Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு  தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக தவறியதை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

https://www.virakesari.lk/article/196896

  • கருத்துக்கள உறவுகள்

johnston-fernando-arrested-remanded.jpg?

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1405377

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

23 Oct, 2024 | 05:26 PM
image

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட கார் மீட்கப்பட்டமை  தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை (23) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படட்டார்.

இந்நிலையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை  எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆடம்பர வாகனத்திற்கும் லண்டனில் திருடப்பட்ட வாகனத்திற்கும் தொடர்புள்ளது - பொலிஸ் பேச்சாளர்

image

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஆடம்பரகாருக்கும் லண்டனில் காணாமல்போன வாகனமொன்றிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்னாள் அமைச்சரின் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட ஆடம்பர கார் லண்டனில் திருடப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பிட்ட வாகனம் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக இன்டபோலின் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்த வாகனத்திற்கும் 2021 இல் லண்டனில் காணாமல்போன வாகனத்திற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர், இன்டபோல் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் இது குறித்து விசாரணை செய்துள்ளனர்.

இரண்டு வாகனங்களின் செசிஸ் மற்றும் இயந்திரங்களின் இலக்கங்களிற்கு இடையில் தொடர்புள்ளது, இதனை அடிப்படையாக வைத்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னாள் அமைச்சரின் ஆடம்பர வாகனம் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டது என்பதை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196975

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டனின் கைதுக்கு காரணமான கார் தொடர்பான தகவல்கள்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது, இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அங்கு, குறித்த BMW கார் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த BMW வாகனமானது திருடப்பட்ட இலக்கத் தகடு மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவு அமைப்பைச் சோதித்ததில் அது சட்டப்பூர்வமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது, இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிகத் தகவல்களை வழங்கிய அதிகாரிகள், சட்டவிரோதமாக காரை இலங்கைக்குக் கொண்டு வந்த பின்னர், இரு வேறாக காணப்பட்ட பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

அப்போது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், குறித்த கார் இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட போதிலும், தனது கட்சிக்காரருக்கு இதில் தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது எனவும் தெரிவித்தார்.

எனவே, எந்தவொரு நிபந்தனையின் கீழும் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW காரொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி சோதனையிடப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் அது முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்க உரித்தானது என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 10ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்த நீதவான் தனுஜா லக்மாலி, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்தார்.

இதேவேளை, தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை மனுதாரர் வழங்குவது இன்றியமையாதது என மனுதாரரின் சட்டத்தரணியிடம் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மனுதாரரின் சட்டத்தரணி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (23) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்து உரிய வாக்குமூலத்தை அளித்து பின்னர் கைது செய்யப்பட்டார்.

 

http://www.samakalam.com/ஜோன்ஸ்டனின்-கைதுக்கு-கார/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஜோன்ஸ்டனின் கைதுக்கு காரணமான கார் தொடர்பான தகவல்கள்

large.IMG_7336.jpeg.e579e8dee76306d317dd

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டனை சந்திக்க சிறைச்சாலை சென்ற மகிந்த

makintha.jpeg

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் (23) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்ச இன்று  அவரை சந்திக்க சென்றுள்ளார்.

https://thinakkural.lk/article/311163

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

image

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, இவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/197495

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.