Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்

gaja-1.jpeg

“அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பி. இனவாதிகளைக் கொண்டாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். அதுபோல் அனைத்து சிங்களப் பேரினவாத கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தேர்தல் விதிமுறையை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்களைப் பெற்றதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்தக் கைது தொடர்பில் ஊடகங்களுக்குக் கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கைது செய்து வாக்குமூலம் பெற்றதன் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது தமிழ் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல் நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பி. இனவாதிகளைக் கொண்டாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் ஜே.வி.பியினுடைய சிந்தனையிலும், பொலிஸ் திணைக்களங்களினுடைய சிந்தனையிலும் எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதை இந்தக் கைது எடுத்துக் காட்டுகின்றது.

கடந்த அரசுகள் மேற்கொண்டதைப் போல் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையையும், இனவாதத்தையும்தான் ஜே.வி.பியினரும் பின்பற்றப் போகின்றார்கள் என்பதற்கு இந்தக் கைது சாட்சியாக அமைகின்றது.

ஜே.வி.பி. அரசைக் கொண்டாடக்கூடிய தமிழர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் உங்களுடைய தலையிலே மண்ணை அள்ளிப் போடுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றீர்கள். ஜே.வி.பினுடைய இனவாத சிந்தனையிலே எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

புதிய வாக்காளர்கள், இளையோர் தென்னிலங்கையில் இடம்பெறும் போலித்தனமான பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது. தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். அதுபோல் அனைத்து சிங்கள பேரினவாதக் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும். அதுவே தமிழ் மக்கள் கொடுக்கின்ற சாட்டை அடியாக இருக்கும்.” – என்றார்.
 

 

https://akkinikkunchu.com/?p=296780

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கடந்த அரசுகள் மேற்கொண்டதைப் போல் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையையும், இனவாதத்தையும்தான் ஜே.வி.பியினரும் பின்பற்றப் போகின்றார்கள் என்பதற்கு இந்தக் கைது சாட்சியாக அமைகின்றது

ஐயா ..... தேர்தலில் போட்டியிடுபவர்கள், முதலில் தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்ற கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களை குற்றம் சுமத்துவதற்காக நாமே வலிந்து அதற்குள் அகப்படலாமா? அவர்கள் சும்மாவே கைது செய்யும் கூட்டம் என்பதற்காக நம்மை பிரபல்யப்படுத்த வேண்டும் என்பதற்காக வலியப்போய் பொறியில் தலையை மாட்டலாமா?

4 hours ago, கிருபன் said:

தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். அதுபோல் அனைத்து சிங்கள பேரினவாதக் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும். அதுவே தமிழ் மக்கள் கொடுக்கின்ற சாட்டை அடியாக இருக்கும்.” – என்றார்.

உங்களையுந்தான் நிராகரிக்க போகிறார்கள், நீங்களும் போட்டியிடாமல் தள்ளி நில்லுங்கள், பகிஸ்கரியுங்கள். இருப்பவன் சரியாய் இருந்தால் சிரைப்பவன் சரியாக செயற்படுவான். நீங்கள் சரியாக செயற்படவில்லை உங்களுக்கு  வாக்குப்போட்ட மக்களுக்கு. எங்களைத்தவிர வேறு யாருக்கும் வாக்குபோடக்கூடாது என கட்டளையிட நீங்கள் யார்? உங்களால் சாதிக்க முடியாவிடில் விலகுங்கள். மக்களுக்கு உங்கள் மேல் மரியாதையே போய்விட்டது, தேர்தலுக்கொரு கட்சியில் போட்டியிடுகிறீர்கள். ஒரே கட்சியாக ஒரே கொள்கையாக வாருங்கள், சொல்வதை செயலில் காட்டுங்கள், நீங்கள் சொல்லவே தேவையில்லை மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென. தமிழ் தேசியம் எனும் மாயையை வைத்துக்கொண்டு அந்த மக்களை ஏமாற்றி அலைக்கழிக்காதீர்கள் உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுத வேண்டியதை அப்படியே எழுதி விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

நான் எழுத வேண்டியதை அப்படியே எழுதி விட்டீர்கள்.

இவர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்களாயிற்றே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியாளர்கள் குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார் கஜேந்திரன்

ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் அந்தக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பிரசாரங்களை முன்னெடுத்து தமது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

75 வருடங்களாக ஆட்சிப் பீடத்தில் இருந்த ஐ.தே.க, ஶ்ரீலங்கா.சு.க, மொட்டுக் கட்சியினர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நாட்டை சின்னாபின்னமாக்கி வங்குறோத்து நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்.

இந்த நிலையிலே சிங்கள மக்களுக்கு நேர்மையாக செயற்பட்ட ஜே.வி.பி. யினர் பல வருடங்களுக்குப் பின் இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கலாம்.

இவர்கள் அரச புலனாய்வுக்காரர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக செயற்பட்டிருப்பார்கள் என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்குக் கிழக்கிலே பார்பொர்மிட் வழங்கி பெரும் இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும் அதனை வெளியிடப் போவதாகவும் கூறியவர்கள் அதனைப் பின்னர் ஒழித்துவிட்டார்கள்.

காரணம் தமக்கு நாடாளுமன்றலே பெரும்பான்மை கிடைக்காத பட்சத்திலே இந்த ஊழல் வாதிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டுமென்பதற்காக அந்த பார் லைசன்ஸ் விவகாரம் ஒழிக்கப்பட்டிருக்கிறது.

அதை விட அநுரவுக்கு வாக்களிக்கக் கூடாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்றவர்கள் தேர்தல் முடிந்து ஒரு வார காலத்துக்குள்ளே ஓடோடிச் சென்று அநுரவின் காலில் விழுந்திருக்கிறார்கள்.

சங்குக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கையை முன்வைக்கவில்லை மாறாக தமது ஊழல்களையும் பெற்றுக் கொண்ட சலுகைகளையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் தாம் நாடாளுமன்றிலே உங்களது ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியதால் தான் அது மூடி மறைக்கப்பட்டிருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/311218

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கசப்பான ஒரு உண்மையை நோக்க வேண்டும். சிங்கள மக்கள் ஒரு பொது தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பார்களா? சிங்கள மக்கள் தமது இனம் பார்த்து வாக்கு அளிக்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அப்படி செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் முதலில் நிராகரிக்க வேண்டியது இந்த குதிரை கஜேந்தின், சுகாஸ்  போன்ற பக்கா இனவாதிகளை தான்.  சிங்கள இனவாதிகளுக்கு சற்றும் சளைக்காமல் மக்களிடையே இனவாதத்தை விதைப்பவர்கள் இவர்கள் இருவரும்.  கஜேந்திர குமாரை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள் தான். 

இவர்கள் இல்லை என்றால் கஜேந்திரகுமார் ஜதார்ததத்தை உணர்ந்து அதற்கேற்ப முற்போக்கு அரசியல் செய்வார்.  கல்வியாளர் அவர். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

இங்கு கசப்பான ஒரு உண்மையை நோக்க வேண்டும். சிங்கள மக்கள் ஒரு பொது தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பார்களா? சிங்கள மக்கள் தமது இனம் பார்த்து வாக்கு அளிக்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அப்படி செய்யலாமா?

சிங்களவர்களோடு வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் பலர் அனுரகுமார திசநாயக்கவை தங்களின் தலைவனாக ஏற்று கொண்ட   அதிசய உண்மையை நீங்கள் நோக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

 கஜேந்திர குமாரை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள் தான். 

இவர்கள் இல்லை என்றால் கஜேந்திரகுமார் ஜதார்ததத்தை உணர்ந்து அதற்கேற்ப முற்போக்கு அரசியல் செய்வார்.  கல்வியாளர் அவர். 

கஜேந்திரன் யாழ்பாணத்து யுனி சமூம் தானே யாழ்பாணத்து யுனி சமூம் தான் தமிழர்களை வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

-----------------------

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி ]

 சிங்கள மக்கள் அவரை அப்படி புகழ்ந்தார்களே எனக்கு தெரியாது ஆனால்  சிங்கல மக்கள் கெட்டவன்கள் அவர்களுடன் வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் சிங்கல மக்களால் தேர்ந்த எடுக்கபட்ட அனுரகுமார திசநாயக்கவை  அப்படியும் அதற்கு மேலாகவும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் . ஒரு பெரியவர்  தமிழ் தேசியவாதி சொன்னார் அனுரகுமார திசநாயக்க காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து இரவு வரைக்கும் மக்களுக்காக திட்டங்களை செயற்படுத்தவிட்டு வனது வசதி குறைந்த சிறிய வீட்டிற்கு இரவில்  படுக்க சென்றுவிடுவாராம் பின்பு காலையில் எழும்பி மக்களுக்கு பணியாற்ற ஜனாதிபதி மாளிகைக்கு வருவாராம்.

இந்த விசயங்கள் எல்லாம் அவருக்கு வாக்களித்த சிங்கல மக்களுக்கு தெரியுமா🤔

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.