Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்

image_1068777a87.jpg

ரீ.எல்.ஜவ்பர்கான்   

நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன் ஒரு  அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் 

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத்  தழுவியுள்ளனர் 

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எஸ் ஸ்ரீநேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் எம் எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்  ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மட்டக்களப்பில்-வெற்றி-தோல்வியடைந்த-புள்ளிகள்/175-347252

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத்  தழுவியுள்ளனர் 

அடிதூள் .... பிரதேசவாத மட்டக்களப்பான்டா ...😇
அப்படியே மட்டக்களப்பு நகரில் NPP இல் ஒரு  தமிழர்... நம்ம வாக்கும் வீண் போகலை 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து இவர்களின் பிளான் ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

அடுத்து இவர்களின் பிளான் ?

அம்மானும் பிள்ளையானும் இனி கால் தூசிக்கும் பெறுமதி இல்லாத ஆட்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் டக்ளஸ்சும், கிழக்கில் கருணாவும், பிள்ளையானும் தோல்வியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கிழக்கே வழங்கப்படவேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் கிழக்கு மாகாண தமிழரசு கட்சியி்னர் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

வடக்கில் டக்ளஸ்சும், கிழக்கில் கருணாவும், பிள்ளையானும் தோல்வியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கிழக்கே வழங்கப்படவேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் கிழக்கு மாகாண தமிழரசு கட்சியி்னர் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

 

சிறிதரன் கிளிநொச்சி மாவட்டம்! யாழ் மாவட்டத்தில் இருந்து ஒருவரும் தமிழரசுக் கட்சியில் தெரிவாகவில்லை! பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாமல் தமிழர்களின் யாழ்ப்பாணம் இருக்கலாமா?

கட்டாயம் சுமந்திரனுக்கு கொடுத்து தமிழரசுவின் யாழ் பிரதிநிதித்துவத்தைக் காக்கவேண்டும்🤓

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

 

கட்டாயம் சுமந்திரனுக்கு கொடுத்து தமிழரசுவின் யாழ் பிரதிநிதித்துவத்தைக் காக்கவேண்டும்🤓

 

யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும்.

- ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை.

- தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள்.

- மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை

- மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை.

- தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

வடக்கில் டக்ளஸ்சும், கிழக்கில் கருணாவும், பிள்ளையானும் தோல்வியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கிழக்கே வழங்கப்படவேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் கிழக்கு மாகாண தமிழரசு கட்சியி்னர் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

 

true

8 hours ago, zuma said:

வடக்கில் டக்ளஸ்சும், கிழக்கில் கருணாவும், பிள்ளையானும் தோல்வியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கிழக்கே வழங்கப்படவேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் கிழக்கு மாகாண தமிழரசு கட்சியி்னர் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

 

டக்கிளஸு 30 வருட அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் செல்வாக்கு பெற்று தனது வாக்கு வங்கியை தக்க வைத்திருப்பார் என நான் நினைத்தேன்...அவரிடம் சலுகை பெற்றவர்களே அவரை ஏமாற்றி விட்டார்கள் போல ...😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.