Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பைபோர்டா நகரில் எதிர்ப்பாளர்கள் அரச தம்பதிகள் மற்றும் ஸ்பெய்னின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை நோக்கி “கொலைகாரன்” என்று கூச்சலிட்டனர்.

எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார்.

அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரமான சிவாவுக்குச் செல்லும் மன்னரின் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

பல தசாப்த காலத்துக்கு பின்னர் ஸ்பெய்னில் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உயிர் பிழைத்தவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1407052

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவுகரமான வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள 
வலென்சியா பகுதிக்கு வருகை தந்த ஸ்பெயினின் மன்னர் ஃபெலிப் மற்றும் ராணி லெடிசியா மீது கோபமடைந்த மக்கள் சேறு மற்றும் முட்டைகளை வீசினர்.

மூன்று காணொளிகளையும் அம்புக்குறி மேல் கிளிக் பண்ணி பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஏன் அதிபருக்கு முட்டை வீசுகிறார்கள்?

8 minutes ago, தமிழ் சிறி said:

பேரழிவுகரமான வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள 
வலென்சியா பகுதிக்கு வருகை தந்த ஸ்பெயினின் மன்னர் ஃபெலிப் மற்றும் ராணி லெடிசியா மீது கோபமடைந்த மக்கள் சேறு மற்றும் முட்டைகளை வீசினர்.

மூன்று காணொளிகளையும் அம்புக்குறி மேல் கிளிக் பண்ணி பார்க்கவும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்கு ஏன் அதிபருக்கு முட்டை வீசுகிறார்கள்?

அதுதான்... எனக்கும் புரியவில்லை.
இயற்கை அழிவுக்கு... அரச தம்பதிகள் என்ன செய்ய முடியும்.
பாதிக்கப் பட்ட மக்களை பார்க்கப் போனது ஒரு குற்றமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, தமிழ் சிறி said:

அதுதான்... எனக்கும் புரியவில்லை.
இயற்கை அழிவுக்கு... அரச தம்பதிகள் என்ன செய்ய முடியும்.
பாதிக்கப் பட்ட மக்களை பார்க்கப் போனது ஒரு குற்றமா? 

பொது மக்களுக்கு அரச குடும்பம் மீது வேறு கோபங்கள் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பொது மக்களுக்கு அரச குடும்பம் மீது வேறு கோபங்கள் இருக்கலாம்.

உதுக்குத்தான் எங்களுடைய அரசியல்வாதிகள், 
தேர்தல் நேரம் தவிர...  மற்றைய 5 வருடமும்  மக்களை சந்திக்கப் போறது இல்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அதுதான்... எனக்கும் புரியவில்லை.
இயற்கை அழிவுக்கு... அரச தம்பதிகள் என்ன செய்ய முடியும்.
பாதிக்கப் பட்ட மக்களை பார்க்கப் போனது ஒரு குற்றமா? 

ஆம் 

அவர்களது வரிப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தபடி அனைத்தும் முடிந்ததும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் சென்றது தப்பு தான். தண்டனைக்குரியது தான்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உதுக்குத்தான் எங்களுடைய அரசியல்வாதிகள், 
தேர்தல் நேரம் தவிர...  மற்றைய 5 வருடமும்  மக்களை சந்திக்கப் போறது இல்லை. 🤣

இதை வாசித்து ஒரே சிரிப்பாக‌ இருக்கு த‌மிழ்சிறி அண்ணா😁👍..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

ஆம் 

அவர்களது வரிப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தபடி அனைத்தும் முடிந்ததும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் சென்றது தப்பு தான். தண்டனைக்குரியது தான்.

ஜனநாயக நாட்டில் முடியாட்சி மன்னர்கள் எதுக்கு விசுகர்? 
முடியாட்சியில் என்றுமே அடிமைகள் ஒரு அங்கம். அதை தகர்க்க சேறும் முட்டையும் வீசிய மக்களுக்கு என் வாழ்த்துகள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார்.

எங்கள் நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருக்க வேண்டும், தாக்கியவர்கள் இரவோடிரவாக காணாமல் போகப்பண்ணப்பட்டிருப்பார்கள்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.