Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!

10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார்.

“எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம்.
எமக்கு கெம்பஸ் சென்று பழக்கம்.. கையை உயர்த்தி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன். அப்போது நாலு பேர் வந்து என்னுடன் பேசினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தினமும் உட்காரும் நாற்காலி இது என்று என்னிடம் வந்து சொன்னார்கள். பிறகு மற்றைய நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்தேன். நான் 8வது நாற்காலியில் போய் உட்கார எந்த காரணமும் இல்லை.

எல்லா ஊடகங்களிலும் என்னை புலி என்று அழைத்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் புலி ஒன்று வந்து அமர்ந்துள்ளது என்று. நான் வேண்டுமென்றே இப்படிப் போய் உட்காரவில்லை... எனக்குக் குரூப் இல்லை. நான் சுயேட்சையாக வந்தேன். அதனால் எங்கு உட்காருவது, எப்படி செல்வது என்று தெரியவில்லை.

அவ்வாறு நான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மன்னிக்கவும். வேண்டுமென்றே அந்த  நாற்காலியில் உட்கார நான் எதிர்பார்க்கவில்லை.

https://tamil.adaderana.lk/news.php?nid=196394

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

“எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம்.

தவறு அற்ற ஒரு செயலுக்காக மன்னிப்புக் கேட்பது பெரும் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

Dr. ஐ யாழ் களத்தில்  தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Paanch said:

தவறு அற்ற ஒரு செயலுக்காக மன்னிப்புக் கேட்பது பெரும் தவறு.

அவ்வாறு நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
என்று வந்திருக்க வேண்டும்.

 

1 hour ago, ஏராளன் said:

அவ்வாறு நான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு

 

9 minutes ago, Kapithan said:

Dr. ஐ யாழ் களத்தில்  தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? 😁

அவர் தழமிழ்த்  தேசியவாதி தான் தமிழ்த் தேசத்தில் வாழும் மக்களுக்கான அரசியல் செய்பவரைத் தேசியவாதி என்று தானே அழைக்க வேண்டும் .

அதை விட செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு கோருவது  என்பது எல்லோராலும் முடியாது
இங்கேயும் DR, அர்ச்சுனா தன்னை வேறுபடுத்தியே நிற்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

Dr. ஐ யாழ் களத்தில்  தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? 😁

 

சுமந்திரனிடம் முறையிடப் போகிறோம்.

நீங்களும் வருவீர்களா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனிடம் முறையிடப் போகிறோம்.

நீங்களும் வருவீர்களா சார்?

அது ஒரு சிங்கள தேசிய புத்த....

அதுக்கு எல்லோரும் எதிரி தான் சுமந்திரன் உட்பட. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அவ்வாறு நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
என்று வந்திருக்க வேண்டும்.

 

 

அவர் தழமிழ்த்  தேசியவாதி தான் தமிழ்த் தேசத்தில் வாழும் மக்களுக்கான அரசியல் செய்பவரைத் தேசியவாதி என்று தானே அழைக்க வேண்டும் .

அதை விட செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு கோருவது  என்பது எல்லோராலும் முடியாது
இங்கேயும் DR, அர்ச்சுனா தன்னை வேறுபடுத்தியே நிற்கின்றார்

உப்பிடி உசுப்பேற்றி உசுப்பேற்றித்தானே எல்லாவற்றையும் போட்டுடைத்தீர்கள்? 

Dr. ஐப் பப்பாவில் ஏற்றாமல் விட்டாலே போது. அவர் நிதானத்திற்கு வருவார். 

1 hour ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனிடம் முறையிடப் போகிறோம்.

நீங்களும் வருவீர்களா சார்?

சும் குலப்பன் காச்சல் இன்னும் போகவில்லை  பிரியனுக்கு,.😉

45 minutes ago, விசுகு said:

அது ஒரு சிங்கள தேசிய புத்த....

அதுக்கு எல்லோரும் எதிரி தான் சுமந்திரன் உட்பட. 

சாரி பிறதர். 

கொஞ்சம் பிரியும்படி கூறலாமே,..😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.