள்கைகளில் இருக்கும் பன்முகத் தன்மையை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. ஒற்றுமை என்பது என்பது ஒரே அச்சில் வார்த்த கொள்கையாக இருக்க வேண்டியதில்லை (unity is NOT uniformity). நாம் வடகொரியாவைப் பின்பற்ற வேண்டியதில்லை.    

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

என்னுடைய அபிப்பிராயம்: இந்த எதிரெதிர் தரப்புகளை போட்டியிட அனுமதியுங்கள் - எந்தக் கட்சியிலாவது அல்லது சுயேட்சையாக. வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும்.

இது வாஸ்தவம்.

அது தானே நடக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.