Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்!

மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்!

வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது.

எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1409858

  • கருத்துக்கள உறவுகள்

அனுர பிரிகேட், மற்றும் சாராய சிறியின் அடிப்பொடிகளுக்கு,

இது மைத்திரி அரசு காலத்தில் இருந்த அதே நடைமுறை.

அப்போ அனுர வந்தால் மாற்றம் வரும் என பிரிகேட்டினர் எழுதியதும்,

சாராய சிறி அனுரவை ஆதரித்து அறிக்கை விட்டதும் பொய்யா கோபால்?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அனுர பிரிகேட், மற்றும் சாராய சிறியின் அடிப்பொடிகளுக்கு,

இது மைத்திரி அரசு காலத்தில் இருந்த அதே நடைமுறை.

அப்போ அனுர வந்தால் மாற்றம் வரும் என பிரிகேட்டினர் எழுதியதும்,

சாராய சிறி அனுரவை ஆதரித்து அறிக்கை விட்டதும் பொய்யா கோபால்?

 

இது ஆரம்பம் மட்டுமே...இன்னும் பல...விரைவில் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் யார்?

அவர்களை வணங்காமல் மாவீரர் நாள் எப்படி??

எல்லாம் பொதியும் இவ்வாறு தான் தமிழர்களுக்கு காட்டப்பட்டது. காட்டப்படும்... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

மாவீரர்கள் யார்?

அவர்களை வணங்காமல் மாவீரர் நாள் எப்படி??

எல்லாம் பொதியும் இவ்வாறு தான் தமிழர்களுக்கு காட்டப்பட்டது. காட்டப்படும்... 

அடுத்த மாவீரர் தினம் தடை செய்யப்படும் என நான் நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

மாவீரர்கள் யார்?

அவர்களை வணங்காமல் மாவீரர் நாள் எப்படி??

எல்லாம் பொதியும் இவ்வாறு தான் தமிழர்களுக்கு காட்டப்பட்டது. காட்டப்படும்... 

நெற்றியில் அடித்தது போன்ற கேள்வி.

அடக்குமுறையின் மத்தியில் நாம் மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றுவது ஒன்று.

அடக்குமுறையே இல்லை ஆனால் மெழுகுவர்த்தி ஏற்ற மட்டுமே அனுமதி என்பது பம்மாத்து.

இன்னொரு விடயம் இன்று கேள்விப்பட்டேன்.

ஊர் பாடசாலைகள் வெளிநாட்டில் சேகரிக்கும் பணம் இனி அரசின் ஊடாகவே கையாளப்படும் என்ற வகையில் ஏதோ சுற்று நிருபம் - வடக்கு ஆளுனர் அனுப்பவுள்ளாராம்.

புலம்பெயர்ந்தோர் பணம் எமது பள்ளிகளை மேம்படுத்துவது கண்ணை குத்தி விட்டதாக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஊர் பாடசாலைகள் வெளிநாட்டில் சேகரிக்கும் பணம் இனி அரசின் ஊடாகவே கையாளப்படும் என்ற வகையில் ஏதோ சுற்று நிருபம் - வடக்கு ஆளுனர் அனுப்பவுள்ளாராம்.

புலம்பெயர்ந்தோர் பணம் எமது பள்ளிகளை மேம்படுத்துவது கண்ணை குத்தி விட்டதாக்கும்.

புலம் பெயர்ந்தோர் அனுப்பும் பணம் சரியாக கையாள்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.

சாவகச்சேரி வைத்தியசாலை ஒர உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

புலம் பெயர்ந்தோர் அனுப்பும் பணம் சரியாக கையாள்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.

சாவகச்சேரி வைத்தியசாலை ஒர உதாரணம்.

இருக்கலாம்…ஆனால் அதற்கு தவறு நடக்கும் இடங்களில் விசாரணை அல்லவா செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்தமாக அதுவும் பாடசாலைகளை ஏன் குறிவைக்க வேண்டும்?

முதலில் பெளத்த விகாரைகளில் தொடங்கி, இந்து கோவில்கள், சர்ச்சுகள் என வரலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

புலம் பெயர்ந்தோர் அனுப்பும் பணம் சரியாக கையாள்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.

சாவகச்சேரி வைத்தியசாலை ஒர உதாரணம்.

இந்த கையாடல்களை யார் செய்கின்றார்கள்? தமிழர்களா? சிங்களவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இருக்கலாம்…ஆனால் அதற்கு தவறு நடக்கும் இடங்களில் விசாரணை அல்லவா செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்தமாக அதுவும் பாடசாலைகளை ஏன் குறிவைக்க வேண்டும்?

முதலில் பெளத்த விகாரைகளில் தொடங்கி, இந்து கோவில்கள், சர்ச்சுகள் என வரலாமே.

அரசிடம் வாங்கினால் விசாரணைகள் ஒன்றை முடித்தாலே அடுத்த கட்ட நிதி என்று ஏராளமான ஆட்களுக்க பதிர் சொல்ல வேண்டும்.

வெளிநாட்டுப் பணம் கொடுத்ததுடன் சரி.அத்திவாரம் வெட்டியாச்சா என்று கூட கேட்க மாட்டார்கள்.

விரும்பியவர்களுக்கு உறவினர்களுக்கு கொந்தராத்தை கொடுக்கலாம்.

அரசு என்றால் முறைப்படியாக ரென்ரர் போடணும்.

36 minutes ago, குமாரசாமி said:

இந்த கையாடல்களை யார் செய்கின்றார்கள்? தமிழர்களா? சிங்களவர்களா?

என்ன கேள்வி நம்மவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள 522வது கட்டளை தலைமையகம் முன்னே சிவப்பு மஞ்சள் கொடிகளும், விடுதலை கீதங்களும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சாவகச்சேரி பகுதியில் மாவீரர் நாள் கடும் மழையிலும் எழுச்சியாக நடைபெற உள்ளதாக எனது  தந்தையின் மாணவருடன் பேசும் போது சொன்னார். எந்த வித கெடுபிடிகளும் இல்லை என்பதாகவே சொன்னார். இப்போது அதிகாலை என்பது (அங்கு ) குறிப்பிடத்தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.