Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் ஸ்டாரின் மகள் காதலனுடன் ஓட்டம்! ரசிகர்கள் அதிர்ச்சி

Featured Replies

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இரண்டாவது மகள் ஸ்ரீஜா பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக தான் காதலித்து வந்த சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் ஏராளமான ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

என்.டி.ஆருக்கு பிறகு ரசிகர்களால் தெய்வமாக போற்றப்படுபவர் சிரஞ்சீவி. இந்த காதல் திருமணத்திற்கு அவர் எப்படியெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது பற்றி ஸ்ரீஜா பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக பேசியதுதான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம்.

நானும் சிரிஷ§ம் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வந்தோம். இதையறிந்ததும் எனது பெற்றோர் என்னை கல்லூரிக்கு செல்ல விடாமல் ஓராண்டாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தனர். இந்த திருமணத்திற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தோம். என்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து ஆபத்து ஏற்படலாம் என்று கருதுவதால் போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிரிஷ் நிருபர்களிடம் பேசும்போது, எங்களுடைய திருமணம் கலப்பு திருமணம். நாங்கள் இருவரும் மேஜர்கள். சிரஞ்சீவி, மாநிலத்தில் செல்வாக்கானவர் என்பதால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மடத்தில் இந்த திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்த சாஸ்திரிகளிடம் கேட்டால், மணப்பெண் ஸ்ரீஜா சிரஞ்சீவியின் மகள் என்பது தெரியாது. இது கலப்பு திருமணம் என்பதும் எனக்கு தெரியாது என்று கூறுகிறார் அப்பாவியாக.

அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் சிரஞ்சீவி. இன்னும் இரண்டொரு நாட்களில் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினரும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் கூறியிருக்கிறார்.

:wub::unsure:

சூப்பர்ஸ்டாரின்ட மகள் என்றா ஓட கூடாதோ பிச்சுபிடுவேன் பிச்சு நல்லா :) ஒடலாம் அது சரி பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி என்ன சொல்ல போறார் :) !!எதற்கு எல்லாம் பத்திரிகை மாநாட்டை கூட்டுறது என்று விவஸ்தையே இல்லையா :unsure: !!எங்க டங்கு மாமா இதை பற்றி வந்து கேளுங்கோ!! :wub:

அப்ப நான் வரட்டா!!

வீட்டை விட்டு துணிகரமாக ஓடிப்போன காதல் ஜோடிக்கு யாழ் காதல் வளர்ப்பு சங்கம் தனது பாராட்டுக்களையும், இனிய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது. இப்படியே இருவரும் ஓடி வந்த ஓட்டதில் சிறிது நேரம் மகிழ்ந்துவிட்டு மீண்டும் விரைவில் ஒருவரை விட்டு ஒருவர் ஓடாமல், இருவரும் ஆயுள் பூராக அன்புடன் இனிய இல்லற வாழ்க்கையை நடாத்தி காதலிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எமது சங்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.

நன்றி!

தலைவர்,

யாழ் காதல் வளர்ப்பு சங்கம்

சிரஜீவி சினிமாவில் காதலை சேர்த்துவைப்பதாகத்தான் பெரும்பாலும் நடிகின்றார் ஆனல் நிஜவாழ்கையில் வில்லனாக இருகின்றாரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிர்ச்சி அடைய இது என்ன ஒரு பெரிய விசயமே??

அதிர்ச்சியடையாமல் என்ன தான் செய்கிறது.

ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி மகளே என்றது சரியாத்தான் இருக்கு!


சூப்பர்ஸ்டாரின்ட மகள் என்றா ஓட கூடாதோ

சுப்பர் ஸ்ராரின் மகளெண்டா ஓடிப் போகக்கூடாதா? எண்டத வாசிச்சதில உண்மையில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது

மாமன் மகளை ஒருவர் காதலித்தார் ஆனால் பெண் வீட்டில் எதிர்ப்பு

நண்பர்கள் அவருக்கு ஐடியா கொடுத்தார்கள் பெண்ணை தூக்கிக்கொண்டு ஓடிப் போய் கலியாணத்தை செய்யும்படி

அதன்படி ஒருநாள் அவர் மாமன் இல்லாத நேரம் பார்த்து நண்பர்களையும் கூட்டிக்கொண்டு கார் ஒன்றையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பெண்வீட்டுக்கு சென்றார்

நண்பர்கள் காருடன் வீட்டுக்குவெளியே காத்து நிற்க காதலன் வீட்டுக்குள் சென்று காதலியின் தாயார் கத்திக்குளற குளற காதலியை இரண்டு கைகளிலும் அலாக்காக தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றினார்

நண்பர்கள் கேட்டார்கள் ஏன் தூக்கிக்கொண்டு வந்தனி பொம்பிளை மாட்டன் எண்டு அடம்பிடிச்சவவோ

காதலன் சொன்னார் அவ அடம்பிடிக்கேல்ல நீங்கள்தானேடாப்பா சொன்னனீங்கள் தூக்கிக்கொண்டு ஓடிப்போய் கலயாணம் செய்யச்சொல்லி என்றார்

அங்கே ஏற்பட்ட சிரிப்பலை அவர்கள் வீடுபோய் சேரும்வரை நிற்கவில்லை

மெல்லியபெண் என்றதனால் அவர் தப்பித்துக்கொண்டார் குண்டுப்பெண்ணாயிருந்தால் என்ன செய்திருப்பாரோ

காதலிக்கும் ஆண்களே ஒல்லிப்பெண்களைப்பார்த்து காதலிங்கோ இல்லாட்டி தூக்கிக்கொண்டு ஓட 2 பேர கூட்டிக்கொண்டு போகவேண்டி வரும்

Edited by vvsiva

  • தொடங்கியவர்

(சிக்கலில் சிரஞ்சீவி 'புது மருமகன்' )

-------------------------------------------

சிரஞ்சீவியின் 'புது மருமகன்' சிரீஷ் பரத்வாஜ் மீதான பழைய வழக்கை ஹைதராபாத் போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர். இந்த வழக்கின் கீழ் பரத்வாஜைக் கைது செய்யவும் தீவிரமாக அவரைத் தேடி வருகின்றனர்.

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கயுள்ளது. சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா, தனது வீட்டை விட்டு வெளியேறி காதலர் சிரீஷ் பரத்வாஜைக் கல்யாணம் செய்து கொண்டதால் சிரஞ்சீவியின் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

ஸ்ரீஜாவை சிரஞ்சீவி குடும்பத்தினர் தேடி வருகின்றனர். அதேபோல, ஸ்ரீஜாவின் கணவரான பரத்வாஜை போலீஸார் தேடி வருகின்றனர். பரத்வாஜ் சம்பந்தப்பட்ட பழைய வழக்கில் அவரை போலீஸார் தேடி வருகின்றனராம்.

கடந்த 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு பெண்ணைக் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார் பரத்வாஜ். அந்தப் பெண்ணுக்கு அப்போது வயது 16. அப்பெண்ணுடன் பரத்வாஜ் ஒரு லாட்ஜுக்கு அருகில் இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டார்

அந்தப் பெண்ணை பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், பரத்வாஜ் மீது கடத்தல் வழக்கைத் தொடர்ந்தனர். கைது செய்யப்பட்ட பரத்வாஜ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். ஆனால் பரத்வாஜுக்கு எதிராக அந்தப் பெண் சாட்சியம் அளிக்க முன் வராததால் பரத்வாஜ் வழக்கிலிருந்து விடுதலை ஆனார்.

தற்போது இந்த வழக்கை போலீஸார் தோண்டி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது மகளின் காதல் கல்யாணத்தை இதுவரை சிரஞ்சீவி அங்கீகரித்ததாக தெரியவில்லை. எனவே அவரது தூண்டுதலின் பேரில் போலீஸ் தரப்பில் பழைய வழக்கு தோண்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிரஞ்சீவி மகளுடன் காதல் வேண்டாம் என்று தனது மகனுக்கு அறிவுரை கூறியதாகவும், ஆனால் காதலில் உறுதியாக இருந்த தனது மகன் அதை ஏற்கவில்லை என்றும் பரத்வாஜின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 3 மாதங்களுக்கு முன்பே இது எனக்குத் தெரியும். சிரஞ்சீவியின் பின்னணி குறித்து பயந்த நான் எனது மகனிடம் காதலை விட்டு விடுமாறு கூறினேன். ஆனால் அதை எனது மகன் ஏற்கவில்லை.

சிரஞ்சீவியின் ரசிகர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தில் நானும், எனது மனைவியும் உறவினர் வீட்டில் தங்கியுள்ளோம் என்றார் ராமமூர்த்தி.

முன்னதாக போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கேட்டிருந்த ஸ்ரீஜாவும், பரத்வாஜும், அது கிடைக்காமல் போகலாம் என்ற சந்தேகத்தில், ஆந்திராவை விட்டு வெளியேறி தற்போது சென்னைக்குப் பறந்து விட்டதாக கூறப்படுகிறது.

சென்னை போலீஸாரிடம் அவர்கள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு- "உன் மகிழ்ச்சியே முக்கியம், கணவருடன் வீட்டுக்கு வா''தெலுங்குபட உலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது 2-வது மகள் ஸ்ரீஜா. சி.ஏ. படிக்கும் மாணவியான இவர் பி.டெக் மாணவர் ஷிரிஷ் பரத்வாஜை 4 ஆண்டு களாக காதலித்தார். இவர்களது காதலுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்தவாரம் 17-ந்தேதி ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறினார். காதலர் ஷிரிஷ்பரத்வாஜுடன் செகந்திராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் தலைமறை வாகி விட்டார்கள்.மகள் வீட்டைவிட்டு வெளி யேறியதால் சிரஞ்சீவியும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். சிரஞ்சீவி மகள் திடீர் திருமணம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான ரசிகர்களும், நலம் விரும்பிகளும் சிரஞ்சீவி வீட்டின் முன் கூடினார்கள். அவர்களை சிரஞ்சீவி சந்திக்க வில்லை.2 நாளில் தனது முடிவை அறிவிப்பதாக சிரஞ்சீவியின் உறவினர் ஒருவர் தெரி வித்தார். இதற்கிடையே சிரஞ்சீவி மனம் மாற்றம் அடைந்தார். அவர் மகள் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித் துள்ளார்.இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி பத்திரிகை அலு வலகங்களுக்கு `பேக்ஸ்' மூலம் அறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சிரஞ்சீவி கூறியிருப் பதாவது:-கடந்த 2 நாட்களாக என் மகள் வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சி யில் என்னால் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தேன். எனது மகள் ஸ்ரீஜா எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.என் குழந்தைகளின் விருப்பு வெறுப்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பேன். மேஜரான ஸ்ரீஜா எடுத்த இந்த முடிவால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தது உண்மை.இப்போது குடும்பத் தினர் அனைவரும் தெளிவாகி விட்டோம். குடும்பத்தினர் அனைவரும் யோசித்து முடிவு எடுத்து இருக்கிறோம். மகள் சந்தோஷமாக இருப்பது தான் எங்களுக்கு முக்கியம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறோம்.மகள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன். அவர் கள் வீட்டுக்கு வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.மகள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாததால் பத்திரிகைகள் மூலமாக ஸ்ரீஜாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்."ஸ்வீட்டி ஸ்ரீஜா நீ எங்கிருந் தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உன்னோட சந்தோஷம்தான் என்னோட சந்தோஷம். உன் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம்.மகள் ஸ்ரீஜா திருமணத்தால் வேதனை அடைந்த நலம் விரும்பிகள், ரசிகர்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் எல்லோரும் என் மகளை ஆசீர்வதியுங்கள் அதுதான் அவருக்கு நீங்கள் செய்யும் உதவி. ஸ்ரீராம ரட்ஷா(ராமர் காப்பாற்றுவார்).இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.இதற்கிடையே ஸ்ரீஜா- பரத்வாஜ் தம்பதி மைசூரில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஷிரிஷ் நண்பர்களிடமும், பெற்றோர்களிடமும் இதுபற்றி கேட்டபோது தங்களுக்கு ஷிரிஷ் எங்கிருக்கிறான் என்று தெரியாது, செல் போனும் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.முக்கிய அறிவிப்பு: இந்த ஜோடி இன்னும் பயந்துகொண்டு இருந்தால் எமது சிட்னி யாழ் நன்பர்கள் அமைப்பை தொடர்புகொண்டால் தகுந்த பாதுகாப்பு வழங்க உடணடியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று சொல்லிகொள்ள விரும்புகின்றோம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி யாழ் நன்பர்கள் அமைப்பு எங்க இருக்கு?கனடாவிலா?....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.