Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 DEC, 2024 | 05:09 PM

image

வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது.

அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகியிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த முச்சக்கரவண்டிக்கு நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு, விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து இந்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டது.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது.

வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றேகால் பவுண் மோதிரத்தை திருடச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இரு நபர்களிடமிருந்தும் முச்சக்கரவண்டி மற்றும் 4 அரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

IMG-20241213-WA0111.jpg

IMG-20241213-WA0117.jpg

https://www.virakesari.lk/article/201167

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடர்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கம் ,ஒருமைபாடு காணப்படுகிறது ...என்.பி.பி ஆட்சிக்கு வந்த பின்பு..அப்பே ரட்ட ஆபே ஆண்டுவ‌

  • கருத்துக்கள உறவுகள்

அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள்.

2 hours ago, putthan said:

திருடர்களுக்கு இடையே தேசிய நல்லிணக்கம் ,ஒருமைபாடு காணப்படுகிறது

திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள்.

திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 

அரசுக்கு வரி கட்ட தேவையில்லை ஒரு சந்தேகம் இவர்களுக்கும் தொழிற்சங்கம் இருக்குமோ 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இருக்கும். சில கொள்ளையர் குழுவாகவும் செய்கிறார்கள், ஆகையால் சங்கமமைத்து அதற்கு நேர, இட, அட்டவணை போட்டு செய்வார்கள், பிறகு பங்கு பிரிப்பதில் சண்ட பிடிக்கவும் கூடும், அதன் பின் பிரிந்து சுயமாக தம் தொழிலை தொடர்வர். டக்கிளஸ் கூட ஓய்வுபெற்ற பின்  என்று பிடித்தாராமே சம்பளத்திலிருந்து. அரசாங்க உத்தியோகத்தருக்கு தானாகவே ஓய்வூதியத்துக்கென ஒதுக்குகிறார்கள் அவர்கள் சம்பளத்திலிருந்து. அதில இவர் வேற பிடிக்கிறேனென கூறி ஏப்பம் விட்டிட்டார்.     

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, putthan said:

ஒரு சந்தேகம் இவர்களுக்கும் தொழிற்சங்கம் இருக்குமோ

இப்போ தொழிற்சங்கங்களும் அரசின் பாட்னர்😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போ தொழிற்சங்கங்களும் அரசின் பாட்னர்😀

தோழர்கள் குறூப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே உள்ள கருத்துக்களை வாசிக்கும் போது......மகிந்த,மைத்திரி,சந்திரிக்கா,கோத்தபாய,ரணில் ஆட்சி காலத்தில் வடபகுதியில் தேனாறும் பாலாறும் ஓடியது போல் இருக்கின்றது...🤣

கள்ளர்கள் எந்த ஆட்சியிலும் இருப்பார்கள்து என்பது அடியேன் கருத்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.