Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! 
 
23480192.jpg

நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக, மிகப் பிரமாண்டமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரகலய போராட்டத்தில் புலம்பெயர் புலிகளின் தலையீடு இருந்ததாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்துவருகின்றனர். அரகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ச இருக்கவில்லை. எனினும், கட்சியின் அழைப்பின் பிரகாரமே அவர் போட்டியிட்டார். இம்முறை போட்டியிடமாட்டார் என்ற முடிவிலேயே மஹிந்த ராஜபக்ச ஆரம்பம் முதலே இருந்தார்.

இம்முறை தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கும் முடிவில் நான் இருந்தேன். கட்சி விடுத்த கோரிக்கையால், நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் தேசியப் பட்டியலில் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு 2009ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ராஜபக்சக்களின் அரசியலை வீழ்த்துவதற்கு புலம்பெயர் புலிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அரகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அரகலயவில் உண்மையான போராட்டக் காரர்களும் இருந்தனர். ஆனால் ஓர் அங்கமாக சூழ்ச்சித் திட்டமும் இருந்தது – என்றார். (ச)

 

https://newuthayan.com/article/கோத்தாபயவுக்கு_எதிரான_அரகலய_போராட்டத்தின்போது_புலம்பெயர்_புலிகள்_தலையீடு!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! 

உங்கள் சித்தப்பனை... ஜனாதிபதி பதவியில் இருந்து ஓட ஓட விரட்டியமைக்கு 
புலிகள் காரணம் என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி  நாமல் தம்பி.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக, மிகப் பிரமாண்டமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரகலய போராட்டத்தில் புலம்பெயர் புலிகளின் தலையீடு இருந்ததாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது உண்மைக்கு புறம்பான செய்தி  ஆர் ஆட்சியில் அமர்த்தினார்களே    அவர்களே   அடித்தும்.

 ஓட ஓட. விரட்டியடிச்சிட்டார்கள்.   இப்போது புலிகள் இல்லை

புலம்பெயர் நாடுகளில் புலிகள் இல்லை      இருப்பது எல்லாம் டுப்பிலிக்கேட்.    போலி புலிகள் மட்டுமே  உண்மை புலிகள் 2009 இல். அழிக்கப்பட்டு விட்டார்கள்    

நீங்கள் திறமையான ஆட்சி வழங்கியிருந்தால்   நாட்டை விட்டுட்டு ஒட வேண்டிய தேவை இருந்து இருக்காது    🙏 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு 2009ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ராஜபக்சக்களின் அரசியலை வீழ்த்துவதற்கு புலம்பெயர் புலிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அரகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அரகலயவில் உண்மையான போராட்டக் காரர்களும் இருந்தனர். ஆனால் ஓர் அங்கமாக சூழ்ச்சித் திட்டமும் இருந்தது – என்றார். (ச)

நீ க்களே உங்களுக்கு குழியை தோண்டினீர்கள். புலிகள் இதற்கு அவசியமில்லை.

3 hours ago, கிருபன் said:

இம்முறை தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கும் முடிவில் நான் இருந்தேன். கட்சி விடுத்த கோரிக்கையால், நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்களுக்காக பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் தேசியப் பட்டியலில் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

நேரடியாக வெல்ல முடியாது என தெரியும். பின் கதவு சாத்தியம் என கட்சி சொல்லி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக, மிகப் பிரமாண்டமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரகலய போராட்டத்தில் புலம்பெயர் புலிகளின் தலையீடு இருந்ததாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை சொல்ல வெட்கமில்லை? அறுபத்தொன்பது லட்ஷம் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அவரை, சிங்களத்தின் கதாநாயகர்களை, புலிகள் ஆட்சியிலிருந்தே விரட்டியுள்ளனர். அப்போ, நீங்கள் பெற்ற வெற்றி, கொண்டாட்டம் எல்லாம் புஷ்வாணமே! உங்களை விட புலிகள் கெட்டிக்காரர். அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன் நான், ஒரு சிறு தொகையினரின் போராட்டத்தால் நான் ஆட்சி விலகமாட்டேன் என்று விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு இருந்தவர், ஏன் சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடினார்? ஏன் அந்த மக்கள் அவரை காப்பாற்ற வில்லை? உங்களை நீங்கள் முட்டாளாக்குகிறீர்கள். போராட்டம் நடத்தியவர்களுக்கு தெரியும் யார் போராட்டம் நடத்தியவர்கள் என்று, அவர்களை முட்டாளாக்க முடியாது உங்களால். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆட்சியை வீழ்த்தியதில் பெரும் பங்காற்றியவை. பொருளாதார நெருக்கடி முறையற்ற நிர்வாகம் ,ஊழல் 

 

பொருளாதாரத்தில் உச்சம் தொட்டுவிட்ட மேற்கத்தைய நாடுகளே ஒரே காலகட்ட பகுதியில் மேற்கொள்ளாத திட்டங்களையெல்லாம்  வெத்தலை பாக்கு சுண்ணாம்புக்கே பக்கத்து வீட்டில் கடன் வாங்கும் இலங்கையில் மேற்கொண்டது உங்களுக்கே நீங்கள் அடித்துக்கொண்ட சாவுமணி.

 தாமரை கோபுரம், துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், ஒரே மூச்சில் அமுலுக்கு கொண்டுவந்த  சேதன பசளை விவசாய திட்டம் என்பவை  75% காரணம் என்றால்

அத்துடன் சேர்ந்து பொருளாதார நெருக்கடிக்கு தோள் கொடுத்து  கொரோனாவும் வந்து உங்கள் பாவங்களின் பெயரால்  இடியாய் இறங்கி குடும்ப ஆட்சியை சுடலைக்கு அனுப்பியது.

எப்படி எல்லா நெருக்கடியும் ஒரேநேரத்தில் உங்களை சூழ்ந்து உங்களை தேர்வு செய்த மக்களே மூண்டே வருஷத்தில் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று சிந்தித்து பார்த்தால் எல்லாத்தையும் மீறிய சக்தி ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்பத்தான் தோன்றுகிறது

அது ஓரிருநாளில் துடிக்க துடிக்க கொல்லப்பட்டு  மண்ணுக்கு வந்து தம் உறவுகளுடன் வாழமுடியாமல் அலறியபடி  பூமிக்கும் அண்டவெளிக்குமிடையே எம் நிலத்தை பார்த்தபடி அலையும் பல்லாயிரம் ஆத்மாக்களின் சாபமும், அவர்களை நினைத்து இன்றுவரை அழுதுகொண்டிருக்கும் லட்சம் உறவுகளின் சாபமாகவும் கூட இருக்கலாம்.

புலம்பெயர் புலிகள் சொன்னால் சிங்களவர்கள் கேட்பார்களா?

அப்போ சஜித்தை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற வன்மத்தில்,  90 வீத சிங்களவர்களால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சித்தப்பு கோட்டபாய புலம்பெயர் புலிகள் சொல்லித்தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா?

புலி பூச்சாண்டி காட்டி சிங்களவர்களின் ரத்தத்தை சூடாக்கி ஆட்சியை பிடிக்கும் பழைய எத்தனங்கள் உங்கள் அப்பன் சித்தப்பன் காலத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது, இப்போ அவர்களின் பிரச்சனை பிறநாடுகள்போல் வேகமாக பொருளாதார வசதியில் முன்னேறவேண்டும் என்பதே.

எனவே நாட்டை நாசமாக்கினீர்கள் என்ற கோபம் முள்ளிவாய்க்காலை நாங்கள் என்றும்  நினைவில் வைத்திருப்பதுபோல் சிங்களவர்கள் மனசில் சில தசாப்தங்களுக்காவது   தொடர்ந்தே ஆகும்.

தாங்கிக்குங்க

அண்ணனுக்காக இதை நீங்க தாங்கித்தான் ஆகணும்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.