Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாடினார்.
 

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இது அன்பின் நிமித்தமான சந்திப்புதான். இருவரும் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம். என்னைவிட அனுபவம் வாய்ந்தவர். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்றுதான் முன்பு அவரை விமர்சித்தேன்.

இந்தக் களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சி செய்யும்போது மக்கள் அந்த ஆட்சியைக் கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்று கூறியிருந்தார். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியிருப்பதும் அரசியல்தான். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. சம்பந்திகளைப் போல முதல்வரும், பிரதமரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் வெளியில் எங்களை சங்கி என்கிறார்கள். சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். தி.மு.க-வை எதிர்த்தாலே சங்கி என்றால், அதை பெருமையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார். சீமானின் இந்த பதில் அடுத்த விவாதத்துக்கு வழிவகுத்தது.

இதற்கு பொதுக்கூட்டத்தில் விளக்கம் கொடுத்த சீமான், "நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள். நான் இல்லையென்றால் எட்டு வழிச் சாலை, பரந்தூரில் விமான நிலையம், காட்டுப் பள்ளியில் துறைமுகம் கட்டி இருப்பார்கள். ஆனால் நானும் என் படையும் இருக்கும் வரை உங்களால் இவற்றை கட்டிவிட முடியுமா? நான் சாத்தியமில்லாததை பேசுவேன் என்று சொல்கிறார்கள். சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியப்படுத்துபவனுக்கு பெயர்தான் புரட்சியாளன்" என கொதித்தார்.

 
வானதி சீனிவாசன்
 
வானதி சீனிவாசன்
 

சீமானின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், "காவி என்பதை சீமான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பா.ஜ.க-விற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம், சனாதனத்தைக் குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்தவர்தான் தர வேண்டும். சீமான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளக்கூடாது. அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான். 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற அவருக்கு மிகச்சிறந்த தலைவர் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டமளித்து கொண்டிருக்கின்றன. இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும்?" என்றார்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், "எம்ஜிஆருக்கு புரட்சி நடிகர் என்கிற பட்டத்தைக் கலைஞர் கொடுத்தார். கிருபானந்த வாரியார் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை கொடுத்தார். எனவே பட்டங்கள் மற்றவர்களால்தான் கொடுக்கப்பட வேண்டும். நமக்கு நாமே பெற்றுக்கொள்வது பட்டமாக இருக்காது. இந்த விஷயத்தில் வானதி சொல்வதில் அர்த்தம் இருக்கிறது" என்றார்.

 
தராசு ஷ்யாம்
 
தராசு ஷ்யாம்
 

ஆனால், 'சீமானின் இந்த கருத்து விஜய்யை சீண்டும் வகையில் இருக்கிறது' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "ஏற்கெனவே யார் சூப்பர் ஸ்டார் என்பதில் ரஜினிக்கும், விஜய்க்கும் பிரச்சினை இருக்கிறது. இந்தசூழலில்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார் சீமான். இதன் மூலமாக விஜய்யை ஓரம்கட்டுகிறார். இந்த பேச்சு விஜய் மற்றும் அவரது ரசிகர்களை வெறுப்பேத்தும் வகையிலும், வம்புக்கு இழுக்கும் வகையிலும் இருக்கிறது. மேலும் அரசியல் சூப்பர் ஸ்டார் என தன்னை எப்படி சீமான் சொல்லிக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. தனியாக தேர்தலை சந்தித்து 8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 
ப்ரியன்
 
ப்ரியன்
 

எனவே தனித்துவமான அரசியல்வாதியாக இருக்கிறார். அரசியல் சூப்பர் ஸ்டார் என்றால் பிரபலமாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், தேர்தல்களில் அதிக வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும்.

 

இதையெல்லாம் தமிழக அரசியலில் சீமான் இன்னும் நிரூபிக்கவில்லை. எனவே அவர் இவ்வளவு சீக்கிரமாக அரசியல் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்குத் தகுதியுடைவராக இருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியதுதான். தன்னைத்தானே அரசியல் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்வது அவரது தன்னம்பிக்கையாக இருக்கலாம். பிறர் அதை நாகரீகமான விஷயமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை சீமான் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

 

`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்? - Vikatan

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பட்டம் கொடுக்க இந்த உலகில் எவனுக்கும் ஜோக்கிதை இல்லை. இனியும் எவனும் அந்த தகுதியுடன் பிறக்கப்போவதில்லை. எனவே எனக்கு நானே அரசியல் சுப்பர்ஸ்ரார் என்று பட்டத்தை சூட்டிக் கொண்டேன். 
புஹ்ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா😂😂😂😂😂😂😂😂😂

(தம்பிகளின் விசிலடி அரங்கம் அதிர்ந்தது ) 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக முத்திவிட்டது என்று மட்டும் தெரிகிறது 🤣🙂

2 hours ago, விசுகு said:

நன்றாக முத்திவிட்டது என்று மட்டும் தெரிகிறது 🤣🙂

சீமானுக்குத் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சீமானுக்குத் தானே?

சீமான் விசுவாச உள்நாட்டு வெளிநாட்டு தம்பிகளூக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

இனியும் எவனும் அந்த தகுதியுடன் பிறக்கப்போவதில்லை. எனவே எனக்கு நானே அரசியல் சுப்பர்ஸ்ரார் என்று பட்டத்தை சூட்டிக் கொண்டேன்.

large.IMG_7823.jpeg.03aca2e286f072ca757b

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் அரசியல் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட ஈழத்தமிழர்களுக்குத்தான் வயிற்றில் புளிச்சலை ஏற்படுத்துகின்றது. 😎

கோபாலபுர விருந்தோம்பல்கள் அமர்க்களமாக இருக்கும் என கேள்விப்பட்டேன் உண்மையா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

சீமான் அரசியல் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட ஈழத்தமிழர்களுக்குத்தான் வயிற்றில் புளிச்சலை ஏற்படுத்துகின்றது. 😎

கோபாலபுர விருந்தோம்பல்கள் அமர்க்களமாக இருக்கும் என கேள்விப்பட்டேன் உண்மையா? 😂

😁 ஒருரே சிரிப்பாய் இருக்கு தாத்தா😁.............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

😁 ஒருரே சிரிப்பாய் இருக்கு தாத்தா😁.............................

மற்றவர்கள் சீமானை விமர்சிக்கும் போது  ஏனையவர்கள் கருணாநிதியையும் ஸ்டாலினையும் உதயநிதியையும் பழனிச்சாமியையும் விமர்சிக்க தடை வராது என நினைக்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்கள் சீமானை விமர்சிக்கும் போது  ஏனையவர்கள் கருணாநிதியையும் ஸ்டாலினையும் உதயநிதியையும் பழனிச்சாமியையும் விமர்சிக்க தடை வராது என நினைக்கின்றேன். 🙂

ச‌ங்கி ம‌ங்கிய‌ த‌மிழ் நாட்டில் அறிமுக‌ம் செய்து வைச்சு வ‌ள‌த்து விட்ட‌தே இந்த‌ திருட்டு கும்ப‌ல் தான் தாத்தா

 

சீமான் மீதான‌ இந்த‌ விம‌ர்ச‌ன‌ம் ஏற்று கொள்ள‌ முடியாது......................த‌மிழ் நாட்டின் எல்லா அழிவுக்கும் மூல‌ கார‌ன‌ம் திமுக்கா தான்......................................

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி தான் சூப்பர் ஸ்டார் என்றால், விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை என்று ஒரு அர்த்தமும் வருகின்றதே.................🤣.

இப்ப யானைக் கூட்டங்கள் மிதிக்கப் போகின்றன செந்தமிழனை................😜.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

ரஜனி தான் சூப்பர் ஸ்டார் என்றால், விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை என்று ஒரு அர்த்தமும் வருகின்றதே.................🤣.

இப்ப யானைக் கூட்டங்கள் மிதிக்கப் போகின்றன செந்தமிழனை................😜.

ஊட‌க‌த்தை விஜேய் இதுவ‌ரை ச‌ந்திச்ச‌து கிடையாது...............த‌மிழ் நாட்டில் எவ‌ள‌வோ ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ள் போய் கிட்டு இருக்கு வெறும‌ன‌ க‌ம‌ல‌ போல‌ X த‌ள‌த்தில் இருந்து விஜேய் அர‌சிய‌ல் செய்கிறார் குருநாதா😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

ஊட‌க‌த்தை விஜேய் இதுவ‌ரை ச‌ந்திச்ச‌து கிடையாது...............த‌மிழ் நாட்டில் எவ‌ள‌வோ ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ள் போய் கிட்டு இருக்கு வெறும‌ன‌ க‌ம‌ல‌ போல‌ X த‌ள‌த்தில் இருந்து விஜேய் அர‌சிய‌ல் செய்கிறார் குருநாதா😁.......................

பொதுவாக படங்களில் விஜய்யை நடிக்க வைப்பது மிகக் கஷ்டம்.......... கல்லில் கூட நார் உரித்துவிடலாம்.

முன்னேற்பாடுகள், தயாரிப்புகள் இல்லாமல் மக்களையும் ஊடகங்களையும் அவர் சந்திப்பதும் அது போலவே............... அவருக்கு வரவே வராது, கஷ்டம் தான்..........

கமல் மக்களோடு போய்ப் பேச தயாராகவே இருக்கின்றார்........... மக்கள் தான் கமலைக் கண்டவுடன் குதிக்கால் பிடரியில் பட குதித்தோடி தப்பித்து ஓடுகின்றார்கள்...............🤣

    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, ரசோதரன் said:

பொதுவாக படங்களில் விஜய்யை நடிக்க வைப்பது மிகக் கஷ்டம்.......... கல்லில் கூட நார் உரித்துவிடலாம்.

முன்னேற்பாடுகள், தயாரிப்புகள் இல்லாமல் மக்களையும் ஊடகங்களையும் அவர் சந்திப்பதும் அது போலவே............... அவருக்கு வரவே வராது, கஷ்டம் தான்..........

கமல் மக்களோடு போய்ப் பேச தயாராகவே இருக்கின்றார்........... மக்கள் தான் கமலைக் கண்டவுடன் குதிக்கால் பிடரியில் பட குதித்தோடி தப்பித்து ஓடுகின்றார்கள்...............🤣

    

யோவ் நீவீர் பேய்க்காயப்பா...😎

  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.