Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

மாமரத்தின் கிளைத் தடியை பூவரசந்தடி நடுவதை போல தமிழ்நாட்டில் ஒருவர் நட்டு வளர்ப்பதாக வாசித்திருந்தேன். இது சம்பந்தமான விபரம் ஏதும் தெரிந்தால் இங்கு பகிருங்கள் @valavan @vasee @உடையார்

@குமாரசாமி @ரசோதரன்

வீட்டில் உள்ள கறுத்தக் கொழும்பான் மரம் 2008 நிசா புயலில் விழுந்தது, அதன் கிளைகளை வெட்டி ஓரளவு நிமிர்த்தி இப்போதும் சுவையான மாம்பழம் காய்க்கிறது. ஆனால் மரம் நன்றாக சரிந்து உள்ளதால் பெரும் மழைக்காலம், பலத்த காற்று நேரம் தப்புமோ என அச்சமாக இருக்கும். அதன் கிளையில் கன்று உருவாக்க முடிந்தால் என்ற எண்ணத்தில்தான் கேட்கிறேன்.

 

கீழே முதலாவது வீடியோ முறையில் கற்றாழையை பயன்படுத்தி பல கன்றுகளை உருவாக்கலாம், நான் கொய்யாவை இந்த முறையில் செய்து 1 மாதத்தில் அரும்பு விட்டத்து, இப்ப கொத்து மல்லிகையை வெட்டி நட்டுள்ளேன். முட்டையையும் அடித்து மண்ணுடன் கழந்துவிடுங்கள், நல்ல சத்து

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2025 at 17:00, vasee said:

வளர்ச்சியினை தூண்டும் பொடி தேவையில்லை, மரத்தில் இருக்கும் ஒரு கொப்பில் ஒரு அங்குலத்திற்கு மோதிரம் போல பட்டையினை நீக்கும் போது மரத்திலிருந்து குறித்த கொப்பிற்கு தேவையான நீர் மற்றும் சத்துக்கள் செல்லாது ( கீழ் மரத்திற்கும் கொப்பிற்குமிடையே பட்டை மூலமான தொடர்பற்ற நிலையில் கொப்பிற்குத்தேவையான நீர் மற்றும் சத்துக்களை பெறுவதற்காக வேர்கள் உருவாகும்).

3 மாத காலத்தில் மரத்திற்கு தேவையான அளவில் வேர்கள் அந்த மண் பையினுள் உருவாகிவிடும், வளவனின் காணொளியில் உள்ளது.

 

rose

மேற்கூறியது போல ரோசா மரத்தில் பதியம் வைக்கப்பட்டது 14 நாள்களுக்கு மேல் இருக்கும் இந்த பதியம் வைத்து, பொதுவாக 4 வாரங்களின் பின்னர் அகற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும், ஆனால் முன்னதாக வெட்டி பூந்தொட்டியில் வைத்துள்ளேன், அதே போல் மாமரத்திலும் ஒரு பதியம் வைத்துள்ளேன் 3 மாதத்தின் பின் தாய் மரத்திலிருந்து பிரித்து எடுக்கவுள்ளேன்.

அத்துடன் குளிர்காலமும் ஆரம்பிக்கும் சிட்னியில்.

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய், மற்றும் தக்காளி என இரு வெவ்வேறாக ஒட்டுக்கள் சுண்டைங்காய் செடியில் இன்று வைத்துள்ளேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2025 at 12:30, vasee said:

மிளகாய், மற்றும் தக்காளி என இரு வெவ்வேறாக ஒட்டுக்கள் சுண்டைங்காய் செடியில் இன்று வைத்துள்ளேன்.

கிட்டத்தட்ட இரண்டு வார காலம் ஆகிய  நிலையில்........

IMG-0273

IMG-0283

மிளகாய் ஒட்டு ஓரளவிற்கு பார்ப்பதற்கு சரியாக உள்ளது போல தெரிகிறது.

IMG-0274.jpg

IMG-0284.jpg+

ஆனால் தக்காளி ஒட்டு இலைகள் வளர்ந்தாலும் அதன் தண்டு வாடிகின்றமை அது சரியான நிலயில் இல்லை என்பதால் அதனை அகற்றிவிட்டு மீண்டும் இரண்டு தக்காளி ஒட்டு வைத்துள்ளேன்.

முந்தய கத்தரி ஒட்டின் கட்டினை பிர்த்து விட்டேன்.

IMG-0280.jpg

IMG-0281.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.