Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார்.

IMG_0406.JPG

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.  

IMG_0398.JPG

இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு  இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது.

தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர், உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர், கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும்.

வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை  ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம்  அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை.

அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள்.

எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள்

மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர்.

வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே  இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/198140

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பீத்தல் கோவணத்துடன் நிற்கும் இலங்கைத் தமிழர், இந்தத் தேர்தலுடன் அதுவும் கழன்று அம்மணமாக நிற்கப்போகிறார்கள். 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

ஏற்கனவே பீத்தல் கோவணத்துடன் நிற்கும் இலங்கைத் தமிழர், இந்தத் தேர்தலுடன் அதுவும் கழன்று அம்மணமாக நிற்கப்போகிறார்கள். 

🤨

2018 உலக வங்கியின் கருத்துப்படி இலங்கையின் உட் கட்டுமானங்களை சரி செய்வதற்கு இலங்கைக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது, இவ்வாறான எதிர்மறைகளான  சூழ்நிலையிலும் இலங்கையின் தமிழர் வாழும் பகுதியில் உற்பத்தி நிறுவனம் அமைக்க முற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி தனக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டமையால் கைவிடப்பட்டது.

மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே அவர்களது நல் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் கடைசியாக பதுங்குமிடம்தான் தமிழ்தேசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, vasee said:

2018 உலக வங்கியின் கருத்துப்படி இலங்கையின் உட் கட்டுமானங்களை சரி செய்வதற்கு இலங்கைக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது, இவ்வாறான எதிர்மறைகளான  சூழ்நிலையிலும் இலங்கையின் தமிழர் வாழும் பகுதியில் உற்பத்தி நிறுவனம் அமைக்க முற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி தனக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டமையால் கைவிடப்பட்டது.

மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே அவர்களது நல் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் கடைசியாக பதுங்குமிடம்தான் தமிழ்தேசியம்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள். 

தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள். 

தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான். 

😏

பிள்ளையான் ஒரு பக்கம் கிழக்கை காப்பாற்ற வேண்டும் யாழ்ப்பாணத்தானின் சொல் கேட்காமல் சொந்த காலில் சுயமாக போராடி கிழக்கை காப்பாற்ற வேணும் என குரல்..

அம்மாண் முஸ்லீகளிடமிருந்து கிழக்கை காப்பாற்ற தனது கட்சிக்கு வாக்கு போட வரட்டாம்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள்.. வடக்கும் கிழககும் தமிழர்களின் இரண்டு கண்களாம்...

இதில புலி பினாமிகள் என ஒரு கோஸ்டி ...
அந்த கோஸ்டி இருக்கு என 30 வருசமா குரல் கொடுக்கும் இன்னுமோரு கோஸ்டி 
இவர்களுடன் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க வேணும் ....தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி,தமிழர் தேசிய கூட்டமைப்பு என பல கட்சிகள் வந்து போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்கின்றது....சிங்களவர்கள் இருக்கும் வரை தமிழ் தேசியம் நிலைத்து நிற்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, putthan said:

பிள்ளையான் ஒரு பக்கம் கிழக்கை காப்பாற்ற வேண்டும் யாழ்ப்பாணத்தானின் சொல் கேட்காமல் சொந்த காலில் சுயமாக போராடி கிழக்கை காப்பாற்ற வேணும் என குரல்..

அம்மாண் முஸ்லீகளிடமிருந்து கிழக்கை காப்பாற்ற தனது கட்சிக்கு வாக்கு போட வரட்டாம்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள்.. வடக்கும் கிழககும் தமிழர்களின் இரண்டு கண்களாம்...

இதில புலி பினாமிகள் என ஒரு கோஸ்டி ...
அந்த கோஸ்டி இருக்கு என 30 வருசமா குரல் கொடுக்கும் இன்னுமோரு கோஸ்டி 
இவர்களுடன் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க வேணும் ....தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி,தமிழர் தேசிய கூட்டமைப்பு என பல கட்சிகள் வந்து போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்கின்றது....சிங்களவர்கள் இருக்கும் வரை தமிழ் தேசியம் நிலைத்து நிற்கும் 

தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை. 

☹️

இந்த விடயத்தில் தனியாக புலிவால்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்பது என் நிலைப்பாடு ...70 வருடங்களுக்கு முதல் திட்டமிட்ட வகையில் அரச அதிகாரிகள் ஊடாக வடக்கு கிழக்கு நிலங்களை அபகரிக்கின்றனர். இது சகலரும் அறிந்த விடயம் ...இஸ்ரேல் ஆயுதபலத்துடன் பகிரங்கமாக நிலங்களை அபகரிக்கின்றனர் ...சிங்கள அரசுகள் அரச அதிகாரிகள் ஊடாக அபகரிக்கின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2024 at 14:37, ஏராளன் said:

எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும்

கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி. 

கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால்

திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி. 

கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால்

திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.

 

இவர்கள் சேர்ந்து நின்றால்…. திருமலை - 2,   மட்டக்களப்பு - 3,  அம்பாறை 1 என மொத்தமாக 6 தொகுதி எடுக்கலாம் என நினைக்கின்றேன். 
மட்டக்களப்பில் போன முறை 4 தமிழர்கள் வென்றவர்கள்.
(சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வியாழேந்திரன், பிள்ளையான்)

பிள்ளையான், கருணா ஆகியோரை இவர்கள் கொள்கை அளவில் சேர்க்க மாட்டார்கள். அவர்கள் இல்லாமலே போட்ட கணக்குத்தான் மேலே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இவர்கள் சேர்ந்து நின்றால்…. திருமலை - 2,   மட்டக்களப்பு - 3,  அம்பாறை 1 என மொத்தமாக 6 தொகுதி எடுக்கலாம் என நினைக்கின்றேன். 
மட்டக்களப்பில் போன முறை 4 தமிழர்கள் வென்றவர்கள்.
(சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வியாழேந்திரன், பிள்ளையான்)

பிள்ளையான், கருணா ஆகியோரை இவர்கள் கொள்கை அளவில் சேர்க்க மாட்டார்கள். அவர்கள் இல்லாமலே போட்ட கணக்குத்தான் மேலே உள்ளது.

ஓம்.

பிள்ளையான் வெல்வது உறுதி என நினைக்கிறேன். வியாழனுக்கு சனி மாற்றம் - வேட்பு மனுவில் வேலையை காட்டியதால் - அவர் இல்லை. இந்த முறை ஹிஸ்புல்லா 16 வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் கேட்கிறார். காத்தான்குடி வாக்குகள் லம்பாக விழும் என நினைக்கிறேன். அமீர் அலியிம் கேட்கிறார் ஓட்டமாவடி பக்க வாக்குகள் இவருக்கு விழும். இருவரும் ஒரே அணியில் கேட்டிருந்தால் கிட்டதட்ட 2 பேரும் வருவது உறுதியாகி இருக்கும். ஆனால் பிரிந்து கேட்பதால் 1 மட்டுமே உறுதி.

இருக்கும் 5 சீட்டில், பிள்ளையான் 1, தமிழரசு 2, முஸ்லிம் வேட்பாளர் 1 - எஞ்சும் 1 சீட்டையே இப்போ கணிக்க கஸ்டமாக இருக்கிறது, ஆனால் இது முஸ்லிம் ஒருவராக அமையவே வாய்ப்புக்கூட.

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக கேட்டிருப்பின் இந்த கடைசி சீட்டை அந்த அணி எடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். 

வியாழேந்திரனுக்கு போன வாக்குகள் இந்த முறை எங்கே போகும் என யோசித்தால் - இவை தமிழ் வாக்குகள் எனவே முஸ்லிம் வேட்பாளருக்கு போகாது. அதே சமயம் அவர் கட்சி தாவிய பின் அவருக்கு கிடைத்த வாக்குகள். எனவே தமிழ் தேசிய கட்சிகளில் நாட்டம் இல்லாதர்களாக இருக்க வாய்ப்பு அதிகம்.

எனவே இது பிள்ளையானுக்கும் போக கூடும்.

சுருக்கமாக 5 வது சீட், தமிழரசு, முஸ்லிம், பிள்ளையான் யாரிடமும் போக கூடும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சுருக்கமாக 5 வது சீட், தமிழரசு, முஸ்லிம், பிள்ளையான் யாரிடமும் போக கூடும் என நினைக்கிறேன்.

அந்த ஐந்தாவது இடம்… அனுர அலையில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

சகல தமிழ் தேசிய கட்சிகளும் சேர்ந்து கேட்டால் அம்பாறை திருமலையில் தலா 1 எடுக்க வாய்புள்ளது.

அம்பாறையில் இந்த வாய்ப்பு கூட. ஆனால் இந்த முறை தேசிய கட்சிகள் பிரிந்து கேட்பதால், கூடவே பில்லையான் கட்சியிம் கேட்பதால் - வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன்.

திருமலையில் புலிகள் இருந்த போது மட்டுமே, மக்கள் ஓரணியில் திரண்டு 2 சீட்டை கடைசியாக எடுத்தனர் என நினைக்கிறேன். 

பிள்ளையான், கருணா வண்டவாளம் திருமலையில் நன்கு உணரபட்டுள்ளது ஆகவே அங்கு அவர்களுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. வீடு, சைக்கிள், சங்கு திருமலையில் வீட்டின் கீழ் கேட்கிறார்கள் என நினைக்கிறேன்.

இதனால் திருமலையில் 2 சீட் கிடைத்கால் அது பெரிய சந்தோசமாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் கட்சியில் இருந்து கேட்பவரின் செல்வாக்கும், பிரபல்யமும் இதில் முக்கியம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

அந்த ஐந்தாவது இடம்… அனுர அலையில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு. 

ஓம். 4 பகுதிக்கும் சம வாய்ப்பு என்றே நினைக்கிறேன். 

உண்மையில் 5 வது சீட்டை எடுக்க அனுர அணிக்கு வாய்ப்பு கூட, ஏன் என்டால் வியாழனின் வாக்குகள், முஸ்லிம் வாக்குகள், முன்னைய தமிழ் தேசிய வாக்குகள், பிள்ளையானின் வாக்குகள் எல்லாம் சேரலாம்ழ்

1 minute ago, தமிழ் சிறி said:

தேசிய மக்கள் கட்சியில் இருந்து கேட்பவரின் செல்வாக்கும், பிரபல்யமும் இதில் முக்கியம்.

ஓம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

வீடு, சைக்கிள், சங்கு திருமலையில் வீட்டின் கீழ் கேட்கிறார்கள் என நினைக்கிறேன்.

இதனால் திருமலையில் 2 சீட் கிடைத்கால் அது பெரிய சந்தோசமாக இருக்கும். 

நான் வாசித்த அளவில்..  திருமலையில் வீடும், சங்கும்தான் சேர்ந்து போட்டியிடுகின்றது.
சைக்கிள் தனியே போட்டியிடுக்கின்றது போலுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.